Tuesday, May 22, 2018

xxxxx-படித்ததில் பிடித்தது- ---

படித்ததில் பிடித்தது
 Pen =Power Enriched in Nib.,
 Smile =Sweet Memories in Lips Expression
Bye =Be with you Everytime....
இளநீர்
தன் தலையை  சீவியவனுக்குகே
தண்ணீர் கொடுத்தது 
///////////
என் இதயம் கூட ஒரு வகையில் பூமிதான் !
எப்போதும் உன்னையும், உன் நினைவுகளையும்
சுற்றிக்கொண்டே இருப்பதால் 
///////////////
வட்டிக்கு வைத்த நகையைக்கூட 
திருப்பி விடலாம்
 உன் மீது வைத்த 
கண்களைத்தான் 
திருப்பவே 
முடிவதில்லை  
/////////////////
பாவாடை தாவணியில நீ அழகுதான்
அதைவிட அழகு அடிக்கடி அதை
சரிசெய்து கொள்ளும் அழகு...
///////////////////
    உன் ஈர உதட்டால் 
முத்தமும் கொடுத்து 
உன் மூச்சுக் காற்றால் 
உயிரும் தருகிறாயே    
 ஒரு ரூபாய் பலூனுக்கு
 இப்படி யொரு வாழ்வா
வாய்ப்புக்கள் விலகும்போது கவலைபடாதே.
எல்லாம் நன்மைக்கே என்று எண்ணி
 தொடர்ந்து முயற்சி செய்தால் 
மிகபெரும் வெற்றி உனக்காக காத்திருக்கும்...! 
//////////
  உன் பாதங்கள் சாலையில்
 பட வேண்டியவை அல்ல.
....சரித்திரத்தில் பதிக்கப்பட
வேண்டியவை  
/////////////
தாஜ்மகால் கட்டுவதற்கு
 விரும்பவில்லை 
உன்னைக் கட்டத்தான்
 விரும்புகிறேன்...
///////////////
யாரைப் பார்த்தாலும்
 உன்னைப் போல் தோன்றுகிறது
 உன்னைப் பார்த்தால் 
யாரையும் போல் 
தோன்றவில்லையே.......
////////////
பெண்ணே நீ அருவியில் குளிக்கிறாயா ? 
 இல்லை
 உன்னைப் பார்க்க அருவி 
 குதிக்கிறதா.....
//////////
விடியும்வரை
உன்
கனவு..
உயிர்
மடியும்வரை
உன்
நினைவு!
 

/////////////////////
ஒற்றை நிமிஷம்
உன்னை பிரிந்தால்
உயிரும் அற்று போகும்
பாதி நிமிஷம்
வாழ்ந்தால் கூட
கோடி வருஷமாகும

/////////
மலரால் எழுதினால் 
மாலையில் வாடிவிடும்...
ஆகவே மனதால் வாழ்த்துகிறேன்...
பிறந்தநாள் வாழ்த்துகள்

/////////////
காதல் தோல்வி. .!!!
கன்னத்தில் தாடி. .!!
எண்ணத்தில் அந்த லேடி. .!!
ஏங்குது இந்த பாடி. .!!!
அதனால் தான் வந்தேன் டாஸ்மார்க்கை தேடி. .
..

**********
உன் கண்ணக்குழி அழகில் 
சொக்கிப் போனேனடி!!!
உன் கழுத்தில் தாலியைக் கண்டு
செத்தே போனேனடி!!!
 
//////////////
மலேசியா விமானம்போல் 
கானாமல் போய்விடுகிறாய்
சென்னை விமான நிலையம்போல் 
தினமும் நொருங்குதடி என் இதயம்
/////////////////
மலேசிய‬ விமானம் போல் தவிக்கவிட்டு
 எங்கோ ‪‎சென்றுவிட்டாள்‬,
‪‎சென்னை‬ விமான நிலையம் போல்
 தினம் தினம் 
உடைந்துகொண்டு இருக்கிறேன்‬.
///////////////////////////////
உயிர் இருக்கும் வரை உன்னோடு
 இருக்க வேண்டும் 
என்பது என் ஆசை இல்லை 
உன்னோடு இருக்கும் வரை 
உயிர் இருந்தால் போதும்
 /////////////////////////////
 Femaleல்‬ Male இருக்கு
Womanல் Man இருக்கு
Sheல் He இருக்கு
அடடா....
‪‎Mrsல்‬ Mr -ம் இருக்கார்
‪‎ஆணும்_பெண்ணும்_சேர்ந்ததே‬ வாழ்க்கை‬

