Sunday, November 29, 2015

TAMIL in JAPAN

இந்தியப் பிரதமரை "வணக்கம்' தெரிவிக்க வைத்த ஜப்பான் தமிழறிஞர் நொபுரூ கராஷிமா.

ஜப்பானியத் தமிழறிஞர் நொபுரூ கராஷிமாவுக்கு, டோக்கியோ நகரத்தில் இந்தியப் பிரதமர் "பத்மஸ்ரீ' விருது வழங்கினார். தமிழை நேசிக்கும் அந்த ஜப்பானியர், தள்ளாத வயதில் சக்கர நாற்காலியில் மேடைக்கு அழைத்து வரப்பட்டபோது, இருகரம் கூப்பி "வணக்கம்' என்று சொன்னதும், பிரதமர் சிரித்துக்கொண்டே அவருக்குத் தமிழில் "வணக்கம்' தெரிவித்ததும் நெகிழ்ச்சியான நிமிடங்கள்.

இந்தியப் பிரதமரை அந்நிய மண்ணில் "வணக்கம்' தெரிவிக்க வைத்தமைக்கே, அந்த மாமனிதருக்கு நாம் ஆயிரம் வணக்கங்கள் தெரிவிக்கலாம். கைதட்டலுக்கு இடையே தனக்கு வழங்கப்பட்ட "பத்மஸ்ரீ' விருதைப் பெற்றுக்கொண்ட நொபுரூ கராஷிமா, "நன்றி' என்று நல்ல தமிழில் கூறியபோது மீண்டும் கைதட்டல்.

நான் கைதட்டவில்லை. டோக்கியோ நகரில் தமிழ் ஒலித்தது கேட்டு, கண்ணீர் மல்க நின்றுவிட்டேன். முனைவர் நொபுரூ கராஷிமா சாதாரண அறிஞர் அல்லர். டோக்கியோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியர். ஜப்பானிலுள்ள டாய்ஷோ பல்கலைக்கழகத்தின் இந்தியவியல் துறையின் பேராசிரியர்.

சீனக் கடற்கரையோரங்களில் 9 முதல் 13-ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையிலான பல தமிழ்க் கல்வெட்டுகள் இருப்பதைக் கண்டறிந்தவர். "தென்னிந்திய சரித்திரமும் சமுதாயமும்' என்கிற இவரது புத்தகம் கி.பி. 850-1800 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்த கல்வெட்டுகளின் ஆராய்ச்சி நூல். 

நம்மிடையே வாழும் தலைசிறந்த உண்மையான தமிழறிஞர்களுள் ஒருவர். தமிழுக்குப் பெருமை சேர்த்த ஜப்பானிய அறிஞரை, இந்தியப் பிரதமரே தேடிப்போய் "பத்மஸ்ரீ' விருது வழங்கி கெளரவிக்கிறார்.

நமது தமிழகத்திலுள்ள தமிழ், ஆங்கிலப் பத்திரிகைகளில் இது முதற்பக்கச் செய்தியாக வந்திருக்க வேண்டாமா..?!

தமிழுக்கு நாம் தரும் மரியாதை இதுதானா..?!

12 இராசி மண்டலம்.

 27 நட்சத்திரங்களும் 4 பாதங்களைக் கொண்டுள்ளது.  ஆக மொத்தம் 108 நற்பண்புகள் உள்ளன.  அவை 12  வகைகளாக பிறிக்கப்படுகிறது. அதுவே 12 இராசி மண்டலமாகும். அவை :

👆   மேஷம்
✋   ரிஷபம்
✌   மிதுனம்
✊   கடகம்
💪   சிம்மம்
👋   கன்னி
👍   துலாம்
👇   விருச்சிகம்
☝   தனுசு
👌   மகரம்
👏   கும்பம்
👊   மீனம்

🔎ஒவ்வொரு இராசி மண்டலமும் தனித்துவம் வாய்ந்தவை. அதன் சிறப்பம்சங்களை பட்டியலாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மேஷம் :

1.  வைராக்கியம்  (Assertiveness)
2.  தேசநலன் (Citizenship)
3.  நிறைவேற்றுதல் (Chivalry)
4.  துணிச்சல்  (Courage)
5.  கீழ்படிதல்  (Obedience)
6.  வெளிப்படையாக  (Openness)
7.  ஒழுங்குமுறை  (Order)
8.  ஏற்றுக்கொள்ளுதல் (Acceptance)
9.  ஆன்மிகம்  (Spirituality)

🎯  மேஷராசி மண்டலமானது ஜீரண மண்டலத்தின் ஆதாரமாகும்
ரிஷபம் :

1.  கருணை  (Mercy)
2.  இரக்கம் (Compassion)
3.  காரணம் அறிதல் (Consideration)
4.  அக்கறையுடன்  (Mindfulness)
5.  பெருந்தன்மை (Endurance)
6.  பண்புடைமை (Piety)
7.  அஹிம்சை  (Non violence)
8.  துணையாக  (Subsidiarity)
9.  சகிப்புத்தன்மை (Tolerance)
 ரிஷபராசி மண்டலமானது சிறுநீரக மண்டலத்தின் ஆதாரமாகும்

✌  மிதுனம் :

1.  ஆர்வம் (Curiosity)
2.  வளைந்து கொடுத்தல்  (Flexibility)
3.  நகைச்சுவை (Humor)
4.  படைப்பிக்கும் கலை  (Inventiveness)
5.  வழிமுறை  (Logic)
6.  எழுத்து கற்க பிரியம் (Philomathy)
7.  காரணம்  (Reason)
8.  தந்திரமாக  (Tactfulness)
9.  புரிந்து கொள்ளுதல்  (Understanding)மிதுனராசி மண்டலமானது நரம்பு மண்டலத்தின் ஆதாரமாகும்.

✊  கடகம் :

1. பிறர் நலம் பேணுதல் ( Altruism )
2. நன்மை செய்ய விரும்புதல் (Benevolence)
3.  அறம் (Charity)
4.  உதவுகின்ற  (Helpfulness)
5.  தயாராக  இருப்பது  (Readiness)
6.  ஞாபகம் வைத்தல்  (Remembrance)
7.  தொண்டு செய்தல்  (Service)
8.  ஞாபகசக்தி  (Tenacity)
9.  மன்னித்தல்  (Forgiveness)
கடகராசி மண்டலமானது ஐம்புலன் மண்டலத்தின் ஆதாரமாகும்.

💪 சிம்மம் :

1.  வாக்குறுதி  (Commitment)
2.  ஒத்துழைப்பு  (Cooperativeness)
3.  சுதந்திரம்  (Freedom)
4.  ஒருங்கிணைத்தல்  (Integrity)
5.  பொறுப்பு (Responsibility)
6.  ஒற்றுமை  (Unity)
7.  தயாள குணம் (Generosity)
8.  இனிமை  (Kindness)
9.  பகிர்ந்து கொள்ளுதல்  (Sharing)

🎯  சிம்மராசி மண்டலமானது தசை மண்டலத்தின் ஆதாரமாகும்.
கன்னி :

1.  சுத்தமாயிருத்தல்  (Cleanliness)
2.  அருள் (Charisma)
3.  தனித்திருத்தல்  (Detachment)
4.  சுதந்திரமான நிலை (Independent)
5.  தனிநபர் உரிமை (Individualism)
6.  தூய்மை  (Purity)
7.  உண்மையாக  (Sincerity)
8.  ஸ்திரத்தன்மை  (Stability)
9.  நல்ஒழுக்கம்  (Virtue ethics) கன்னிராசி மண்டலமானது தோல் மண்டலத்தின் ஆதாரமாகும்.

