Saturday, August 26, 2017

செட்டில்மெண்ட் பத்திரமும்... தானப் பத்திரமும்

செட்டில்மெண்ட் பத்திரமும், தானப் பத்திரமும்
**********************************************************************
செட்டில்மெண்ட் பத்திரத்தை (Settlement Deed) “ஒரு குடும்ப ஏற்பாட்டுப் பத்திரம்” என்கிறார்கள்.
ஒருவர் தனக்குச் சொந்தமான சொத்துக்களை இந்த செட்டில்மெண்ட் பத்திரம் மூலம் தன் குடும்பத்தில் உள்ள தன் உறவுகளுக்கு பிரித்து கொடுக்கும் பத்திரம் இதுவாகும்.

ஒருவருக்குச் சொந்தமான சொத்தை அவர் வாழ்நாளிலேயே, தன் குடும்பத்தில் உள்ள மற்ற உறவினர்களுக்கு கொடுப்பதால் செட்டில்மெண்ட் பத்திரம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.

தன் வாழ்நாளிலேயே, ஒருவர் தன் சொத்துக்களை, தன் உறவுகளுக்கு கொடுக்கும் பத்திரமான இந்த செட்டில்மெண்ட் பத்திரம் எழுதிக் கொடுக்கும்போது, அந்த சொத்தைப் பெறுபவர் “குடும்ப உறவினராக” இருக்க வேண்டும் என இந்திய ஸ்டாம்ப் சட்டம் சொல்கிறது.

குடும்ப உறவினர்கள் என்றால் யார், யார்?
**************************************************************
இந்திய ஸ்டாம்பு சட்டத்தின்படி  தாத்தா, பாட்டி, (தந்தை வழி தாத்தா, பாட்டி, மற்றும் தாய்வழித் தாத்தா, பாட்டி), தந்தை, தாய், கணவன், மனைவி, மகன், மகள், பேரன், பேத்தி, இவர்கள் மட்டும்தான் “குடும்ப உறுப்பினர்கள்” ஆவார்கள்.

பின்னர் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர், இந்த “குடும்ப உறுப்பினர்” என்ற உறவுகளை விசாலப்படுத்தி, “அண்ணன், தம்பி, அக்காள், தங்கை” இவர்களையும் அதில் சேர்த்துக் கொண்டது.

இந்த குடும்ப உறுப்பினர்கள் தவிர வேறு யாருக்கும், ஒருவர் தன் சொத்துக்களை செட்டில்மெண்ட் செய்ய வேண்டும் என்று நினைத்தால், அதை “தானமாகத் தான்” (Gift) கொடுக்க முடியும்.

Gift Deed

மேலே சொன்ன குடும்ப உறுப்பினர் அல்லாத வேறு நபர்களுக்கு, ஒருவர் தன் சொத்துக்களை கொடுக்க நினைத்தால், அதை “தானப்பத்திரம்” என்னும் கிப்ட் பத்திரம் (GiftDeed) மூலமே கொடுக்க வேண்டும்.

இரண்டிற்கும் என்னவித்தியாசம்?
*************************************************
செட்டில்மெண்ட் பத்திரத்துக்கும், தானப் பத்திரத்துக்கும் பெரிய வேறுபாடு ஒன்றும் இல்லை; இரண்டுமே ஒருவகையில் “தானம்” தான்.

மேற்சொன்ன குடும்ப உறவினர்களுக்குள் கொடுத்தால் அது செட்டில்மெண்ட் பத்திரம். அதையே வெளி நபர்களுக்குக் கொடுத்தால் தானப் பத்திரம் அவ்வளவுதான்.

ஆனால், இவ்வாறு கொடுக்கும் பத்திரத்துக்கு அரசுக்கு செலுத்தும் ஸ்டாம்ப் கட்டணத்தில்தான் வேறுபாடு; குடும்ப உறுப்பினர்களுக்கு கொடுக்கும் செட்டில்மெண்ட் பத்திரத்துக்கு, அந்த சொத்தின் மதிப்புக்கு 1% ஸ்டாம்பு கட்டணம் அல்லது அதிகபட்சமாக ரூ.25,000/- மட்டுமே.

அதாவது ரூ.25 லட்சம் வரை மதிப்புக்கு உட்பட்ட சொத்துக்களுக்கு 1% கட்டணம்: அதற்கு மேல் எவ்வளவு மதிப்புள்ள சொத்தாக இருந்தாலும் ரூ.25,000 கட்டணம் மட்டுமே.

ஆனால் குடும்ப உறுப்பினர் அல்லாதவர்களுக்கு கொடுக்கும் தானப் பத்திரத்துக்கு, அந்த சொத்தின் மதிப்புக்கு 7% ஸ்டாம்பு கட்டணம் செலுத்த வேண்டும்.

Monday, August 21, 2017

ஈரோடு ....வரலாறு

 ஈரோடு மாநகரம் என்ற  அமைப்பு

இங்கு ஒரு மண் கோட்டை இருந்தது.

கோட்டை யில் சிறிய படை இருந்தது. தளவாய் கந்தாசாரம், சேனபாகம், சேர்வைக்காரர், அட்டவணை, என்கிற அதிகாரிகள் இங்கு வசித்துவந்தனர்.