₹₹₹₹₹₹
 யானைக்கு தன் பலம் 
தெரியாவரை..
 பாகன்களுக்குக் 
கொண்டாட்டம்தான்
 ////////////////
 இராமனின் கால் பட்டு
 கல் பெண்ணானதாம்...
பெண்ணே உன் கண்பட்டு 
நான் கல்லானேன்..
₹₹₹₹₹
 புத்தகம் வாங்கியதும் மூலையில்
 போட்டுவிடாதீர்கள்,
 மூளையில் போடுங்கள்!
/////////////
 ஆசையில்லாத
 முயற்சியால் பயனில்லை.
 முயற்சியில்லாத
ஆசையால் பயனில்லை.
/////////////// 
உழுகிற நாளில் ஊருக்குப் போனால்
அறுக்கிற நாளில் ஆள் தேவையில்லை.
ஏருழுகிறவன் இளப்பமானால்
 எருது மச்சான் முறை கொண்டாடும்.
//////////////////
எந்த ஒரு காயத்திற்கும்
நண்பன் மருந்தாவான். ஆனால்
 நண்பன் ஏற்படுத்தும் காயத்திற்கு
 மருந்தே இல்லை.
////////////////
நீ தோல்வியை காதலித்துப்பார்
வெற்றி உன்னை காதலிக்கும்
////////////////
 வெட்டாதீர்கள்
மழை தருவேன் "மரம்"
வெட்டுங்கள்
மழைநீரை சேமிப்பேன் "குளம்‬"
 /////////////////////////
 தேதியை கிழிப்பது ..
பெரிய வேலை இல்லை...!!!
கிழித்த தேதியில் 
என்ன கிழித்தாய் -என்று 
கேட்டுவிட்டு கிழி...!!!!
%%%%%%%%%%%%%%
ஒரு நொடி துணிந்தால் !!!
இறந்து விடலாம் !!
ஒவொரு நொடியும் துணிந்தால்!!
ஜெயித்துவிடலாம் !!
$$$$$$$$$
மிகவும் நேர்மையானவராய்
 இருக்காதீர்கள் ,
நேரான மூங்கில்களே முதலில் 
வெட்டப்படுகின்றன -
வளைந்து கொடுங்கள் 
 வாழ்க்கை சிறக்கும் .
++++++++
தடம் பார்த்து நடப்பவன்
 மனிதன் 
தடம் பதித்து நடப்பவன் 
மாமனிதன் 
+++++++++++. 
கடிகாரத்தை பார் !!!
ஓடுவது வினாடியல்ல 
உனது வாழ்க்கை என்பது புரியும் .
++++++++
உனக்காக எதையும்
 இழப்பவர் களை விட
எதற்க்காகவும் உன்னை 
இழக்காதவர்களை நேசி 
வாழ்வும் அர்த்தப்படும் .
////////////////////
இறப்பின் பின்னது ஏதெனக் கேட்டேன் 
இறந்து பாரேன இறைவன் பணித்தான் !
'அனுபவித்துதான் அறிவது வாழ்க்கையெனில் 
ஆண்டவனே நீ எதற்கு என கேட்டேன் !
ஆண்டவன் சற்றே அருகில் நெருங்கி 
அனுபவம் என்பதே நான் தான் என்றான் !
********************************

இதயம துடிக்கும் போது
யாரும் கவனிக்கமாட்டார்கள் !"
"துடிப்பது நின்றபின்
எல்லோரும் துடிப்பார்கள் !!"
இதுதான் மனித வாழ்க்கையோ ?