👍 துலாம் :

1.  சமநிலை காத்தல் (Balance)
2.  பாரபட்சமின்மை (Candor)
3.  மனஉணர்வு (Conscientiousness)
4.  உள்ளத்தின் சமநிலை  (Equanimity)
5.  நியாயம் (Fairness)
6.  நடுநிலையாக  (Impartiality)
7.  நீதி (Justice)
8.  நன்னெறி  (Morality)9.  நேர்மை  (Honesty)

🎯  துலாராசி மண்டலமானது சுவாச மண்டலத்தின் ஆதாரமாகும்.
விருச்சிகம் :

1.  கவனமாக இருத்தல்(Attention)
2.  விழிப்புணர்வுடன் இருத்தல் (Awareness)
3.  எச்சரிக்கையாக இருத்தல் (Cautiousness)
4.  சீரிய யோசனை (Consideration)
5.  பகுத்தரிதல்  (Discernment)
6.  உள் உணர்வு  (Intuition)
7.  சிந்தனைமிகுந்த  (Thoughtfulness)
8.  கண்காணிப்பு  (Vigilence)
9.  அறிவுநுட்பம் (Wisdom)

🎯  விருச்சகராசி மண்டலமானது நிணநீர்  மண்டலத்தின் ஆதாரமாகும்.

☝  தனுசு :.  லட்சியம்  (Ambition)
2.  திடமான நோக்கம்  (Determination)
3.  உழைப்பை நேசிப்பது  (Diligence)
4.  நம்பிக்கையுடன்  (Faithfulness)
5.  விடாமுயற்சி  (Persistence)
6.  சாத்தியமாகின்ற  (Potential)
7.  நம்பிக்கைக்குரிய  (Trustworthiness)
8.  உறுதி (Confidence)
9.  ஊக்கத்துடன் முயற்சி (Perseverance)

🎯  தனுசு ராசி மண்டலமானது எலும்பு மண்டலத்தின் ஆதாரமாகும்.

👌 மகரம்:
1.  கண்ணியம்  (Diginity)
2.  சாந்த குணம் (Gentleness)
3.  அடக்கம்  (Moderation)
4.  அமைதி (Peacefulness)
5.  சாதுவான  (Meekness)
6.  மீளும் தன்மை  (Resilience)
7.  மௌனம் (Silence)
8.  பொறுமை (Patience)
9.  செழுமை  (Wealth)

🎯  மகரராசி மண்டலமானது நாளமுள்ள சுரப்பி மண்டலத்தின் ஆதாரமாகும்.கும்பம் :

1.  சுய அதிகாரம் (Autonomy)
2.  திருப்தி (Contentment)
3.  மரியாதை (Honor)
4.  மதிப்புமிக்க  (Respectfulness)
5.  கட்டுப்படுத்துதல்  (Restraint)
6.  பொது கட்டுப்பாடு  (Solidarity)
7.  புலனடக்கம்  (Chasity)
8.  தற்சார்பு  (Self Reliance)
9.  சுயமரியாதை  (Self-Respect)

🎯  கும்பராசி மண்டலமானது நாளமிள்ளா சுரப்பி மண்டலத்தின் ஆதாரமாகும்.
 மீனம் :

1.  உருவாக்கும் கலை (Creativity)
2.  சார்ந்திருத்தல்  (Dependability)
3.  முன்னறிவு  (Foresight)
4.  நற்குணம் (Goodness)
5.  சந்தோஷம்  (Happiness)
6.  ஞானம் (Knowledge)
7.  நேர்மறை சிந்தனை  (Optimism)
8.  முன்யோசனை  (Prudence)
9.  விருந்தோம்பல் (Hospitality)

🎯  மீனராசி மண்டலமானது இரத்த ஒட்ட மண்டலத்தின்ஆதாரமாகும்

Monday, November 23, 2015

புது தகவல்கள் .....


1 எல்லாரும் நினைத்து கொண்டிருப்பதை போல, 
பணத்தாள்(ருபாய் நோட்டு) காகிதத்தால் 
செய்யப்பட்டது இல்லை. 
அது, ஒரு வகை "காட்டன் (cotton)
 "துணியால் செய்யப்பட்டது.
 
2 தேன், மிக எளிதாக ஜீரணமடையும்  
ஒரு உணவுப்பொருள். ஏன் தெரியுமா?

  அது ஏற்கனவே தேனீக்களால்
 ஜீரணிக்கப்பட்டுவிட்டது.
3 வண்ணத் திரைப்படங்களுக்கு
 'ஈஸ்ட்மேன் கலர்' என்று பெயர்   சூட்டுவதுண்டு.     
அவ்வாறு சூட்டக் காரணம் என்ன தெரியுமா?
 1883ம் ஆண்டில்    முதன் முதலாக
 வண்ண புகைப்பட ஃபிலிம்மை ஈஸ்ட்மேன் என்பவர்
 கண்டுபிடித்தார். அதன் காரணமாக 
அவருடைய பெயரை வண்ண 
பிலிம்களுக்கு சூட்டலாயினர்.
 4 யானையின் காது முறம் போல
 இருக்கும் என்று கூறுவார்கள்.   
யானையின் காதுக்கு செந்தமிழ்ப் பெயர் 
என்ன தெரியுமா? 'தலாடகம்' என்பது தான்.
நாணயத்தில் தனது உருவத்தை 
பொறித்த முதல் அரசர் அலெக்ஸாண்டர்
  
6 பென்சிலில்  'எச்பி',  எச்பி2'  என்று
குறிப்பிடப்பட்டிருக்கும்.  'எச்'  என்றால்
  ஹார்டு,  'பி'  என்றால்  பிளாக்.
அந்த பென்சிலில்
  பயன்படுத்தப்பட்டுள்ள  கிராபைட்
எந்த  அளவுக்கு  உறுதியாக,
கறுப்பாக  எழுதும்  என்பதை  இது  குறிக்கிறது.

