Sunday, October 11, 2020

"சீட்டு விளையாட்டில்.. சுவாரஸ்யமான உண்மைகள் ....

  "சீட்டு விளையாட்டில்...

  சுவாரஸ்யமான சில உண்மைகள் ....

 

 நீங்கள் விளையாடும் அட்டைகளின் 

பாரம்பரிய தளம் ஒரு காலெண்டரின் 

ஒத்திசைவான வடிவம் என்பது 

உங்களுக்குத் தெரியுமா?


ஒரு வருடத்தில் 52 வாரங்கள் உள்ளன. 

எனவே ஒரு சீட்டுக்கட்டில் 52 விளையாட்டு

 சீட்டுகள் உள்ளன.

ஒவ்வொரு பருவத்திலும் 13 வாரங்கள் உள்ளன

. இதனால் ஒவ்வொரு குரூப்பில்

 13 சீட்டுகள் உள்ளன.

ஒரு வருடத்தில் 4 பருவங்கள் - 

அந்த வகையில் 4 குறியீட்டு சீட்டுகள்  உள்ளன.

 ஒரு வருடத்தில் 12 மாதங்கள் உள்ளன

. எனவே 12 நீதிமன்ற அட்டைகள் உள்ளன

 (ஒவ்வொரு குரூப்பிலும் ஜாக், ராணி, கிங் 

என்ற முகங்களைக் கொண்டவர்கள்) 

சிவப்பு அட்டைகள் பகலைக் குறிக்கின்றன.

கருப்பு அட்டைகள் இரவைக் குறிக்கின்றன. 


நீங்கள் அனுமதித்தால்

 ஜாக்ஸ் = 11, குயின்ஸ் = 12

, மற்றும் கிங்ஸ் = 13,  பின்னர்

 1 + 2 + 3 +… 13 = 91 வரை

 அனைத்து தொகைகளையும்

 சேர்க்கவும். 

இதை 4 ஆல் பெருக்கி,

 4 வழக்குகளுக்கு, 

எனவே 91 x 4 = 364, ஜோக்கர் என்று 

1 ஐச் சேர்க்கவும்,

 ஒரு வருடத்தில் நாட்கள் என்ற 

365 எண்ணை 

நீங்கள் அடைவீர்களா?


இது வெறும் தற்செயலானதா

 அல்லது

 அதிக புத்திசாலித்தனமா?


 சீட்டுகளின் அனைத்து 

பெயர்களிலும் 

உள்ள மதிப்புகள் கூட்டுத்தொகை ; 

எ.கா: "ஒன்று, இரண்டு, மூன்று, 

நான்கு, ஐந்து, 

ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது, 

பத்து, ஜாக், ராணி, 

கிங்" = 52!

 மண்வெட்டி உழுதல் / வேலை 

செய்வதைக்

 குறிக்கிறது.

உங்கள் பயிர்களை நேசிப்பதை 

இதயங்கள் குறிக்கின்றன.

 கிளப்புகள் செழிப்பையும்

 வளர்ச்சியையும்

 குறிக்கின்றன.

 வைரங்கள் செல்வத்தை அறுவடை 

செய்வதைக்  குறிக்கின்றன. 

மேலும், சில அட்டை 

விளையாட்டுகளில்,

 2 ஜோக்கர்கள்  பயன்படுத்தப்படுகிறார்கள். 

லீப் ஆண்டைக் குறிக்கிறது. 

கார்டுகளை விளையாடுவதை விட 

ஆழமான தத்துவம் உள்ளது. 

கணிதம் பரிபூரணமானது.

 

***************************** 

Friday, October 9, 2020

வலம் இடமாக வாசிக்கவும்

 *சொல்லின் முதலெழுத்தை எடுத்துக் 

கடைசியில் சேர்த்து - வலம் இடமாக 

வாசிக்கவும். வரும் வார்த்தை- அதே;அதே.*


கம்பம்

பொன்னன்

ரம்பம்

பாதிமதி

சிம்மம்

நீதிபதி

கும்பம்

அன்பன்

அதிபதி

காசிவாசி 

கோடுபோடு

இடுகாடு- சுடுகாடு

வீடுதேடு

கோல்மால்

பாசிஊசி

ஆல்போல்

பிம்பம்

சோலைமலை

கடைமடை

கூடைமுடை 

சடுகுடு

சின்னன்- சின்னான்

மெய்யாய்-பொய்யாய்

கைலைமலை

பாரிஓரி

மன்னன்...