இங்கு 2ஆயிரம் வீடுகள் இருந்தன.

அப்போது மதுரை நாயக்கர், மைசூர் உடையார், ஐதர்அலி, திப்பு சுல்தான் ஆகியோர் மேற்கொண்ட போர்களில்
ஈரோடு கோட்டை முக்கிய இடம் பெற்றது, இந்த போர்களால், ஈரோடு கோட்டை பெரிய அழிவை சந்தித்தது.

அந்த காலகட்டத்தை குறித்து பதிவு செய்து இருக்கும் ஸ்வார்ட்ஸ் பாதிரியார்,

2ஆயிரம் வீடுகள் இருந்த இடத்தில் 400 வீடுகள் மட்டுமே எஞ்சியது என்று குறிப்பிட்டுள்ளார்.

1871 ம் ஆண்டில் செப்டம்பர் மாதம் 16ம் தேதி
ஈரோடு நகர பரிபாலனை சபை உருவாக்க பட்டது.

முதல் தலைவராக  A. M மெக்ரீகர் என்ற ஆங்கிலேயர் பதவி ஏற்றார்.

அவருடன் 7 நியமன உறுப்பினர்களும் பதவி ஏற்றனர்.
இந்த நாள் தான்  ஈரோடு நகர வளர்ச்சிக்கு தொடக்க நாளாக அமைந்தது.

இந்த நிலையில் வரலாறு காணாத அளவுக்கு கடும் பஞ்சம் மக்களை வாட்டியது. (1878)ம் ஆண்டு இந்த பஞ்சத்தால் வறட்சி நிவாரண பணியாக கோட்டை இடிக்கப்பட்டது.

கோட்டையை ஒட்டி இருந்த அகழி முழுமையாக மூடப்பட்டது.

அப்படி மூடப்பட்ட அகழிதான் இப்போது அகில்மேடு வீதி என அழைக்கப்படுகிறது.

ஈரோட்டின் தல புராணம் ?

பெரும்பள்ளம் ஓடை, பிச்சைக்காரன் பள்ளம் ஓடை என்ற 2"ஓடைகளின் நடுவில் அமைந்துள்ள ஊர் என்பதால் ஈரோடை என்பது மருவி ஈரோடு ஆகியது என்றும் கூறப்படுகிறது.

மறந்தை, உறந்தை, மயிலை, கபாலபுரி, என்ற பெயர்களால் அழைக்கப்பட்டு வந்ததாகவும் தெரிகிறது.

சோழர் காலத்து கல்வெட்டு ஒன்று," ஈரோடான மூவேந்த சோழச் சதுர்வேதி மங்கலம் "என்று கூறுகிறது.

ஈரோட்டில் 3 சிவன் கோவில்கள், 3 பெருமாள் கோவில்கள், 3 அம்மன் கோவில்கள், 3 மாரியம்மன் கோவில்கள், அமைந்துள்ளது.

இவற்றில் கொங்கு நாட்டின் முதல் கோவிலான பள்ளி கொண்ட பெருமாள் கோவில்.
கி. பி. 907ம் ஆண்டு சோழர் கட்டியதாகும்.
கி. பி 932-ம்  ஆண்டு கொங்கு சோழன் மகிமாலய இருக்குவேள் ஆன வீர சோழன், மகிமாலீஸ்வரர் கோவில் கட்டினார்.
காவிரி கரையில் கரிகாலன் கட்டிய கரிகால சோழீஸ்வரர் கோவிலும் உள்ளன.

கொங்கு நாட்டை வெற்றி பெற்ற பிற நாட்டு அரசர்கள், ஈரோடு கோட்டை பெருமாள் கோவிலில் வந்து அரசராக முடிசூட்டிக்கொள்வது வழக்கமாக இருந்தது.

எனவே இந்த கோவில் "ராஜ்ய அபிஷேக விண்ணகரம் என்று அழைக்கப்பட்டு வந்தது
🌹
நன்றி
கல்வெட்டு அறிஞர்.
புலவர் செ. ராசு அவர்கள்
🌹

Sunday, August 20, 2017

ஹாம் ரேடியோ

ஹாம் ரேடியோ

‘ஹெல்ப் ஆல் மேன்கைண்டு’ (Help All Mankind - HAM) என்பதன் சுருக்கம் தான், ‘ஹாம்’.

போலீசார் பயன்படுத்தும் ‘வாக்கி டாக்கி’ போன்றவையும் ‘ஹாம் ரேடியோ’க்கள் தான்.

இதில், ஒரு நேரத்தில், ஒருவர் பேச, உபயோகத்தில் உள்ள அனைவரும் கேட்க முடியும். இதன் ஒலிபரப்பு, தூர, எல்லைகளைக் கடந்தது. இதற்காக, பேசும் கருவி, ஆன்டனா உள்ளிட்ட கருவிகளை வாங்கிக் கொள்ள வேண்டும்.

உலகில் உள்ள அனைத்து ‘ஹாம் ரேடியோ’ உபயோகிப்பாளர்களையும் இணைத்து, தொடர்பு கொள்ளும் வசதி இருப்பதால், இக்கருவியை வாங்கவும், பயன்படுத்தவும் சில கட்டுப்பாடுகளை, அரசு விதித்திருக்கிறது. அதற்கான தேர்வெழுதி வெல்வோர், கருவியை வாங்கவும், அவர்களுக்கான, அடையாள எண், உரிமத்தை பெறவும் முடியும்.