பெரும்பாலானவர்களுக்கு சீட்டு
 விளையாட தெரியும்.  அதில் ராஜா, ராணி    
என்ற சீட்டுக்கள் இருக்கும்.  ஆனால், 
அந்த ராஜா - ராணி எந்த மன்னனை,  
அரசியை குறிக்கிறது தெரியுமா...?
   ஸ்பேட் ராஜா  --  மன்னர் டேவிட்  ( இஸ்ரேல் ).
   ஹார்டின் ராஜா  --  மன்னர் சார்லஸ்  ( பிரான்ஸ் ).
   டயமண்ட் ராஜா  --  ஜூலியஸ் சீசர்  ( இத்தாலி ).
   கிளாவர் ராஜா  --  அலெக்சாண்டர் தி கிரேட்  ( கிரீஸ் ).
   ஸ்பெட் ராணி  --  ஏதெனா  ( கிரீஸ் ).
   ஹார்டின் ராணி  --  ஜூதிக்  ( பிரான்ஸ் ).
   டயமண்ட் ராணி  --  ரேச்சல்  ( எகிப்து  ).
   கிளாவர் ராணி  --  ஆர்ஜீன்  ( கிரீஸ்
 )

உலகத் தமிழ் மாநாடு

உலகத் தமிழ் மாநாடு

உலகத் தமிழ் மாநாடு நடந்த இடங்கள்:-

1.கோலாலம்பூர் -- 1966
2.சென்னை -- 1968

3.பாரிஸ் -- 1970

4.யாழ்ப்பாணம் -- 1974
5.மதுரை -- 1981

6.கோலலம்பூர் -- 1987

7.மொரீசியஸ் -- 1989

8.தஞ்சாவூர் -- 1995

தமிழர்கள் -காலத்தை வகுத்த விதம்

தமிழர்கள் காலத்தை வகுத்த விதம் பிரம்மிப்பானது. தமிழர்கள் இயற்கையை ஆதாரமாகக் கொண்டு காலத்தைப் பிரித்தார்கள். ஒரு நாளைக்கூட ஆறு சிறு பொழுதுகளாக பிரித்து வைத்திருந்தார்கள். 
1. வைகறை
2. காலை
3. நண்பகல்
4. எற்பாடு
5. மாலை
6. யாமம்

என்று அவற்றை அழைத்தார்கள். அது மட்டுமல்ல, அந்த ஆறு சிறு பொழுதுகளின் தொகுப்பையும் அறுபது நாழிகைகளாகப் பகுத்துக் கணக்கிட்டார்கள். அதாவது ஒரு நாளில் ஆறு சிறுபொழுதுகள் உள்ளன. அந்த ஆறு சிறு பொழுதுகள் கழிவதற்கு அறுபது நாழிகைகள் எடுக்கின்றன என்று தமிழர்கள் பண்டைக் காலத்தில் கணக்கிட்டார்கள். ஒரு நாழிகை என்பது தற்போதைய 24 நிமிடங்களைக் கொண்டதாகும்.

அதாவது பண்டைக் காலத் தமிழர்களது ஒரு நாட் பொழுதின் அறுபது நாழிகைகள் என்பன தற்போதைய கணக்கீடான 1440 நிமிடங்களோடு, அதாவது 24 மணிநேரத்தோடு அச்சாகப் பொருந்துகின்றன. தமிழர்கள் ஒரு நாள் பொழுதை, தற்போதைய நவீன காலத்தையும் விட, அன்றே மிக நுட்பமாகக் கணித்து வைத்திருந்தார்கள் என்பதே உண்மையுமாகும்.

எல்லைக் கோடுகள்

எல்லைக் கோடுகள்

இந்தியா - பாகிஸ்தான் எல்லைக் கோடு--ராட்கிளிப் கோடு.

இந்தியா - சீனா எல்லைக் கோடு--மக்மோகன் கோடு.

பாகிஸ்தான் -ஆப்கானிஸ்தான் எல்லைக் கோடு--டூராண்ட் லைன்.

யார் கட்டியது ?

எந்த ஆண்டு யார்? கட்டியது.
 
குதுப்மினார் கி.பி.1232-ல் இல்டுமிஸ் என்பவரால் கட்டப்பட்டது.

வில்லியம்கோட்டை கி.பி.1696-ல் கல்கத்தாவில் ஆங்கிலேயர்களால் 
கட்டப்பட்டுள்ளது.

நாளந்தா பல்கலைக்கழகம் கி.பி.5-ம் நூற்றாண்டில் குமாரகுப்தரால் நிறுவப்பட்டது.

செயிண்ட்ஜார்ஜ் கோட்டை கி.பி. 1640-ல் சென்னையில் ஆங்கிலேயரால் கட்டப்பட்டுள்ளது.

வேலூர் கோட்டை கி.பி. 16-ம் நூற்றாண்டில் சின்ன பொம்மி நயக்கரால் கட்டப்பட்டுள்ளது.

தாஜ்மகால் கி.பி.1652-ல் ஷாஜகனால் கட்டப்பட்டுள்ளது.

கல்லணை கி.பி.2-ம் நூற்றாண்டில் கரிகாலனால் கட்டப்பட்டது
.
பிரகதீஸ்வரர் கோவில் கி.பி.1010-ல் முதலாம் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டுள்ளது.

Sunday, November 15, 2015

சிறப்புப் பெயர்கள்

சிறப்புப் பெயர்கள்

கடல்களின் அரசி - பசிபிக் பெருங்கடல்

அரபிகடலின் அரசி - கொச்சி (கேரளா)

ஏட்ரியாட்டிக்சின் அரசி - வெனிஸ் (இத்தாலி)

மலை வாழிடங்களின் அரசி - ஊட்டி (தமிழ் நாடு)

டெக்கானின் அரசி - புனே (மராட்டியம்)

பால்டிக்கடலின் பேரரசி - ஸ்டாக்ஹோம்(சுவீடன்)

கடற்கரையின் அரசி - கோவா

சாத்பூர மலையின் அரசி - பஞ்ச்மடி

மலைகளின் இளவரசி - கொடைக்கானல்(தமிழ்நாடு)

சுயசரிதைகள்

சுயசரிதைகள்

கிரிக்கட் வீரர் கபில்தேவின் சுயசரிதை - ”ஸ்ட்ரெயிட் பிரம் தி ஹார்ட்”
சதாம் உசேனின் சுயசரிதை - “மென் அண்ட் எ சிட்டி”

எழுத்தாளர் தஸ்லிமா நஸ் ரீனின் சுயசரிதை - “த்விகாந்திதா”

ஹிலாரி கிளிண்டனின் சுயசரிதை - “லிவிங் ஹிஸ்டரி

சிதார் இசை மேதை ரவிசங்கரின் சுயசரிதை - “ராகமாலிகை”

எழுத்தாளர் கமலா தாஸின் சுயசரிதை - “மை ஸ்டோரி”

முன்னால் கிரிக்கட் வீரர் ஜாவித் மியாண்டட்டின் சுயசரிதை - ”கட்டிங் எட்ஜ்”

முதல் செயற்கைக்கோள்கள்

முதல் செயற்கைக்கோள்கள்

இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் - ஆர்யபட்டா.

ரஷியாவின்முதல் செயற்கைக்கோள் - ஸ்புட்னிக்.

அமெரிக்காவின் முதல் செயற்க்கைக்கோள் - எக்ஸ்புளோரர்.

சீனாவின் முதல் செயற்கைக்கோள் - ஸிஸோம் -1.

பிரான்சின் முதல் செயற்கைக்கோள் - ஏ - 1.

ஜப்பானின் முதல் செயற்கைக்கோள் - ஓசுமி.