                       *-யாமறிந்த மொழிகளிலே 

தமிழ்மொழிபோல்  இனிதாவதெங்குங் 

காணோம்....

*********************** 

Thursday, October 8, 2020

ஆசிரியர் மகிமை

 

ஆசிரியர் மகிமை..."


T - Tact. - சாமர்த்தியம்

E - Education. -கல்வியறிவு

A - Ability. - திறமை

C - Character. நன்னடத்தை

H - Health. - ஆரோக்கியம்

E - Enthusiasm. - ஊக்கம்

R- Regularity ஒழுங்குமுறை

♦♦♦

 

SCHOOL 

என்ற ஆறு எழுத்து சொல்லிற்கு 

விளக்கம்.


S - Sincere. - உண்மை

C - Character. - நடத்தை

H - Health. - ஆரோக்கியம்

O - Obedient. - கீழ்ப்படிவு

O - Order. - ஒழுங்கு

L - Learn. - அறிவு

Wednesday, October 7, 2020

ரகசியத்தை அந்த #இயற்கை வைத்துள்ளது

       உண்ணும்உணவினால் தான்,

மனிதன் உயிர் வாழ்கிறான் 

எனில்,இந்த உலகில் 

எந்த மனிதனும்

#மரணமடைய கூடாது.


சுவாசிக்கும் காற்றால் தான்

, மனிதன் உயிர் வாழ்கிறான் 

எனில்,சுவாசிக்கும் எந்த மனிதனும்

#மரணமடைய கூடாது.


மனிதன் உயிர் வாழவும்,

மரணமடையவும்

ஏதோ ஒரு ரகசியத்தை

அந்த #இயற்கை வைத்துள்ளது



Tuesday, October 6, 2020

*Wonderful questions

 

*Wonderful questions 

to your General Knowledge


3.  How many teaspoons make a Table spoon? 


4 . How many Vedas are there in Hindu Mythology?


6.  How many countries have larger area than India?


7.  What is the Ph value of water?


8.  How many planets are there in Solar System?


10. How many  Millimetres make a Centimetre?


11. How many players are there in a Football team?


12. How many inches make a feet?


15. One-time vehicle tax is valid for how many years?


16. How many feathers are there in a shuttle cock?


17. How many languages are printed in an Indian Currency?


18. How many Chapters are there in Mahabharatha?


19. Which Commonwealth Game was hosted in India in 2010?


20. How many overs per team are there in T-20 cricket?  


21. How many years did Mahatma Gandhi spend in South Africa?


23. How many chromosomes are there in human body?


24. How many spokes are there in an Ashoka Chakra?


ML25. What is the qualifying age for becoming a MLA?


 *Don't panic, please.* 

*The question numbers are the #answers.*



Monday, October 5, 2020

மனுதர்மநூல்

 

மனுதர்மநூலை_ஆங்கிலத்தில்_

மொழிபெயர்த்தவர்_

சர்_வில்லியம்_ஜோன்ஸ்

(1794)


“தனது கால் தடத்தை தானே 

அழித்துக்கொண்டு செல்ல வேண்டும். 

எச்சில் துப்ப கழுத்தில் கலையம்.


#மனுதர்ம ஆட்சியின் போது

 #தலித் மக்களுக்கு எங்கெல்லாம் 

#தடைகள் இருந்தது??


1.பொதுக்கிணற்றில் நீர் எடுக்க தடை.

2. சுடுகாட்டில் தம் பிணம் எரிக்கத் தடை.

3. குளங்களில் குளிக்க தடை.

4. தெருக்களை பயன்படுத்த தடை.

5. மேற்சட்டை, வேட்டி, சால்வை அணிய தடை.

6. மீசை விடத்தடை.

7. தாவணி, தங்க ஆபரணங்கள் போடத்தடை.

8. செருப்பு அணிய தடை.

9. குடுமி, கடுக்கண் போட தடை.

10. ரயில் பயணிக்க தடை.

11. பேருந்துகளில்  இருக்க தடை.