தேர்வு குறித்த விளக்கங்களை, மூத்த அமெச்சூர் வானொலி பயனாளர்கள் இலவசமாக வழங்குகின்றனர்.

பயன்கள்:

வானொலியைப் போலவே, அனைத்து இடங்களுக்கும், இதை எளிதாக எடுத்து செல்ல முடியும். இதனை இயக்க, குறைந்த அளவு மின்சாரம் போதும். அதிக நாட்கள் பயனளிக்கும். எத்தனை மணி நேரம் பேசினாலும், கட்டணம் கிடையாது. ஒருமுறை கருவிகளை வாங்கும் செலவு மட்டும் தான்.

பூகம்பம், மண்சரிவு, புயல், வெள்ளம், தீ, சுனாமி போன்ற பேரிடர் காலங்களில், அனைவரையும் தொடர்பு கொள்ள சிறந்த சாதனம் இது தான்.

சர்வதேச அளவில், உடனடியான உதவிகளை பெறவும், அளிக்கவும் இது உதவும்.

கடந்த காலங்களில், குஜராத் பூகம்பம், சுனாமி உள்ளிட்ட பேரிடர் காலங்களில், அமெச்சூர் வானொலி உபயோகிப்பாளர்கள், தகவல் தொடர்பிலும், மீட்பு பணியிலும் பெரும்பங்காற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.

உரிமம் பெறும் நடைமுறை:

இந்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் ஒலிபரப்பு துறையின் கீழ் இயங்கும், ‘ஒயர்லெஸ் மானிட்டரிங் ஸ்டேஷன்’, ‘ஹாம் ரேடியோ’ பயன்பாட்டாளருக்கான உரிமம் வழங்கும் தேர்வை நடத்துகிறது.

இந்த தேர்வை எழுத, ஒரே நேரத்தில் 30க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருக்க வேண்டும்.

இணையத்தில், ஆங்கிலத்தில் நடக்கும் இந்த தேர்வை எழுத, ‘மோர்ஸ் கோடு’ எனப்படும், ஒலிபரப்பு அனுப்புதல் மற்றும் பெறுதல் முறைகள், தொடர்பு வழிமுறைகள், அடிப்படை மின்னணுவியல் துறை சார்ந்த அறிவு இருக்க வேண்டும்.

ஒரு நிமிடத்திற்கு, 8 மோர்ஸ் வார்த்தைகளை பதியும் திறமை உள்ளவர்கள், பொது உரிமம் பெற முடியும்.

இத்தேர்வு, கிரேடு 1 மற்றும் கிரேடு 2 ஆகிய நிலைகளில் உள்ளது. தனது நிலைக்கேற்ப, ஒலிபரப்பு துாரமும், தரமும் இருக்கும்.

தேர்வில் வெற்றி பெற்ற பின், ‘கால் சைன்ஸ்’ எனப்படும், உரிம எண் வழங்கப்படும். அந்த எண்ணைக் கொண்டே, உரிமம் பெற்றவரின் இருப்பிடம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும், மற்றவர்கள் தெரிந்துகொள்ள முடியும்.

டபிள்யூ.பி.சி., எனப்படும், ‘தி ஒயர்லெஸ் பிளானிங் அண்டு கம்யூனிகேஷன்ஸ்’ என்ற இணையத்தின் வழியாக, ‘ஹாம் ரேடியோ’ பயன்பாட்டுக்கான தகவல்கள் விண்ணப்பங்கள், புத்தகங்களை பெறலாம்.

தற்காலத்தில், இணையத்தோடு ஹாமை இணைக்கும் மென்பொருட்களும் உள்ளன.
அலைபேசிகளோடு இணைக்கும் செயலிகளும் உள்ளன.

தேர்வு குறித்த தகவல்களை பெற

‘எஸ்.ஆர்.எச்.கியூ., பேசிட் ஆசியா லிட்., அருகில்,
பெருங்குடி, கந்தன்சாவடி, சென்னை – 96’
என்ற முகவரியை, அணுகலாம்.
தொடர்பு எண்: 044-24960275; தொலைநகல்: 044-24963083, 044-2496 0234.

Saturday, August 19, 2017

உயில் என்றால் என்ன?

1.உயில் என்றால் என்ன?

ஒரு சொத்தினை தனது இறப்புக்கு பின்னர் யார் உரிமை கொண்டு அனுபவிக்கலாம் என்று தனது விருப்பத்தை எழுத்து வடிவில் எழுதுவது உயில் சாசனம் ஆகும்.

2.எத்தகைய சொத்துக்களை ஒருவர் உயில் எழுதலாம்?