வடிவமைப்பாளர்கள்

வடிவமைப்பாளர்கள்
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலையை வடிவமைத்தவர் - சபர்ணா ராய் சவுத்ரி.
 
பழைய டெல்லியை வடிவமைத்தவர் - ஷாஜகான்.

புது டெல்லியைவடிவமைத்தவர் - எட்வின் லூட்தயன்ஸ்
.
கல்கத்தா மாநகரை வடிவமைத்தவர் - ஜாப் சார்நாக்
.
சண்டிகரை வடிவமைத்தவர் - லேதகார் பூசியர்.

ஐதராபாத்தை வடிவமைத்தவர் - முகமது அலி குதுப்ஷா.

தமிழகம்--சில முக்கிய தகவல்கள்

 தமிழ் நாட்டின் தகவல்கள் #----
 

தமிழ்நாட்டின் மொத்த பரப்பளவு-- 1,30,058 ச.கி.மீ
மக்கள் தொகை. ------------------ 7,21,38,958
ஆண்கள் ----------------------------- 3,61,58,871
பெண்கள்---------------------------- 3,59,58,871
மொத்த மாவட்டங்கள்-------------- 32
தாலுகாக்கள்------------------------ 220
கிராமங்கள்-------------------------- 15,243
நகரங்கள் ---------------------------- 1097
நகராட்சிகள் ------------------------- 148
மாநகராட்சிகள் ---------------------- 10
மாநில பறவை------------------------ மரகதப்புறா
மாநில விலங்கு---------------------- நீலகிரி வரையாடு
மாநில மரம்--------------------------- பனை
மாநில மலர்-------------------------- செங்காந்தள்
மாநில நடனம்------------------------ பரத நாட்டினம்
மாநில விளையாட்டு ---------------- கபடி
மாநில வீரம்--------------------------- மஞ்சுவிரட்டு
அதிக எழுத்தறிவு கொண்ட மாவட்டம்-- கன்னியாகுமரி
மிக உயர்ந்த கோபுரம்--------------- ஶ்ரீவில்லிபுத்தூர்
மிக உயர்ந்த சிகரம்----------------- தொட்டபெட்டா (2,636)
உயரமான சிலை-------------------- திருவள்ளுவர் சிலை, கன்னியாகுமரி (133 அடி)
நீளமான ஆறு----------------------- காவிரி
குறைந்த மக்கள் தொகை கொண்ட மாவட்டம் --- பெரம்பலூர் (4,86,971)
மிக சிறிய மாவட்டம் --------------- சென்னை (174 கி.மீ)
மிக பழைய அணைக்கட்டு-------- கல்லணை, திருச்சிராப்பள்ளி
மிக பெரிய கோவில்--------------- தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவில்
மிக பெரிய தேர்--------------------- திருவாரூர் தேர்
மிக பெரிய பாலம்------------------ பாம்பன் பாலம் ,இராமேஸ்வரம்
மிக பெரிய மாவட்டம் -------------- தர்மபுரி (9622 கிமீ )
முதல் இருப்பு பாதை(ரயில்வே)--- ராயபுரம்-வாலாஜாபேட்டை (1856)
முதலில் வெளியான தமிழ் நாளிதழ்-- சுதேசமித்திரன் (1829)
முதல் பெண் முதலமைச்சர்--------- ஜானகி ராமச்சந்திரன் (எம்.ஜி.ஆர் மனைவி)
முதல் பேசும் படம்-------------------- காளிதாஸ் (1931)
முதல் மாநகராட்சி ------------------- சென்னை (26-09-1688)
//////////////////////////////////////////////////////////
  நம் மாநிலம் குறித்து நாம் தெரிந்து கொள்ள சில முக்கிய தகவல்கள்

📚இந்திய மக்கள் தொகையில் தமிழகம் எந்த இடத்தில் உள்ளது?   

7வது இடம்

📚 இந்திய மக்கள் வளர்ச்சியில் தமிழகம் எத்தனையாவது இடத்தில் உள்ளது?   

23 வது இடம்

📚இந்தியாவின் கல்வியறிவில் தமிழக ஆண்கள் எந்த இடத்தில் உள்ளனர்?   

16வது இடம்

📚இந்தியாவின் கல்வியறிவில் தமிழக பெண்கள் எந்த இடத்தில் உள்ளனர்?

15வது இடம்

📚இந்தியாவின்
 கல்வியறிவில் தமிழகம் எத்தனையாவது இடத்தில் உள்ளது?

    14வது இடம்

📚சென்னை உயர்நீதி மன்றத்தின் கிளை எங்குள்ளது?   

மதுரை

📚 சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைகிளை எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

    2004

 📚 தமிழக மக்களின் சராசரி தனிநபர் வருமானம் எவ்வளவு?

    72993

📚 தமிழக உயர்நீதி மன்றம் எங்குள்ளது?

    சென்னை

📚தமிழக கடற்கரையின் மொத்த நீளம் எவ்வளவு?

    1076 கி.மீ

📚தமிழக சட்டசபை எந்த ஆண்டு முதல் ஒரு அவையாக மாற்றப்பட்டது

    1986

📚 தமிழகத்தில் அதிக அளவு கல்வியறிவு பெற்ற மாவட்டம் எது?

    கன்னியாக்குமரி (92.14 சதவீதம்)

 📚தமிழகத்தில் அதிக அளவு பெண்கள் உள்ள மாவட்டம்?   

சென்னை (23,23,454)

 📚தமிழகத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட மாவட்டம் எது?   

சென்னை (46,81,087)

 📚 தமிழகத்தில் உள்ள ஆண்களின் சராசரி ஆயுட்காலம் எவ்வளவு?

    68.45 ஆண்டுகள்

📚 தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்கள் எத்தனை?   

13 மாவட்டங்கள்

📚தமிழகத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை எவ்வளவு?

    234

 📚 தமிழகத்தில் உள்ள சட்டமன்ற நியமன உறுப்பினர் எண்ணிக்கை எவ்வளவு?

    1

 📚தமிழகத்தில் உள்ள துறைமுகங்கள் எவ்வளவு?

    12 துறைமுகங்கள்
 தமிழகத்தில் உள்ளன

📚பன்னாட்டு விமான நிலையம் எங்குள்ளது?

    சென்னை

📚 தமிழகத்தில் உள்ள பெண்களின் சராசரி ஆயுட்காலம் எவ்வளவு?

    71.54 ஆண்டுகள்

📚 தமிழகத்தில் உள்ள மொத்த கிராமங்களின் எண்ணிக்கை எவ்வளவு?

    15979
📚 தமிழகத்தில் உள்ள மொத்த நகர பஞ்சாயத்துக்களின் எண்ணிக்கை எவ்வளவு?

    561

 📚தமிழகத்தில் உள்ள மொத்த நகராட்சிகளின் எண்ணிக்கை எவ்வளவு?

    146

📚 தமிழகத்தில் உள்ள ராஜ்யசபாவின் எண்ணிக்கை எவ்வளவு?

    18

 📚 தமிழகத்தில் உள்ள லோக்சபாவின் எண்ணிக்கை எவ்வளவு?