   ₹₹₹₹₹₹₹
நீ ...
என் கண்களுக்கு எட்டாவது அதிசயம் ........
 நீ --
 என் காதுகளுக்கு
 எட்டாவது ஸ்வரம்...
நீ --
என் காலங்களுக்கு 
எட்டாவது கிழமை ..
      அனால்....
               உன் இதயமோ
                      எட்டாத் தூரம் ....
₹₹₹₹₹₹
னக்கு தோற்க பிடிக்கும்
     ஜெயிப்பது நீ என்றால் ...
எனக்கு அழுகவும் பிடிக்கும் 
      சிரிப்பது நீ என்றால் ...
எனக்கு நஷ்டப்பட பிடிக்கும் 
      லாபப்படுவது நீ என்றால் ...
எனக்கு வாழப் பிடிக்கும் ...
       வாழ்வது உன்னோடு மட்டும் என்றால் !!!!!
/////////////////////////
 பழகிப் பார் பாசம் தெரியும்
மோதிப் பார் வீரம் புரியும்
//////////////////////////
 நாம் வாழப் பொருள் வேண்டும்.
நாம் வாழ்வதிலும் பொருள் வேண்டும்.
      //////////////////////
      மூட நம்பிக்கையாளர்கள்
 இவர்கள் பள்ளி சொல்லாத
பலனை
பல்லி சொல்லும் என்று
நம்புவார்கள்.
இவர்கள் புறப்படும் திசையை
பூனைகள் தீர்மானிக்கும்
இவர்களின் கை விரல்கள்
செய்யாத சாதனையை
கல் வைத்த மோதிரம் சாதிக்கும்
இவர்களின் சாலைகள்
முழுவதும் சகுனத்தடைகள்...
அதனால் பாதையில் பாதி
வேகத்தடைகள்
                                               
 பனைமரம் பேசுகிறேன் ...
--------------------------
நான்-
உயரத்தால் மட்டுமல்ல;
உள்ளத்தாலும்
உயர்ந்தவன்!

வெறுப்பு தரும்
கருப்புதான்
என் நிறம்!
இனிப்பு தரும்
கருப்புக்கட்டி
என் மனம்!
இல்லையென
சொல்லாதவன்!
என்னையே தருபவன்!!
நுங்கு தருவேன்!
கிழங்கு தருவேன்!!
சுத்தமான
கள் தருவேன்!
சுவையான
பதநீர் தருவேன்!
கற்கண்டு தருவேன்!
தமிழ் சொற்கொண்டு
எழுத-
ஓலைச்சுவடியும்
தருவேன்!
படுக்க பாய் தருவேன்!
விசிறியும் தருவேன்!!
நார் கயிறு தருவேன்!
உயிரும் தருவேன்!!
விழுந்தால்
உங்கள்-
வீட்டுக்கு விட்டமாவேன்!
வெட்டினாலும்
சட்டமாவேன்!
நண்பர்களே!
உடல் தானம்
பேசுகின்றீர்
இன்று!
அன்றுதொட்டு
நான்-
அதைத்தானே
செய்கிறேன்
இங்கு!
தொன்றுதொட்டு
தொண்டுசெய்யும்
எனக்கு-
நிமிர்ந்து வளர
நீர்தான்
வார்த்தீரா?
நிலத்தை உழுது
நலம்பட
காத்தீரா?
இல்லையே!
இருந்தும்
உமக்கு-
உதவுகிறேன்
பார்த்தீரா?
நான்-
பிரதிபலன்
பாராதவன்!
பிறரிடம்
எதுவும்
கேளாதவன்!
ஒன்றே-
ஒன்றுமட்டும்
கேட்பேன்...
நீங்கள்-
அள்ளியள்ளி
அளிக்க வேண்டாம்
ஏதும்!
என்னை-
அழிக்காமல் விட்டாலே
போதும்!
^^^^^^^^^^^^
பெண்களால் வஞ்சிக்கப்பட்டவர்கள்
 எல்லோரும் பெண்ணை, "வஞ்சி''என்றழைத்தார்கள்.
 பெண்ணால் மனம் கன்னிப் போனவர்களெல்லாம்,
 "கன்னி"என்றழைத்தார்கள். காதலில் தோல்வியுற்று, 
கன்னியாகுமரிக் கடலில் விழுந்துசெத்தவர் களெல்லாம், "குமரி" என்றழைத்தார்கள். 
மது அருந்திய பின், மனது'கால்' வாங்கியதால், 
"மாது" என்றழைத் தார்கள். உள்ளதெல்லாம்
 அவள் மூலம்இழப்பதனால் 
அவள் "இல்லாள்" என்றழைக்கப்பட்டாள்!..
 நிலத்தில் விதையை விதை
மற்றவர் மனதில்
நல் எண்ணத்தை விதை..
வாழ்வாய்..நிலையாக..!!!
ஒருவர் திறமையை ஒருவர் ஊக்குவித்து
ஒருவர் கவலையில் ஒருவர் பங்குகொண்டு
ஒருவர் குறையை ஒருவர் பொறுத்து
ஒருவர் துன்பத்தில் ஒருவர் ஆறுதல் அளித்து
ஒருவர் முயற்சியில் ஒருவர் ஒத்துழைத்து
ஒருவர் கோபத்தில் ஒருவர் அமைதி காத்து
ஒருவர் சுதந்திரத்தை ஒருவர் அங்கிகரித்து
வாழ்வதே.,!
இல்லறம் இனிக்கச் சிறக்க சிறந்த வழி!
₹₹₹₹₹₹₹
அடி கோவில் எதற்கு? 
தெய்வங்கள்எதற்கு?
உனது புன்னகை போதுமடி