ஒரு நபர் தான் ,தனது சுய சம்பாத்தியத்தின் மூலம் பெற்று அனுபவித்து வரும் சொத்து,பரம்பரையாக ஒரு கூட்டுக் குடும்பம் அனுபவித்து ஒரு நபர் தனது பெயரில் மட்டும் பாகப்பிரிவினை பெற்று அனுபவித்து வரும் சொத்து, கொடை எனப்படும் தான செட்டில்மென்ட் மூலம் பாத்தியப்படுத்திய சொத்து கொடை பெற்ற நபரின் பாத்தியதை எனப்படும் அனுபவத்தில் இருந்துவர வேண்டும்.இந்த சொத்துக்களை ஒரு நபர் உயில் எழுதலாம்.

3.உயில் எழுத ஆண்,பெண் என்று பாகுபாடு உண்டா?

கண்டிப்பாகக் கிடையாது வயது வந்த தனது பெயரில் பாத்தியதை கொண்ட சொத்தினை ஆண்,பெண் இரு பாலரும் எழுதலாம்.

4.உறவினர்களுக்கு மட்டும் தான் உயில் எழுதி வைக்க முடியுமா?

அப்படிப்பட்ட சட்ட நிபந்தனைகள் ஏதும் கிடையாது ,உறவினர் அல்லது உறவினர் அல்லாத யாருக்கு வேண்டுமானாலும் உயில் எழுதலாம்.

5.கருவில் உருவாகாத குழந்தைகளுக்கு உயில் எழுதலாமா?

எழுதலாம் ஆனால் அது நடை பெறவில்லை என்றால் உயில் செயல் படாது ,வழியுரிமை மூலம் சொத்து தகுந்த வாரிசுகளை சென்றடையும்.

6.உயில் சாசனத்தை கட்டாயம் பதிவு செய்ய வேண்டுமா?

அப்படிப்பட்ட சட்ட நிபந்தனைகள் ஏதும் கிடையாது.பதிவு செய்யலாம் செய்யாமலும் இருக்கலாம்.

7.உயில் சாசனத்தில் கட்டாயம் செய்ய வேண்டியது என்ன?

கண்டிப்பாக இரண்டு சாட்சிகள் வேண்டும்,இவர்கள் முன்னிலையில் தான் உயில் சாசனம் இயற்றுபவர் கையொப்பம் இட வேண்டும்,சாட்சிகளும் உயில் சாசனம் இயற்றுபவர் முன்னிலையில் தான் சாசனத்தில் கையெழுத்திட வேண்டும்.

8.உயில் சாசனம் மூலம் சொத்தை அடைபவர் சாட்சி கையெழுத்து போடலாமா?

கண்டிப்பாகக் கூடாது சட்டம் இதனை அனுமதிக்கவில்லை.

9.உயிலை ரத்து செய்ய முடியுமா?

ஒரு நபர் தனது வாழ் நாளில் தனது சொத்து குறித்து எத்தனை உயில் வேண்டுமானாலும் இயற்றலாம்.கடைசியாக எழுதிய உயில் தான் செல்லும் .ஏற்கனவே எழுதிய உயிலை ரத்தும் செய்யலாம்.

10.உயில் எழுதியவுடன் சொத்தைப் பற்றிய சட்ட விளைவுகள் என்ன?யாரிடம் சொத்து இருக்கும்?

உயில் என்பது எழுதிய நபரின் இறப்புக்குப் பின்னர் தான் சட்ட விளைவை உண்டாக்கும் ,அது வரை அந்த சொத்தின் உரிமை எழுதிய நபரிடம் தான் இருக்கும்.உயிலில் கண்டுள்ள நபர் அந்த சொத்திற்கு உரிமை கோர முடியாது.

11,உயில் எழுதிய பிறகு, அந்த சொத்தினை உயில் எழுதிய நபர் விற்பனை செய்ய முடியுமா?

கண்டிப்பாக முடியும் ,உயில் சாசனம் இயற்றிய நபர் இறக்கும் வரை அவர் தான் அந்த சொத்தின் உரிமையாளர் ,அவர் அதனை எப்படி வேண்டும் என்றாலும் அனுபவிக்கலாம்.உயில் எழுதி விட்டு, அதை அவரே விற்று விட்டால், உயில் மூலம் பயனடைபவருக்கு எவ்வித சொத்தும் கிடைக்காது. உரிமையும் இல்லை.

12.கொடை சாசனத்திற்கும், உயில் சாசனத்திற்கும் என்ன வித்தியாசம் ?

கொடை சாசனம் எழுதியவுடன், அதில் கண்ட கொடை பெறுபவர் அந்த சொத்தின் அனுபவ பாத்தியத்தை பெற்றுக் கொள்ளலாம்,கொடை எழுதிய நபருக்கு அந்த சொத்தில் அதற்கு பின்னர் எந்த உரிமையும் கிடையாது.கொடை பெறுபவர் அந்த சொத்தினை பெற்றுக் கொள்ளவில்லை என்றால் கொடை கொடுத்தவர் அந்த சொத்தின் மீது உரிமை கொண்டிருப்பார்.உயில் என்பது, அதை எழுதியவர் மறைவுக்கு பிறகு, நடைமுறைக்கு வரும்.

13.கொடை சாசனத்தை கட்டாயம் பதிவு செய்ய வேண்டுமா?

100ரூபாய்க்கு மேல் சொத்து மதிப்பு இருந்தால் கட்டாயம் கொடையை பதிவு செய்ய வேண்டும் ஆனால் உயிலை அப்படி கட்டாயம் பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

14.எப்படிப்பட்ட சமூக சூழ்நிலைகளில் உயில் எழுதப்படலாம்?