    39

📚 தமிழகத்தில் குறைந்த எழுத்தறிவு கொண்ட மாவட்டம் எது?   

தர்மபுரி (64.71 சதவீதம்)

 📚தமிழகத்தில் குறைந்த மக்கள் தொகை கொண்ட மாவட்டம் எது?   

பெரம்பலூர் 5,64,511

 📚தமிழகத்தில் மக்கள் நெருக்கம் கொண்ட மாவட்டம்?    

சென்னை (26903பேர் ஒரு சதுர கி.மீட்டரில் வாழ்கின்றனர்)

📚தமிழகத்தில் மிகக்குறைந்த மக்கள் நெருக்கம் கொண்ட மாவட்டம் எது?   

நீலகிரி (1சதுர கி.மீட்டரில் 288 மட்டுமே வாழ்கின்றனர்)
 📚தமிழகத்தில் மிக்குறைந்த பெண்கள் கொண்ட மாவட்டம் எது?

    3,74,901

 📚 தமிழகத்திலுள்ள மொத்த மாவட்டங்கள் எத்தனை?

    32

📚தமிழகத்தின் 31 வது மாவட்டம் எது?   

அரியலூர்

📚தமிழகத்தின் 32 வது மாவட்டம் எது?   

திருப்பூர்

 📚தமிழகத்தின் கல்வியறிவு எவ்வளவு சதவீதம்   

80.33 சதவீதம்

📚தமிழகத்தின் காடுகளின் பரப்பு எவ்வளவு?   

17.58 சதவீதம்

📚தமிழகததின் மாநில விலங்கு எது?   

 வரையாடு

📚தமிழகத்தின் முக்கிய 3 துறைமுகங்கள் எது?

    சென்னை, எண்ணூர், தூத்துக்குடி

📚 தமிழகத்தின் முக்கிய ஆறுகள் எது?    

காவேரி, வைகை, தாமிரபரணி, பாலாறு, பவானி

📚 தமிழகத்தின் முக்கியமான 6 விமானநிலையங்கள் எங்குள்ளது?
1. சென்னை
2.  கோவை
3. மதுரை 
4. திருச்சி   
5 தூத்துக்குடி 
6 சேலம்


📚 தமிழ்நாட்டில் 2011 கணக்கெடுப்பின்படி பாலின விகிதம் எவ்வளவு?

    999பெண்கள்(1000 ஆண்கள்)

 📚தமிழ்நாட்டில் காடுகள் அதிகமாக உள்ள மாவட்டங்கள் எவை?   

1. நீலகிரி         
2. சேலம்         
3. வேலூர்         
4. கன்னியாக்குமாரி


📚 தமிழ்நாட்டில் காடுகள் குறைவாக உள்ள மாவட்டங்கள் எவை?   

1. திருவாரூர்     
2. இராமநாதபுரம் 
3. தூத்துக்குடி     
4. கடலூர்


📚 தமிழ்நாட்டில் சமத்துவபுரம் தொடங்கப்பட்ட முதல் மாவட்டம் எது?   

மதுரை (மேலக்கோட்டை - ஆண்டு 1997)

 📚தமிழ்நாட்டின் இணைய தளம் எது?   

www.tn.gov.in

 📚தமிழ்நாட்டின் தலைநகரம் எது?

    சென்னை

📚தமிழ்நாட்டின் மக்கள் தொகை அடர்த்தி எவ்வளவு?   

ஒரு ச.கி.மீட்டருக்கு 555 பேர்

📚 தமிழ்நாட்டின் மாநில அரசு சின்னம் எது?

    திருவில்லிபுத்தூர் கோபுரம்

📚 தமிழ்நாட்டின் மாநில எல்லையை குறிப்பிடுக?

    கிழக்கே வங்காள விரிகுடா, மேற்கே கேரளா, வடக்கே ஆந்திரபிரதேசம், தெற்கே இந்தியபெருங்கடல்

📚 தமிழ்நாட்டின் மாநில தமிழ்தாய் வாழ்த்து எது?

    நீராடும் கடலுடுத்த

📚 தமிழ்நாட்டின் மாநில நடனம் எது?   

பரத நாட்டியம்

📚 தமிழ்நாட்டின் மாநில பறவை எது?   

மரகதப்புறா

📚 தமிழ்நாட்டின் மாநில மரம் எது?   

பனைமரம்

📚 தமிழ்நாட்டின் மாநில மலர் எது?   

செங்காந்தர் மலா்

📚 தமிழ்நாட்டின் மாநில விளையாட்டு எது?

    கபடி

📚தமிழ்நாட்டின் மொத்த பரப்பு எவ்வளவு?

    1,30,058 ச.கி.மீ

📚தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகை எவ்வளவு?
    7,21,38,958              
ஆண் 36158871       
பெண் 35980087

📚📚📚📚📚📚📚📚📚

வெள்ளக்கோயில்-- வீரகுமார சுவாமி கோயில்

வெள்ளக்கோயில் வீரகுமார சுவாமி கோயில்

 600 ஆண்டு பழமையான இக்கோயில் ஆரம்பத்தில் புற்று வடிவமாக இருந்தது. அதன்பிறகு கோயிலாக கட்டப்பட்டது. புற்றில் இருந்து தோன்றியவர் வீரக்குமாரன் என்று அப்பகுதி மக்கள் நம்புகின்றனர். வீரகுமார சுவாமி கோயில் வளாகத்தில் பிரமாண்ட குதிரை சிலைகள் காட்சியளிக்கின்றன. இவையனைத்தும் பக்தர்கள் நேர்ந்து வழங்கியவை. இக்கோயிலில் நடத்தப்படும் வெடி வழிபாடும், அதில் பெண்கள் பங்கேற்றால் விபரீதம் நிகழும் என ஊர்வாசிகள் கூறுவதும் ஆச்சரியமளிக்கிறது.

கோயிலில் கிழக்குப்புறத்தில் மகாமுனி சன்னதி இருக்கிறது. அதற்கு அடுத்ததாக எசவட புரவிகள் எனும் 11 பெரிய குதிரை சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. 5வது குதிரை சிலை, ஆங்கிலேயே துரை ஒருவர் பிடித்து கொண்டு நிற்பது போல உள்ளது. இது ஆங்கிலேய துரை ஒருவரால் காணிக்கையாக வழங்கப்பட்ட சிலை என ஊர்வாசிகள் சொல்கிறார்கள். வீரகுமார சுவாமி கோயிலில் பொட்லி எனப்படும் வெடியை வெடித்து பூஜை நடத்தப்படுகிறதுவெடிச் சத்தம் வீரகுமார சுவாமிக்கு மிகவும் பிடிக்கும் என்று மக்கள் நம்புவதால், காலம்காலமாக வெடியை வெடித்தே மக்கள் வழிபாடு நடத்துகிறார்கள். 