வானத்து நிலவு சின்னதடி
மேகத்தில் மறைந்தே பார்க்குதடி
உன்னிடம் வெளிச்சம் கேட்குதடி

 ₹₹₹₹
மூச்சே உயிருக்கு ஆதாரம்.
அழகு இயற்கைக்கு ஆதாரம்.
பயிரே உணவுக்கு ஆதாரம்.
பயிர் இல்லையேல்
உயிருக்கு ஆகும் சேதாரம்.
 தமிழகத்துக்கு சோதனைக் காலம்!
=======
*சாவியை நான் தொலைத்துவிட்டு, 
தண்டனையை பூட்டுக்குக் கொடுத்தேன்

*வாசிக்காமல் வைத்திருப்பது, 
ஒரு புத்தகத்துக்குச் செய்யப்படும்
 மிகப் பெரிய வன்முறை!!

*எல்லாரையும் நம்புங்க, துரோகம் பழகிடும்.

யாரையுமே கண்டுக்காதீங்க, 

தன்னம்பிக்கை தானா வந்துடும் !!

*விசா இல்லாம வியட்நாம் வரைக்கும்
 கூடப் போயிடலாம்.
ஆனா , வேலை இல்லாம சொந்தக்காரன் 

வூட்டுக்கு மட்டும் போக முடியாது !!!!

*உயர உயரத்தான் 
நமக்கு மேல் எத்தனை பேர் உள்ளனர் என்று புரிகிறது!!

*பொருத்தமில்லாத ஜோடிகள் 
செருப்பாகக்கூட இருக்க முடியாது !!

*ஒவ்வொரு கைபேசியிலும் இருக்கின்றன,
 தொடர்புகொள்ள முடியாத ,
ஆனாலும் அழித்துவிட மனமில்லாத எண்கள்!

*நேற்று வைத்த வாட்டர் பாட்டிலில் இருக்கும்
 தண்ணீர் மீது வரும் சந்தேகம், 
ஒரு வாரமாயிருக்கும் வாட்டர் கேன் 
தண்ணீர் மீது வருவது இல்லை!!
சதுரங்கத்தில் கூட ‘மந்திரிகள்’
 நேர் வழியில் பயணிப்பதில்லை!!

*‘சரியாக் கேட்க மாட்டேங்குது, 
அப்புறமாப் பேசுறேன்’ என்பது மட்டும் 
சரியாக் கேட்டுவிடுகிறது!

*சிறு வயதில் ஆம்லெட் ஆக முடியாமல் 
தப்பித்த முட்டைகள்தான் 
வளர்ந்தவுடன் தந்தூரி சிக்கன் ஆகிறது!

*ஆடுகள் ஆடுகின்றன! 
கோழிகள் குதிக்கின்றன! 
பல வீட்டின் குழம்புச
 சட்டியில் இன்று!!
/////////////////////
தன்னை அறிந்தவன்
ஆசை பட மாட்டான்
உலகை அறிந்தவன்
கோவ பட மாட்டான்
இந்த இரண்டையும்

உணர்ந்தவன்
துன்ப பட மாட்டான்

-பகவத் கீதை



🚩🚩யார் என்ன சொன்னாலும்
உன் கொள்கையை மாற்றி கொள்ளாதே
ஒரு சமயம் நீ மாற்றினால்
ஒவ்வொரு முறையும்

 நீ மாற வேண்டிஇருக்கும்
-கண்ணதாசன்

🚩🚩வாழ்கையில் வெற்றி
 பெற வேண்டுமானால்
நல்ல நண்பர்கள் தேவை
வாழ்நாள் முழுவதும்
வெற்றி பெற வேண்டுமானால்
ஒரு எதிரியாவது தேவை
- A .P . J . அப்துல்கலாம்