சட்டத்தில் இப்படிப்பட்ட சமூக சூழ்நிலையில் தான் உயில் எழுதப்பட வேண்டும் என்ற கட்டாயம் எதுவுமில்லை.

பொதுவாக ஒரு நபருக்கு பல குழந்தைகள் இருந்து தனது இறப்பிற்கு பின்னர் யார் யார் எந்தெந்த சொத்துக்களை அடைய வேண்டும் என்று ஒரு முடிவை எடுத்து அதனை உயில் சாசனப் படுத்தினால் வருங்காலத்தில் குழந்தைகளுக்கிடையே சொத்திற்காக சண்டை சச்சரவு தேவையில்லாமல் ஏற்படாது.

15.உயில் எழுதவில்லை என்றால் என்ன நடக்கும்?

ஒரு சொத்துக்குரிய நபர் தனது சொத்துக்களைப் பொறுத்து உயில் சாசனம் ஏதும் எழுதி வைக்கவில்லை என்றால் அவரது இறப்பிற்கு பின்னர் சட்டம் கூறும் வழியுரிமைப்படி சொத்து வாரிசுகளைச் சென்றடையும்.

16.எல்லா மதத்தினரும் உயில் எழுத முடியுமா?

    முடியும்.

17,உயிலை முத்திரைதாளில்தான் எழுத
   வேண்டுமா?

சாதாரண தாளிலும் எழுதலாம். ஆனால், ஒருவர் சாவுக்கு பின்பே, இது நடைமுறைக்கு வருவதாலும், நீதிமன்றத்தில் பின்னாளில் குறியீடு செய்ய தேவைப்படும் என்பதாலும், முத்திரைத்தாளில் எழுதினால் நல்லது. பதிந்தால்,அதை விட நல்லது.

18.சாட்சி யாரை போடலாம் ?

நம்பிக்கையான, இள வயதுள்ளவர்கள் இருப்பது நல்லது. பின்னாளில் நீதிமன்றம், வழக்கு என்று வந்தால், வயதானவர்களை சாட்சி போட்டால், இறந்துவிட்டால், பிரச்சினை வரலாம்.

19.உயிலை probate செய்ய வேண்டுமா ?

தமிழ்நாட்டில் சென்னை தவிர, அனைத்து இடங்களிலும், probate செய்ய தேவை இல்லை.

20.உயிலை நோட்டரி பப்ளிக் முன் எழுதி வைத்து
    கொண்டால் செல்லுமா?

எழுதலாம். ஆனால், பின்பு, அவரையும், பிரச்சினை என்று வந்தால், சாட்சியாக விசாரிக்க வேண்டும், நீதிமன்றத்தில்.

21.உயிலை பத்திர அலுவகத்தில் பதிய என்ன
    நடைமுறை ?

எந்த பத்திர அலுவகத்திலும் பதியலாம்.ஸ்டாம்ப் தேவை இல்லை. சொத்து மதிப்பில் 1 % கட்டணம்.அதிகபட்சம் 5௦௦ ரூ.

22. உயிலை பத்திர அலுவகத்தில் வைத்திருக்க முடியுமா ?

மாவட்ட பதிவாளர் அலுவகத்தில், ஒரு உரையிட்ட கவரில் டெபாசிட் செய்து வைக்கலாம். அப்போது பதிய தேவை இல்லை. உயில் எழுதியவர் இறந்த பிறகு, அங்கீகரிக்கப்பட்ட நபர்கள், அதை திறந்து பார்க்க விண்ணப்பித்து, அதை பதியலாம்.

Courtesy: இணையப்பதிவுகள்

Friday, August 18, 2017

ஆயுதபூஜை வந்தவரலாறு

ஆயுதபூஜை  வந்தவரலாறு

தமிழகம் முழுவதும் ஆயுத பூஜை இன்று கொண்டாப்படும் நிலையில் இந்த விழாவுக்கான பெயர் சூட்டப்பட்டதன் வரலாறு மிகவும் சுவாரஷ்யமானது.

பஞ்ச பாண்டவர்கள் சூதாட்டத்தில் தோற்று வனவாசம் சென்றது நம் அனைவருக்கும் பரிட்சியமே.

நாடு இழந்து, பெருமை இழந்து, வனவாசம் மேற்கொண்ட பாண்டவர்கள் தங்களின் ஆயுதங்களை ஒரு வன்னிமரத்தடியில் மறைத்து வைத்திருந்தனர்.

பின்னர் 14 வருட வனவாசத்திற்கு பிறகு நாடு திரும்பிய பாண்டவர்கள், அதை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு வருடமும் தாங்கள் உபயோகித்த அந்த ஆயுதங்களை எடுத்து வன்னி மரத்தடியில் வைத்து பூஜை செய்தனர்.

அதோடு நவராத்திரியின் ஒன்பது நாட்களும் விரதம் மேற்கொண்டனர். பாண்டவர்கள் ஆயுதங்களை வைத்து வணங்கியதால் இவ்விழாவுக்கு “ஆயுதபூஜை” எனப் பெயர் வந்ததாக கூறப்படுகிறது.