18ம் நூற்றாண்டில் வாழ்ந்த வெள்ளைக்கார துரை ஒருவர், குதிரையில் இப்பகுதி வழியாக வந்தார். அப்போது அதிர்வேட்டுகள் வெடித்து வீரகுமார சுவாமி கோயிலில் பூஜை நடந்து கொண்டிருந்தது. துரையின் குதிரை மிரண்டு அங்குமிங்கும் ஓடியது. இதனால் கோபமடைந்த அவர், கோயிலில் வெடி வெடிக்க தடை விதித்தார். ஆனால் அடுத்த நொடியே துரையின் கண்பார்வை போய்விட்டதாம். கடவுள் நிந்தித்ததால் வந்த வினை என்பதை உணர்ந்த துரை, குதிரை செய்து வைப்பதாக வேண்டிக் கொண்ட பிறகு பார்வைதிரும்பியதாக ஊர்க்காரர்கள் சொல்கிறார்கள்.

 துரை வழங்கிய குதிரைதான், அதற்கு சாட்சி என்று கூறி திகைக்க வைக்கிறார்கள். வீரகுமாரன் கோயிலில் வழிபாடு நடக்கும் போது ஆண்கள் மட்டும் தான் கலந்து கொள்ள வேண்டும். பெண்கள் வெளியில் இருந்துதான் கும்பிட வேண்டும். மீறி கலந்து கொண்டால் அவர்களுக்கு விபரீதம் நேர்ந்து விடும் என்பதும் இப்பகுதி மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருக்கிறது. கோயிலில் இருந்து சிறிது தூரத்தில் இருக்கும் மகாமுனியம்மன் சன்னதியிலேயே பெண்களை நிறுத்திவிடுகிறார்கள். இந்த கட்டுப்பாட்டை மீறி கோயில் திருவிழாவில் பங்கேற்ற கோவை பெண் ஒருவர், கை கால் விளங்காமல் பட்ட துயரங்களை என்றுமே தங்களால் மறக்க முடியாது என்கிறார்கள் பக்தர்கள். வீரகுமார சுவாமியிடம் மன்னிப்பு கேட்டு விரதம் இருந்த பிறகுதான் அந்த பெண்ணுக்கு நோய் குணமானதாம்.

Friday, November 13, 2015

FB video-autoplay STOP

பேஸ்புக்ல தானாகவே வீடியோ பிளே ஆகி
 உங்கள் டேட்டவை காலி செய்கிறதா?
இதை படிங்க.

முகநூல் என தமிழில் அழைக்கபடும் பேஸ்புக் சமூக வலைதளத்தில் தினம் தினம் பல புதிய மாற்றங்களை செய்துக்கொண்டு இருக்கிறார்கள். சமீபத்தில் பேஸ்புக் தளத்தில் வீடியோகள் அனைத்தும் தானாகவே பிளே ஆகும் வசதியை புகுத்தி இருக்கிறார்கள். இந்த பிரச்சனையை தவிற்க்க என்ன செய்வது?
கணினியில் மற்றும் ஆண்ட்ராய்ட் ஆப்ல, எப்படி தடை செய்வது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

முதலில் கணினியில் எப்படி தடை செய்வது என்பதை பார்க்கலாம்.
உங்கள் பேஸ்புக் கணக்கில் லாகின் செய்த பின் மெனு சென்று Settings >> Video செல்லுங்கள் உங்கள் செட்டிங்ஸ் பக்கத்தில் வீடியோ ஆப்சன் ஸ்கிரீன் வரும். அதில் வலது பக்கம் இரண்டாவதாக இருக்கும் Auto-Play Videos என்பதின் எதிரே கீழே படத்தில் இருப்பது போல Off தேந்தெடுங்கள். தானாகவே Save ஆகி விடும். இனி வீடியோ தானாக பிளே ஆகாது.

பேஸ்புக் ஆண்ட்ராய்ட் ஆப்ல எப்படி தடை செய்வது?
முதலில் மேல் வலது பக்கம் உள்ள Profile settings சென்று அதில் App Settings டச் செய்தால் அடுத்த பக்கத்தில் Video Auto Play என்பதை டச் செய்து அதன் பிறகு வரும் பாப்பப் பாக்ஸ்ல Off என தேந்தெடுங்கள். அவ்வளவுதான்.
ஆண்ட்ராய்ட் மற்றும் ஐஓஎஸ் செட்டிங்ஸ் வித்தியாசம் அதிகம் இல்லை.

ஸ்மார்ட் போன்- சென்சார் தொழில்நுட்பம்

 ஸ்மார்ட் போன்- சென்சார் தொழில்நுட்பம்

 ஸ்மார்ட் போன்களில், தற்போது அதிகம் புழக்கத்தில் இருப்பது, சென்சார் தொழில் நுட்பமாகும். எல்லோர் மொபைலையும் சென்சார் இருக்குதுங்க ஆனால் அது என்ன பன்னுது அதோட வேலை என்ன என்று பல பேருக்கு தெரிவதில்லை
இந்த பதிவில் சில முக்கிய சென்சார்ஸ் பற்றி நான் கட்டுரையாக தொகுத்து உள்ளேன் ஆகவே முழுமையாக படியுங்கள் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்
1) PROXIMITY
Proximity சென்சார் அருகிலுள்ள பொருட்களை தொடாமல் அறிய பயன்படுகிறது. மின்காந்த(Electromagnetic) கதிர்களை
பயன்படுத்தி பொருட்களின் மீது பட்டு திரும்பும் கதிர்களை கொண்டு உணர்கிறது.உலோகம் மற்றும் பிளாஸ்டிக் போன்றவற்றை உணர ஒவ்வொன்றுக்கும் தனித்தனி Proximity சென்சார்கள் பயன்படுத்தப்படுகிறது. இது மொபைலில் நாம் அழைப்பில்(call) பேசிக்கொண்டு இருக்கும்போது ,தொடுதிரையை அணைத்து வைக்க பயன்படுகிறது.
2) ACCELEROMETER
இது மொபைலில் சாய்தல் (TILT) மற்றும் அசைவு (MOTION) ஆகியவற்றை உணர பயன்படுகிறது. அசைவு மூலம் ORIENTATION நிலையை தானியங்கி (AUTO ROTATE)முறையில் இயக்க முடிகிறது(PORTRAIT AND LANDSCAPE MODE). இது செங்கோன அச்சுக்கள்(ORTHOGONAL AXES) மூலம் இயங்குகிறது. சாய்தல்(TILT) மொபைலில் விளையாட ,MUSIC PLAYER ஆகியவற்றில் பயன்படுகிறது.
3) GYROSCOPE
இது ACCELEROMETER போலவே மொபைலில் ORIENTATION-ஐ பராமரிக்க பயன்படுகிறது. ACCELEROMETER அச்சுக்கள் மூலம் இயங்குகிறது ஆனால் GYROSCOPE சென்சார் சுழல் உந்தம்(ANGULAR MOMENTUM) முறையில் செயல்பட்டு தொடுதிரையின் நிலையை சரியாக அளவிடுகிறது. இதன் மூலம் சிறந்த விளையாட்டு(GAMING EXPERIENCE) அனுபவத்தை பெற முடியும். (எடுத்துக்காட்டாக COUNTER STRIKE போன்ற விளையாட்டுக்கள் )
4) DIGITAL COMPAS
இது புவி காந்தப்புலம்(EARTH MAGNETIC FIELD) மூலம் செயல்படுகிறது.கிழக்கு, மேற்கு,வடக்கு,தெற்கு போன்ற திசைகளை அறிய பயன்படுகிறது.நீங்கள் MAPS போன்ற மென்பொருளை பயன்படுத்தும் போது செயல்பட்டு தானியங்கி(AUTO ROTATE) முறையில் சுழலும்.
5) BAROMETER
இது வளிமண்டல அழுத்தத்தை(ATMOSPHERIC PRESSURE) கணக்கிடுகிறது.இதன் மூலம் உயர்நிலை(ALTITUDE) மற்றும் அவ்வப்போது மாறும் வானிலை மாற்றங்களை அறிய பயன்படுகிறது.உங்கள் மொபைலின் இணைய இணைப்பை பயன்படுத்தி தரவுகளை(DATA) பெற்று நீங்கள் இருக்கும் இடத்திற்கு(GEO-LOCATION) ஏற்ற வானிலை மாற்றங்களை வழங்குகிறது. BAROMETER வேகமான மற்றும் மாற்றங்களை பெற முடியும்.
6) AMBIENT LIGHT
இது தொடுதிரையின் வெளிச்சத்தை(BRIGHTNESS) வெவ்வேறு சூழ்நிலைகளுக்கு ஏற்ப தானியங்கி(AUTOMATIC) முறையில் இயக்க பயன்படுகிறது. இதன் மூலம் பேட்டரியை மிச்சப்படுத்தவும் மற்றும் தெளிவான திரையையும் பார்க்க உதவுகிறது.
சில சென்சார்ஸ் பற்றி தான் மேலே கூறி உள்ளேன் இன்னும் நிறைய உள்ளன மேலே உள்ளது ஏறத்தாழ இப்போ எல்லோர்கிட்ட இருக்கிற மொபைல்லையும் இருக்கும் ஆகவே அதை மட்டும் இங்கே தொகுத்துள்ளேன்.