🚩🚩ஜெயிப்பது எப்படி என்று யோசிப்பதை விட
தோற்பது எப்படி என்று யோசித்து பார்
நீ
ஜெயித்து விடுவாய்
-ஹிட்லர்

🚩🚩அவமானங்களை 
சேகரித்து வை
வெற்றி உன்னை தேடி வரும்
-A .R . ரகுமான்

🚩🚩தோல்வி உன்னை துரத்துகிறது என்றால்
வெற்றியை நீ நெருங்குகிறாய் என்று அர்த்தம்
-நெப்போலியன்

🚩🚩கோவம் என்பது
பிறர் செய்யும் தவறுக்கு
உனக்கு நீயே
கொடுத்து கொள்ளும் தண்டனை
-புத்தர்

🚩🚩விதைத்தவன் உறங்கினாலும்
விதைகள்
உறங்குவது இல்லை.
-காரல் மாக்ஸ்

🚩🚩வெற்றி இல்லாத வாழ்கை இல்லை
வெற்றி மட்டுமே வாழ்கை இல்லை
-பில்கேட்ஸ்

🚩🚩வெற்றிகளை சந்த்தித்தவன் இதயம்
பூவை போல் மென்மையானது
தோல்வி மட்டுமே சந்த்தித்தவன் இதயம்
இரும்பை விட வலிமையானது
-விவேகானந்தர்

🚩🚩நீ பட்ட துன்பத்தை விட
அதில் நீ பெற்ற அனுபவமே

 சிறந்தது
-விவேகானந்தர்

🚩🚩தோல்விக்கு இரண்டு காரணம்
ஓன்று
யோசிக்காமல் செய்வது
இரண்டு
யோசித்த பின்னும்

செய்யாமல் இருப்பது
-ஸ்ரீ கிருஷ்ணர்

🚩🚩பெண்கள் இல்லை என்றால்
ஆண்களுக்கு ஆறுதல் சொல்ல ஆள் இல்லை
பெண்களே இல்லை என்றால்
ஆறுதலே தேவை இல்லை
-சார்லி சாப்பிளின்

🚩🚩உன்னை குறை கூறும் பலருக்கு
உத்தமனாக வாழ்வதைவிட
உன்னை நம்பும் சிலருக்கு
நல்லவனாய் இரு
-பெயர் தெரியாத பெரியவன்

🚩🚩வெற்றியை விட தோல்விக்கு பலம் அதிகம்
வெற்றி
சிரித்து மகிழ வைக்கும்
தோல்வி
சிந்தித்து வாழ வைக்கும்
-பெயர் தெரியாத பெரியவன்

🚩🚩சிரிப்பவர்கள் எல்லோரும்
கவலை இன்றி வாழ்பவர்கள் இல்லை
கவலையை மறக்க
கற்று கொண்டவர்கள்
-பெயர் தெரியாத பெரியவன்

🌹🌹பூக்களாக இருக்காதே
உதிர்ந்து விடுவாய்
செடிகளாக இரு
அப்போதுதான்

பூத்து கொண்டே இருப்பாய்
-விவேகானந்தர்
💚💚எல்லோருக்கும் அன்பை கொடுத்து
ஏமாந்து விடாதே
யாரிடமும் அன்பை பெற்று
ஏமாற்றி விடாதே
-விவேகானந்தர்

//////////
 நம் உடலுக்கும் கால 
அட்டவணை உண்டு!
 விடியற்காலை 3 முதல் 5 மணி வரை - நுரையீரல் நேரம். இந்த நேரத்தில் தியானம், மூச்சுப் பயிற்சி செய்தால் ஆயுள் நீடிக்கும். காலை 5 முதல் 7 வரை பெருங்குடல் நேரம். இந்த நேரத்தில் காலைக்கடன்களை முடிக்க வேண்டும். இதனால் மலச்சிக்கலே ஏற்படாது. காலை 7 முதல் 9 வரை வயிற்றின் நேரம். இந்த நேரத்தில் சாப்பிடுவது நன்கு ஜீரணமாகும். காலை 9 முதல் 11 வரை மண்ணீரல் நேரம். வயிற்றில் விழும் உணவைச் செரிக்கச் செய்யும் நேரம். இந்த நேரத்தில் எதையும் சாப்பிடக் கூடாது. தண்ணீர் கூடக் குடிக்கக் கூடாது. காலை 11 முதல் 1 வரை இதயத்தின் நேரம். இதய நோயாளிகள் கவனமாக இருக்க வேண்டிய நேரம்.சத்தமாகப் பேசுதல், படபடத்தல், கோபப்படுதலை அறவே தவிர்க்க வேண்டும். பிற்பகல் 1 முதல் 3 வரை சிறுகுடல் நேரம். மிதமான சிற்றுண்டியுடன் ஓய்வு