#ஆயுத_பூஜை_எதற்காக_?

ஆயுதம் என்பதன் உண்மையான பயனை உணர்த்தத்தான் ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது எனலாம்.

உயிர்ப்பொருள்கள், உயிரற்றப் பொருட்கள் அனைத்திலும் நீக்கமற இறைபொருள் உறைந்துள்ளது. வாழ்வில் நம் உயர்வுக்கு உதவும் ஆயுதங்களை போற்றும் விதம் அவற்றையும் இறைபொருளாகப் பாவித்து வணங்குவதே ஆயுதபூஜை எனவும் சொல்லலாம்.

ஆயுத பூஜையன்று சிறிய கரண்டி முதல் தொழில் இயந்திரங்கள் வரை எல்லா வகை தொழில் உபகரணங்களையும் கழுவி சுத்தமாகத் துடைத்து தேவையெனில் வண்ணம் தீட்டி, பொட்டு வைத்து பூஜைகள் செய்து அவற்றுக்கு ஓய்வு கொடுப்பதும், பிறகு எடுத்து தொழிலுக்குப் பயன்படுத்துவதும் ஆயுதபூஜையின் சிறப்பம்சமாகும்.

நாம் செய்ய வேண்டியது

ஆயுத பூஜையன்று எல்லா ஆக்கப்பூர்வமான காரியங்களுக்கு மட்டுமே இந்த உபகரணங்கள், ஆயுதங்களை பயன்படுத்துவோம், மற்ற அழிவு செய்கைகளுக்கு பயன்படுத்தமாட்டோம் என்று உறுதி எடுத்துக் கொள்வோம்.

Thursday, August 17, 2017

தாஜ்மஹால்- புதிய தகவல்கள்

 தாஜ்மஹால்- புதிய தகவல்கள்


சுவாமி விவேகானந்தர் 
தாஜ்மகாலைப் பார்த்த போது கூறிய கருத்து

 இங்குள்ள சலவைக் கல்துண்டு ஒன்றைப் பிழிய முடியுமானால் அதிலிருந்துகூட அந்த அரசனின் காதலும் சோகமும் சொட்டும். 
இதன் உள்ளே உள்ள அழகு வேலைப்பாட்டைக் 
கற்க வேண்டுமானால், ஒவ்வொரு சதுர அங்குலத்திற்கும் 
ஆறுமாதமாவது தேவைப்படும்.

உலக வரலாற்றில்
தாஜ்மஹாலைப் போல் 
ஒரு இனிய கல்லறை இன்னும் எத்தனை 
ஜென்மங்களிலும் உதயமாகப் போவதில்லை. 
மும்தாஜ் எனும் அழகிய மனைவியின் மீது ஷாஜகான் 
வைத்திருந்த நேசத்தின் கலை வடிவம் அது.
வாழ்வில் ஒரு முறையாவது காண வேண்டிய 
அந்த கலை மிகு கட்டிடம்

எழுந்த கதை பெருங்கதை.

தட்சிணப் பிரதேசம் பர்ஹான்பூர் என்ற ஊரில்தான் 
முதன் முதலாக மும்தாஜின் உடல் புதைக்கப்பட்டது.

இதற்குப் பின் ஆறு மாதம் கழித்து 
அவரது உடல் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு 
ஆக்ராவில் இப்போது தாஜ்மஹால் உள்ள 
இடத்தில் புதைக்கப்பட்டது.

மும்தாஜ் இறந்து சரியாக ஒரு வருடம் கழித்து 
ஷாஜஹான் களத்தில் இறங்கினார்.

வெனிஸ் நகரத்து வெரோனியா, துருக்கி நாட்டு உஸ்தாக் இசா அபாண்டி, லாகூரைச் சேர்ந்த அகமத் எனப் பலரும் வந்திருந்து ஷாஜகானும், கூட்டுச் சேர்ந்து அமைத்த மொத்த வடிவமே இன்றைய தாஜ்மஹால்.

அடுத்த கட்டமாக கட்டிடக் கலைஞர்கள், சிற்பிகள், கொத்தனார்கள் என இருபதாயிரம் பேர் வேலைக்கு தேர்வு செய்யப்பட்டு 
மள மளவென பணிகளைத் தொடங்கினார் ஷாஜஹான்.

1632- ம் ஆண்டு வேலைத் தொடங்கி 1652 வரை சுமார் 20 ஆண்டு கால உழைப்பின் சின்னம்தான் இந்த தாஜ்மஹால்…. 

அதற்குப் பிறகு கூட ஒரு ஆண்டுக்கு வெளியேயுள்ள 
சுற்றுப் புறத்தில் மிக நுண்ணிய வேலைகள் நடந்தன.

தாஜ்மஹாலைச் சுற்றி 42 மீட்டர் உயரத்திற்கு நிற்கும் 
4 மினார்களும் (தூண்) லேசாக வெளிப்புறம் சாய்த்து வைத்து 
கட்டியிரிக்கிரார்கள். 
காரணம் ஏதேனும் அசம்பாவிதத்தில் அந்த தூண்கள் விழுந்தால் 
கூட தாஜ்மஹால் மீது பட்டுவிடக் கூடாதே என்ற காரணுத்துக்காகத்தான்.