விளம்பரம் தொல்லை இல்லாமல் Youtube பார்க்க

                             விளம்பரம் தொல்லை இல்லாமல் Youtube பார்க்க

யூடியூப் பார்க்கும்போது வீடியோ விளம்பரங்கள் (சில சமயம் Skip பட்டனுடன், சில சமயம் ஸ்கிப் பட்டன் இல்லாமல் கிட்டத்தட்ட 15 வினாடிகள் வரை) தொல்லை தருகிறதா ?

விளம்பரங்கள் இல்லாமல் யூ-டியூப் வீடியோக்களை பார்க்க ஒரு நுணுக்கம் இருக்கிறது. இது கூகிள் நிறுவனமே வழங்கும் ஒரு பரிசோதனை, அதனால் கூகிள் இந்த வசதியை தரும் வரை பயன்படுத்தி மகிழ்க.

இந்த வசதியை கொண்டுவர நீங்கள் உங்கள் டெவலப்பர் கன்ஸோலில் ஒரு சிறிய நிரலை உள்ளிட்டு எண்டர் தட்டவேண்டும். வெயிட், வெயிட், ரொம்ப கஷ்டமில்லை, ஈஸி தான்..

ஸ்டெப் 1 : முதலில் உங்கள் ப்ரவுசரை (க்ரோம், பயர்பாக்ஸ், ஓபரா) ஒப்பன் செய்து, ஏதாவது ஒரு யூ.டியூப் வீடியோவை ஓப்பன் செய்க..(பீப் சாங் வேண்டாம் பாஸ்)

ஓப்பன் செய்தாச்சா ? பாட்டு ஓடுதா ? அப்படியே ஓடட்டும் விடுங்க..

ஸ்டெப் 2:  இந்த குறிப்பிட்ட ஷார்ட் கட் கீயை உங்க ப்ரவுசரில் அழுத்தவும்..

க்ரோம், ஓபரா : Control + Shift + J
பயபாக்ஸ் : Control + Shirt + K

இப்ப ஒரு கன்ஸோல் விண்டோ வருதா ?

ஸ்டெப் 3 :  இந்த குறிப்பிட்ட நிரலை உள்ளீடு செய்து எண்டர் தட்டவும்..


document.cookie="VISITOR_INFO1_LIVE=oKckVSqvaGw; path=/; domain=.youtube.com";window.location.reload();
அஷ்டே !!

இனி உங்கள் உலாவியில் யூடியூப் பயன்படுத்தும்போது எந்த விளம்பரமும் வராது !!!


Thursday, November 12, 2015

தேச தந்தைகள்

தந்தைகள்

ஒப்பிலக்கணத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் கால்டுவெல்
.
சிறு கதையின் தந்தை செல்வகேசவராய முதலியார்.

இந்திய சினிமாவின் தந்தை தாதா சாஹேப் பால்கே.

இந்திய விண்வெளியின் தந்தை விக்ரம் சாராபாய்.

இந்திய அணு விஞ்ஞானத்தின் தந்தை ஹோமி பாபா.

இந்திய ஓவியத்தின் தந்தை ராஜா ரவிவர்மா

Wednesday, November 11, 2015

முதல் செயற்கைக்கோள்கள்

முதல் செயற்கைக்கோள்கள்

இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் - ஆர்யபட்டா.

ரஷியாவின்முதல் செயற்கைக்கோள் - ஸ்புட்னிக்.

அமெரிக்காவின் முதல் செயற்க்கைக்கோள் - எக்ஸ்புளோரர்.

சீனாவின் முதல் செயற்கைக்கோள் - ஸிஸோம் -1.

பிரான்சின் முதல் செயற்கைக்கோள் - ஏ - 1.

ஜப்பானின் முதல் செயற்கைக்கோள் - ஓசுமி.

கின்னஸ் உருவானது எப்படி?

கின்னஸ் உருவானது எப்படி?

உலகளவில் அதிகம் விற்பனையாகியுள்ள புத்தகம், கின்னஸ் புத்தகம். இதுவே ஒரு கின்னஸ் சாதனை தானே! இந்த புத்தகம் உருவானது எப்படி தெரியுமா? உண்மையில் கின்னஸ் என்பது அயர்லாந்தை சேர்ந்த ஒரு பீர் கம்பெனி. 1759 முதல் இயங்கிவரும் இந்த பாரம்பரிய நிறுவனத்தில் 1946ல் சர் ஹக் பீவர் என்பவர் நிர்வாக இயக்குனராக பொறுப்பேற்றார். பீவர் ஒருநாள் வேட்டைக்கு சென்றார். காட்டில் ‘கோல்டன் ப்ளோவர்’ என்ற பறவையை சுட்டார். அது துப்பாக்கி குண்டு வேகத்தையும் மிஞ்சி பறந்து தப்பியது.
அப்படியென்றால் ஐரோப்பாவிலேயே மிகவேகமாக செயலாற்றும் பறவை கோல்டன் ப்ளோவர் தானா என்ற சந்தேகம் அவருக்கு வந்தது. ஆனால் இதை உறுதி செய்யவோ மறுக்கவோ எந்த குறிப்பேடும் இல்லாதது அவருக்கு வருத்தத்தை தந்தது. தானே அப்படி ஒரு புத்தகத்தை தயாரித்தால் என்ன என்று அவர் நினைத்தார்.அவர் வேலை பார்த்த கின்னஸ் நிறுவனமே அவரின் முயற்சிக்கு உதவியது.