எடுக்க வேண்டும். பிற்பகல் 3 முதல் 5 வரை சிறுநீர்ப் பையின் நேரம். நீர்க்கழிவுகளை வெளியேற்றச் சிறந்த நேரம். மாலை 5 முதல் 7 வரை சிறுநீரகங்களின் நேரம். தியானம், இறைவழிபாடு செய்வதற்கு ஏற்றது. இரவு 7 முதல் 9 வரை பெரிகார்டியத்தின் நேரம். பெரிகார்டியன் என்பது இதயத்தைச் சுற்றி இருக்கும் ஒரு ஜவ்வு. இரவு உணவுக்கேற்ற நேரம். இரவு 9 முதல் 11 வரை - உச்சந்தலை முதல் அடிவயிறு வரை உள்ள மூன்று பாதைகள் இணையும் நேரம். அமைதியாக உறங்கலாம். இரவு 11 முதல் 1 வரை - பித்தப்பை நேரம். அவசியம் உறங்க வேண்டும். இரவு 1 முதல் 3 வரை - கல்லீரல் நேரம். ரத்தத்தை கல்லீரல் சுத்தப்படுத்தும் நேரம். கட்டாயம் தூங்க வேண்டும்.
//////////////
 ஆங்கிலத்தில்  எதிர்மறையாக  பொருள்  தரும் fail,  end,  no  போன்ற  வார்த்தைகளுக்கு  தனது  ஸ்டைலில்  தன்னம்பிக்கையாக  விளக்கம்  தந்தவர்  மறைந்த  மக்கள்  ஜனாதிபதி  அப்துல்  கலாம்.
கற்றுக்கொள்ள  முதல்  வாய்ப்பு...
     FAIL  என்ற  வார்த்தைக்கு  ( First  Attempt  in  Leanning )  'கற்றுக்கொள்வதற்கான  முதல்  வாய்ப்பு'  என  அவர்  விளக்கம்  அளித்துள்ளார்.  முயற்சி  தோற்பதில்லை...
  இதேபோல், END  என்பதற்கு  'Effort  Never  Dies'  என  கலாம்  விளக்கமளித்துள்ளார்.  அதாவது  'முயற்சி  ஒரு  போதும்  தோற்பது  இல்லை'  என்பது  அதன்  பொருளாகும்.
     அடுத்த  வாய்ப்பு...
     NO  என்ற  வார்த்தைக்கு 'Next  Opportunity'  அதாவது  'அடுத்த  வாய்பு'  என  விளக்கம்  அளித்து  வாழ்க்கை  மீதான  நம்பிக்கையை  ஏற்படுத்தியவர்தான்  கலாம்.
//////////////////////////
 தளராத இதயம் உள்ளவனுக்கு,
 இவ்வுலகில் முடியாதது என்று எதுவுமே இல்லை
///////////////////
திறமைதான் ஏழையின் மூலதனம்
////////////
 சிக்கனம் என்பது ஒருவன் பணத்தை எவ்வளவு குறைவாகச் செலவு செய்கிறான் என்பதைப் பொறுத்தது அல்ல.
 அதை அவன் எவ்வளவு உபயோகமாகச் செலவிடுகிறான் என்பதைப் பொறுத்தது ஆகும்.
///////////////
 உலகம் ஒரு விசித்திரமான கல்லூரி.
இங்கே பாடம் சொல்லிக்கொடுத்துத் 
தேர்வு வைப்பது இல்லை.
தேர்வு வைத்த பிறகே 
பாடம் கற்பிக்கப்படுகிறது.
//////////////
 அரசியல்வாதிகள்
 உதடுகள்
காந்தி வழியை போதிக்க
உள்ளம் மட்டும்
கோட்சேவாக
//////////////////
 காலம் முழுவதும்
தூக்கு தண்டனை
காலண்டர்..!!
/////////////

No comments:

Post a Comment