தாஜ்மஹாலின் வெளிப்புறக் கதவுகள், சுவர்களில் பதிக்க இந்தியாவைத் தவிர ரஷியா, திபெத், பாரசீகம் என பல இடங்களில் இருந்தும் வைரம், வைடூரியம், முத்து, பவளம் என பல விதம் விதமாக வரவழைத்து பயன்படுத்தி அழகு பார்த்தார் ஷாஜஹான்.

புனித குரானிலிருந்து குறிப்பிட்ட வாசகங்களை தேர்ந்தெடுத்து அவற்றை கல்லறையைச் சுற்றிலும் உள்ள சுவர்களில் பொறிப்பது என்று முடிவு செய்தார்.

இதற்காக 

உலகிலேயே மிகத் திறமையான பாரசீக கலைஞர் “அமானாத்கான் “ பெயர் சிபாரிசுச் செய்யப் பட்டது.

“ நான் எந்த வேலைச் செய்தாலும் அதில் என் கையெழுத்தைப் போடுவேன் என்று அடம்பிடித்த அவரை “ சரி…கையெழுத்து போட்டுக்கொள்ளுங்கள்”என்று அனுமதிக் கொடுத்து வரவழைத்தார் ஷாஜஹான்.

இன்றைக்கும் அந்தச் சிற்பியின் கையழுத்தைக் காணலாம். 

தாஜ்மகாலில் இவரது கையழுத்தைத் தவிர வேறு எவரின் பெயரும் கிடையாது.
இப்படி அங்குலம் அங்குலமாக பொன் நகையை உருவாக்குவது போல் கட்டினார் ஷாஜஹான்.

தாஜ்மஹால் கட்டி முடிக்கப்பட்டு கொஞ்சம் காலம் முஸ்லீம்கள் மட்டுமே பார்க்க அனுமதிக்கப்பட்டனர். 

பிற்பாடு உலகெங்கிலும் இருந்து பலர் வர வர அந்தத் தடை தானாகவே நீங்கிப் போனது.

இத்தகைய அழகான தாஜ்மகால் அதன்பிறகு வந்த ஆங்கிலேயெர்களின் கண்களை பறிக்காமல் இருக்குமா?

பல ஆங்கில அதிகாரிகள் சுவர்களில் பதிக்கப் பட்ட வைர, வைடூரியங்களை சுரண்டி எடுத்துக் கொண்டு போனார்கள்.
லார்டு வில்லியம் பெண்டிங் என்பவர் இடித்து விடலாம் என்று ஐடியா கொடுத்தார்.
இன்னும் பல ஆங்கிலேய அதிகாரிகள் தாஜ்மகாலை ஒவ்வொரு கல்லாக பெயெர்தெடுத்து, கப்பலில் ஏற்றிக் கொண்டு போய், இங்கிலாந்தில் இறக்கி மீண்டும் செட்டப் செய்து விடலாம் என்று ஆலோசனை வழங்கினார்.
இறைவனின் கருணையால்… இன்றைக்கும் இப்படியொரு அற்புதக் கட்டிடம் இந்தியாவில் இருக்கிறதென்றால் அதற்குக் காரணம் அப்போது வைஸ்ராயாக இருந்த கர்சன் பிரபு…
கலைஞர்களின்பால் மிகுந்த ஆர்வமும், ஆசையும் கொண்டிருந்த அவர் மற்றவர்களின் யோசனையை தூரத் தூக்கி எறிந்துவிட்டு தாஜ்மஹாலை நல்ல முறையில் பராமரிக்க ஒரு சட்டமே இயற்றினார்.
அதோடு மட்டுமல்ல.. இப்போது நீங்கள் தாஜ்மஹாலுக்குப் போனால் மும்தாஜ் – ஷாஜஹான் கல்லறைகளுக்கு மத்தியில் மேலே … ஒரு அழகான பித்தளை விளக்கு தொங்கிக் கொண்டிருக்கும்.
இதனைக் கொய்ரோவிலுருந்து வாங்கி, இங்கு தொங்கவிட்டவரே இந்த கர்சன் பிரபுதான்.
இந்த தாஜ்மஹால் கட்டுவதற்கு 1000 யானைகளும், 40000 பணியாளர்களும் வேலை செய்யப்பட்டனர்.

Wednesday, August 16, 2017

மதங்கள் -ஆச்சிரியமூட்டும் உண்மைகள்.

ஆச்சிரியமூட்டும் உண்மைகள்....

கிறிஸ்துவ மதம் :-
-----------------------------
    தேவன் ஒருவனே ( இயேசு கிறிஸ்து), ஒரே மதப் புத்தகம் (பைபிள் ) ,உலகெங்கும் ஒரே மதம் (கிறிஸ்துவம்)

  ஆனால்... "லத்தீன் கத்தோலிக்" பிரிவைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் "சிரியன் கத்தோலிக்" பிரிவு தேவாலயத்துக்குள் செல்ல மாட்டார்கள்.

   இந்த இரண்டு பிரிவினரும் "மார்த்தோமா" இன சர்ச்சுக்குள் செல்வதில்லை.

   இந்த மூவருமே " பெந்தகொஸ்தே " திருச்சபைக்குள் நுழைய முடியாது.