அதன் பயனாக, 25/9/1955 ஆம் ஆண்டு 'GUINESS BOOK OF THE WORLD' என்ற பெயரில் 198 பக்கங்களுடன் வெளிவந்தன. ஆயிரம் பிரதிகள் மட்டுமே முதலில் அச்சடிக்கப்பட்டன. தற்போது 37 மொழிகளில் அச்சிடப்படும் கின்னஸ் புத்தகம்10 கோடி பிரதிகள் விற்பனை ஆகிறது.

Monday, November 9, 2015

சிறப்புப் பெயர்கள்

சிறப்புப் பெயர்கள்
கடல்களின் அரசி - பசிபிக் பெருங்கடல்

அரபிகடலின் அரசி - கொச்சி (கேரளா)

ஏட்ரியாட்டிக்சின் அரசி - வெனிஸ் (இத்தாலி)

மலை வாழிடங்களின் அரசி - ஊட்டி (தமிழ் நாடு)

டெக்கானின் அரசி - புனே (மராட்டியம்)

பால்டிக்கடலின் பேரரசி - ஸ்டாக்ஹோம்(சுவீடன்)

கடற்கரையின் அரசி - கோவா

சாத்பூர மலையின் அரசி - பஞ்ச்மடி

மலைகளின் இளவரசி - கொடைக்கானல்(தமிழ்நாடு)

Sunday, November 8, 2015

கண்டுபிடித்தவர்கள்

கண்டுபிடித்தவர்கள்

போனோகிராப் - எடிசன்.

டிரான்சிஸ்டர் - ஷீக்லே.

கேமிரா - லூமியர் சகோதரர்கள்.

பேசும் படம் - வார்னர் சகோதரர்கள்.

காண்டாக்ட் லென்ஸ் - டேவல்.

ஈ.சி.ஜி. இயந்திரம் - ஐந்தோலன்

வடிவமைப்பாளர்கள்

வடிவமைப்பாளர்கள்

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலையை வடிவமைத்தவர் - சபர்ணா ராய் சவுத்ரி.
பழைய டெல்லியை வடிவமைத்தவர் - ஷாஜகான்.
புது டெல்லியைவடிவமைத்தவர் - எட்வின் லூட்தயன்ஸ்.
கல்கத்தா மாநகரை வடிவமைத்தவர் - ஜாப் சார்நாக்.
சண்டிகரை வடிவமைத்தவர் - லேதகார் பூசியர்.
ஐதராபாத்தை வடிவமைத்தவர் - முகமது அலி குதுப்ஷா.

Saturday, November 7, 2015

சுயசரிதைகள் /

சுயசரிதைகள்

கிரிக்கட் வீரர் கபில்தேவின் சுயசரிதை - ”ஸ்ட்ரெயிட் பிரம் தி ஹார்ட்”

சதாம் உசேனின் சுயசரிதை - “மென் அண்ட் எ சிட்டி”

எழுத்தாளர் தஸ்லிமா நஸ் ரீனின் சுயசரிதை - “த்விகாந்திதா”

ஹிலாரி கிளிண்டனின் சுயசரிதை - “லிவிங் ஹிஸ்டரி”

சிதார் இசை மேதை ரவிசங்கரின் சுயசரிதை - “ராகமாலிகை”

எழுத்தாளர் கமலா தாஸின் சுயசரிதை - “மை ஸ்டோரி”

முன்னால் கிரிக்கட் வீரர் ஜாவித் மியாண்டட்டின் சுயசரிதை - ”கட்டிங் எட்ஜ்

Tuesday, November 3, 2015

Mobile Phone Important Codes

செல்லிடப்பேசி முக்கிய எண்கள்...

*#06# – அனைத்து மொபைலுக்கும் IMEI எண் பார்க்க
*#0000# – தயாரிப்பு தேதி பார்க்க
#*2472# –... தங்கள் போனின் சார்ஜிங் நிலைமை அறிய
*#7780# – பேக்டரி அமைப்பை கொண்டுவர
*8375# – மொபைல் போனில் உள்ள சாப்ட்வேர் தொகுப்பின் பதிப்பு எண் என்று அறிய
*#8999*778# – சிம் கார்ட் பற்றிய தகவல்களை அறிய
#*#8377466# – போனின் ஹாட்வேரின் தன்மை மற்றும் தயாரிப்பு அறிய
*#67705646# – clears the LCD display(operator logo).
*#147# – This lets you know who called you last (Only vodofone).
*#1471# – Last call (Only vodofone).
‪#‎pw‬+1234567890+1# – Provider Lock Status.
#pw+1234567890+2# – Network Lock Status.
#pw+1234567890+3# – Country Lock Status.
#pw+1234567890+4# – SIM Card Lock Status.

Monday, November 2, 2015

பெயர் மாற்றப்பட்ட நாடுகள்

பெயர் மாற்றப்பட்ட நாடுகள்

1.டச்சு கயானா --- சுரினாம்.

2.அப்பர் வோல்டா --- புர்க்கினா பாஸோ

3.அபிசீனியா --- எத்தியோப்பியா

4.கோல்டு கோஸ்ட் --- கானா

5.பசுட்டோலாந்து --- லெசதொ

6.தென்மேற்கு ஆப்பிரிக்கா --- நமீபியா

7.வட ரொடீஷியா --- ஜாம்பியா

8.தென் ரொடீஷியா --- ஜிம்பாப்வே

9.டாங்கனீகாம,சன்ஸிபார் --- தான்சானியா

10.கோட்டே டி ஐவோயர் --- ஐவரி கோஸ்ட் 11.சாயிர் --- காங்கோ

13.சோவியத்யூனியன் --- ரஷ்யா

14.பர்மா --- மியான்மர்

15.கிழக்கு பாக்கிஸ்தான் --- பங்க்களாதேஷ்

16.சிலோன் --- ஸ்ரீலங்கா

17.கம்பூச்சியா --- கம்போடியா

18.பாரசீகம்,பெர்ஷியா --- ஈரான்

19.மெஸமடோமியா --- ஈராக்

20.சயாம் --- தாய்லாந்து
21.பார்மோஸ --- தைவான்

22.ஹாலந்து --- நெதர்லாந்து

23.மலாவாய் --- நியூசிலாந்து

24.மலகாஸி --- மடகாஸ்கர்

25.பாலஸ்தீனம் --- இஸ்ரேல்

26.டச் ஈஸ்ட் இண்டீஸ் --- இந்தோனேசியா

27.சாண்ட்விச் தீவுகள் --- ஹாவாய்

28.அப்பர் பெரு --- பொலிவியா

29.பெக்குவானாலாந்து --- போட்ஸ்வாd