12. பாடசாலையில் படிக்க தடை.

13. கோவில் பயன்படுத்த தடை.

14. பொது நிறுவனங்களில் உட்புக தடை.

15. மருத்துவ வசதி தடை.

16. வேற்று உழைப்பு வழிமுறை தடை.


* இவையெல்லாம் இந்த மண்ணில்

 பல சமூகம் அனுபவிக்க காரணமே இ

ங்கிருந்த மனுதர்ம ஆட்சி முறைகளே..


* இத்தனை தடைகளையும் ஒரு 

சமூகம் 2000 ஆண்டுகளாக அனுபவித்த

 கொடுமை உலகில் எங்கேனும் உண்டா?? 


* 70 ஆண்டுகால அரசியலைமைப்பை

 இவர்களால் சகித்துக் கொள்ள இயலாத போது

 .. 2000 ஆண்டுகால மனுதர்ம 

கொடுங்கோல் ஆட்சி முறைகளை எப்படி 

ஒடுக்கப்பட்ட மக்களால்

 ஏற்றுக்கொள்ள இயலும்??


* சொந்த மண்ணில் வாழ்ந்த மக்களுக்கு

 அரசு இடம் ஒதுக்கி வீடு கொடுக்கும் 

நிலைக்கு தள்ளியது இந்த மனுதர்ம 

ஆட்சி முறையால் தான்.


* இந்த மனுதர்ம நூல் 2685 

செய்யுட்களாகவும்,

 3 பகுதிகளாகவும், 

12 அத்தியாயங்களாகவும் 

அமைந்துள்ளது. 


* இந்நூலை முதலில் கல்கத்தா

 உச்ச நீதிமன்றத்தின் நீதியரசர் 

சர்.வில்லியம் ஜோன்ஸ் என்பார் 

1794ல் சமசுகிருதத்தில் இருந்து 

ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்.

. ….. …. 



Sunday, October 4, 2020

மேல ஒருத்தன் இருக்கிறானாம்.?

 

மேல ஒருத்தன்

 இருக்கிறானாம்.

எல்லாத்தையும் 

பார்க்கிறானாம்.


பிறப்பதையும் 

பார்க்கிறானாம்.

இறப்பதையும் 

பார்க்கிறானாம்.


கல்லைக் கடவுளாக 

உணர்வதையும் பார்க்கிறானாம்.

கருவறையில் தன் 

காலடியில் புணர்வதையும் 

பார்க்கிறானாம்.


உண்டியல்ல காசு

 போடறதையும் 

பார்க்குறானாம்.

உண்டியலையே 

களவாடறதையும் 

பார்க்கிறானாம்.


சிலை வணக்கத்தையும்

 பார்க்கிறானாம்.

சிலை கடத்தலையும் 

பார்க்கிறனாம்.


பெண்ணை 

வணங்கினாலும்

 பார்க்கிறானாம்.

தீட்டுன்னு விரட்டினாலும்

 பார்க்கிறானாம்.


பிஞ்சு கையால 

படையல் சோறு 

போட்டாலும் பார்க்கிறானாம்.

அப்பிஞ்சையே அறுத்து கூறு

 போட்டாலும் பார்க்கிறானாம்..


மேல ஒருத்தன் இருக்கிறானாம்...?


எல்லாத்தையும்

வேடிக்கைதான் பார்ப்பான் போல...?


வேடிக்கைதான் 

நாமே நல்லா பார்ப்போமே... 

அவன் என்னாத்துக்குங்க...??? 

 

#படித்ததில்_சிரித்தது

இது தான் தமிழ் !

 

புத்தகத்தை படிக்கவிட்டாலும் 

பெயரையாவது படிங்கப்பா...

 இத்தனை நூல்களையும் தாண்டி த

மிழ் அழிந்துவிடும் என நினைப்பதுதான்

 வியப்பு..


இது தான் தமிழ் ! அனைத்தையும்

 படிக்க ஒரு பிறவி போதாது..


பெயர்களையாவது படித்து

 அறிவோம்..