    மேற்கண்ட நான்கு பிரிவினரும் "சால்வேஷன் ஆர்மி " தேவாலயத்துக்குள் செல்ல முடியாது.

     இந்த ஐவரும் "செவன்த்டே அட்வென்டிஸ்ட் " இன சர்சுக்குள் போக மாட்டார்கள்.

    இவர்கள் ஆறு   பிரிவினருமே "ஆர்த்தோடக்ஸ்" பிரிவு ஆலயத்துக்குள் போவதில்லை.

   இந்த ஏழு பிரிவுகளை சேர்ந்தவர்கள் "ஜேகோபைட் " பிரிவினரின் சர்ச்சுக்குள் நுழைவதில்லை.

     இது போல் மொத்தம் 146 பிரிவுகள் கிறிஸ்தவ மதத்தில் மட்டுமே...

     ஒரு பிரிவைச் சேர்ந்தவர்கள் மற்ற பிரிவினருடன் தங்கள் தேவாலயத்தை பகிர்ந்து கொள்ள மாட்டார்கள்.

   ஆனால்... ..
             தேவன் ஒருவனே ( இயேசு கிறிஸ்து), ஒரே மதப் புத்தகம் (பைபிள் ) ஒரே மதம் (கிறிஸ்துவம்)     
               

அடுத்து முஸ்லீம் மதம் :-
------------------------------------
   "அல்லாஹ்" ஒருவரே கடவுள், ஒரே மதப் புத்தகம் ( குர்ஆன்), ஒரே இறைத்தூதர் நபிகள் நாயகம்.

  ஆனால்... இந்த ஒற்றுமையான மதத்திற்குள்ளே "ஷியா " மற்றும் "சன்னி " பிரிவினர் ஒருவரையொருவர் தாக்குவதும், கொன்று விடுவதும் அனைத்து இஸ்லாமிய நாடுகளில் சகஜம். கிட்டத்தட்ட பெரும்பாலான முஸ்லீம் நாடுகளில் மத ரீதியான சண்டை நடைபெறுவது இந்த இரு பிரிவினருக்கு இடையே தான்.

     "ஷியா "பிரிவு முஸ்லீம்கள்" சன்னி " பிரிவு முஸ்லீம்களின் மசூதிக்குள் நுழையவே முடியாது.

     இந்த இரு பிரிவினரும்" அஹமதியா "பிரிவு முஸ்லீம்களின் மகதிக்குள் போக முடியாது.

    இந்த மூவருமே "ஷபி" பிரிவு மசூதிக்குள் நுழைய அனுமதியில்லை.

    மேலே குறிப்பிட்ட நான்கு பிரிவினருமே "முஜாஹைதீன் "இன மசூதிக்குள் செல்ல முடியாது.

  இது போல் இஸ்லாமில் 13 பிரிவினர் உள்ளனர்.

,ஒரு பிரிவினர் மற்ற பிரிவினரை மொத்தமாக அழிப்பது இதெல்லாம் இவர்களுக்குள் சர்வ சாதாரணம்.

   அமெரிக்கா ஈராக்கை தாக்கி அதன் அதிபர் சதாம் உசேனை கொல்வதற்கு ஈராக்கை சுற்றியுள்ள அனைத்து இஸ்லாமிய நாடுகளும் அமெரிக்காவுக்கு தங்கள் முழு ஆதரவை அளித்தது குறிப்பிடத்தக்கது.

ஆனால்... .

அல்லாஹ் ஒருவரே கடவுள், ஒரே மதப் புத்தகம் ( குர்ஆன்), ஒரே இறைத்தூதர் நபிகள் நாயகம்.

"அமைதி மார்க்கம் இஸ்லாம்" ...

அடுத்தது "இந்து மதம் " :-
---------------------------------------
       இந்து மதத்தில் மொத்தம் 1280 மதப் புத்தகங்கள், 10,000 துணை நூல்கள், ஒரு லட்சத்துக்கும் அதிகமான தெளிவுரை நூல்கள், எண்ணிக்கையில் அடங்காத தெய்வங்கள், பல்வேறு விதமான ஆச்சாரியார்கள், ஆயிரக் கணக்கான ரிஷிகள், நூற்றுக்கணக்கான மொழிகள்.

இருந்தும் ....
         எவரும் எந்த ஆலயத்தித்குள்ளும் செல்லலாம், தங்கள் விருப்பப்படி வழிபாடு செய்யலாம், தாங்கள் விரும்பிய தெய்வங்களை வணங்கலாம்.
ஓர் இனத்தவரின் வழிபாடுகளில் மற்றவர் கலந்து கொள்ளலாம். தங்கள் மனதில் நினைத்ததை வேண்டிக் கொள்ளலாம்.இறைவனுக்கு படைக்கப்பட்டதை வேறுபாடு இல்லாமல் அனைவருக்கும் பகிர்ந்தளிக்கலாம்.

   கிட்டத்தட்ட பத்தாயிரம் ஆண்டுகளாக மதத்திற்குள் சண்டைகள் இல்லாமல், ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து, அமைதியையும், அன்பையும் மட்டுமே அனைவருக்கும் போதிக்கும் ஒரே மதம் "இந்து" மதமே.....