1. தேவாரம் 

2. திருவாசகம்

3. திருமந்திரம்

4. திருவருட்பா 

5. திருப்பாவை 

6. திருவெம்பாவை 

7. திருவிசைப்பா

8. திருப்பல்லாண்டு

9. கந்தர் அனுபூதி

10. இந்த புராணம்

11. பெரிய புராணம்

12. நாச்சியார் திருமொழி 

13. ஆழ்வார் பாசுரங்கள் போன்ற 

மிகச் சிறந்த பக்தி இலக்கியங்கள்..!


1.நற்றிணை 

2.குறுந்தொகை 

3.ஐங்குறுநூறு 

4.அகநானூறு 

5.புறநானூறு 

6.பதிற்றுப்பத்து 

7.பரிபாடல் 

8.கலித்தொகை என்னும்

 "எட்டுத்தொகை" சங்க நூல்கள்.. !


1.திருமுருகாற்றுப்படை

 2.சிறுபாணாற்றுப்படை

 3.பெரும்பாணாற்றுப்படை

 4.பொருநராற்றுப்படை 

5.முல்லைப்பாட்டு 

6.மதுரைக்காஞ்சி 

7.நெடுநல்வாடை 

8.குறிஞ்சிப் பாட்டு 

9.பட்டினப்பாலை 

10.மலைபடுகடாம் என்னும்

 "பத்துப்பாட்டு" சங்க நூல்கள்....!


1.திருக்குறள் 

2.நாலடியார் 

3.நான்மணிக்கடிகை 

4.இன்னாநாற்பது 

5.இனியவை நாற்பது 

6.கார் நாற்பது 

7.களவழி நாற்பது 

8.ஐந்திணை ஐம்பது 

9.திணைமொழி ஐம்பது 

10.ஐந்திணை எழுபது 

11.திணைமாலை  நூற்றைம்பது 

12.திரிகடுகம் 

13.ஆசாரக்கோவை 

14.பழமொழி 

15.சிறுபஞ்சமூலம் 

16.முதுமொழிக் காஞ்சி 

17.ஏலாதி 

18.இன்னிலை என்னும் 

பதினெண்கீழ்க்கணக்கு நீதி நூல்கள்...!


1.சிலப்பதிகாரம் 

2.மணிமேகலை 

3.சீவக சிந்தாமணி 

4. வளையாபதி 

5. குண்டலகேசி 

போன்ற ஐம்பெருங்காப்பியங்கள்... !


1.அகத்தியம்  

2.தொல்காப்பியம்

3.புறப்பொருள்

வெண்பாமாலை 

4.நன்னூல் 

5.பன்னிரு பாட்டியல் போன்ற இலக்கண நூல்கள் மற்றும்

6.இறையனார் களவியல் உரை எனும் உரைநூல்..!


1.கம்பராமாயணம்-வழிநூல்.


1.முத்தொள்ளாயிரம் 

2.முக்கூடற்பள்ளு 

3.நந்திக்கலம்பகம் 

4.கலிங்கத்துப்பரணி 

5.மூவருலா போன்ற எண்ணற்ற

 சிற்றிலக்கிய வகைகள்...!


ஒரு மொழியின் மிகச்சிறந்த பண்பே

 செம்மொழிக்கான கீழ்க்கண்ட 

பதினோரு தகுதிகளைக்

 கொண்டிருப்பதுதான்..


1.தொன்மை 

2.தனித்தன்மை

 (தூய்மைத் தன்மை) 

3.பொதுமைப் பண்புகள் 

4.நடுவுநிலைமை 

5.தாய்மைத் தன்மை 

6.கலை பண்பாட்டுத் தன்மை 

7.தனித்து இயங்கும் தன்மை 

8.இலக்கிய இலக்கண வளம் 

9.கலை இலக்கியத் தன்மை 

10.உயர் சிந்தனை 

11.மொழிக் கோட்பாடு

இந்தப் பதினோரு பண்புகளையும்

 கொண்ட உலகின் மிக 

மூத்த மொழி என் தாய்மொழி தமிழ்..!


சமய குரவர்கள்

----------------------------


1. திருஞானசம்பந்தர்

2. திருநாவுக்கரசர்

3. சுந்தரமூர்த்தி சுவாமிகள்

4. மாணிக்கவாசகர்


சைவம் வளர்த்தோர்

-----------------------------------

1. சேக்கிழார்

2. திருமூலர்

3. அருணகிரிநாதர்

4. குமரகுருபரர்


12 ஆழ்வார்கள்

---------------------------

1. பொய்கையாழ்வார்

2. பூதத்தாழ்வார்

3. பேயாழ்வார்

4. திருமழிசை ஆழ்வார்

5. நம்மாழ்வார்

6. மதுரகவி ஆழ்வார்

7. குழசேகராழ்வார்

8. பெரியாழ்வார்

9. ஆண்டாள் நாச்சியார்

10. தொண்டரடிப் 

பொடியாழ்வார்

11. திருப்பாணாழ்வார்

12. திருமங்கையாழ்வார்

-----------------------


தமிழ் பெரும் புலவர்கள் பட்டியல்..!

------------------------------------------------------------

அகம்பன் மாலாதனார்

அஞ்சியத்தை மகள் நாகையார்

அஞ்சில் அஞ்சியார்

அஞ்சில் ஆந்தையார்

அடைநெடுங்கல்வியார்

அணிலாடு முன்றிலார்

அண்டர் மகன் குறுவழுதியார்

அதியன் விண்ணத்தனார்

அதி இளங்கீரனார்

அம்மூவனார்

அம்மெய்நாகனார்

அரிசில் கிழார்

அல்லங்கீரனார்

அழிசி நச்சாத்தனார்

அள்ளூர் நன்முல்லையார்

அறிவுடைநம்பி

ஆரியன் பெருங்கண்ணன்

ஆடுதுறை மாசாத்தனார்

ஆதிமந்தி

ஆர்க்காடு கிழார் மகனார் 

வெள்ளைக்கண்ணத்தனார்

ஆலங்குடி வங்கனார்

ஆலத்தூர் கிழார்

ஆலம்பேரி சாத்தனார்

ஆவூர்கிழார் மகனார் கண்ணனார்

ஆவூர் காவிதிகள் சகாதேவனார்

ஆவூர்கிழார்

ஆலியார்

ஆவூர் மூலங்கீரனார்

இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார்

இடைக்காடனார்

இடைக்குன்றூர்கிழார்

இடையன் சேந்தன் கொற்றனார்

இடையன் நெடுங்கீரனார்

இம்மென்கீரனார்

இரணியமுட்டத்து 

பெருங்குன்றூர்ப் 

பெருங்கௌசிகனார்

இருங்கோன் ஒல்லையன்

 செங்கண்ணனார்

இருந்தையூர்க் கொற்றன் புலவன்

இரும்பிடர்தலையார்

இளங்கீரந்தையார்

இளங்கீரனார்

இளநாகனார்

இளந்திரையன்

இளந்தேவனார்

இளம்புல்லூர்க் காவிதி

இளம்பூதனார்

இளம்பெருவழுதி

இளம்போதியார்

இளவெயினனார்

இறங்குடிக் குன்றநாடன்

இறையனார்

இனிசந்த நாகனார்

ஈழத்துப் பூதந்தேவனார்

உகாய்க் குடிகிழார்

உக்கிரப் பெருவழுதி

உமட்டூர் கிழார் மகனார் 

பரங்கொற்றனார்

உம்பற்காட்டு 

இளங்கண்ணனார்

உருத்திரனார்

உலோச்சனார்

உவர்கண்ணூர்

 

 புல்லங்கீரனார்

உழுந்தினைம் புலவர்

உறையனார்

உறையூர் இளம்பொன் வாணிகனார்

உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்

உறையூர்க் கதுவாய்ச் சாத்தனார்

உறையூர்ச் சல்லியங் குமரனார்

உறையூர்ச் சிறுகந்தனார்

உறையூர்ப் பல்காயனார்

உறையூர் மருத்துவன் தாமோதரனார்

உறையூர் முதுகண்ணன் சாத்தனார்

ஊட்டியார்

ஊண்பித்தை

ஊண்பொதி பசுங்குடையார்

எயிற்றியனார்

எயினந்தையார்

எருமை வெளியனார்

எருமை வெளியனார் மகனார் கடலனார்

எழூப்பன்றி நாகன் குமரனார்

ஐயாதி சிறு வெண்ரையார்

ஐயூர் முடவனார்

ஐயூர் மூலங்கீரனார்

ஒக்கூர் மாசாத்தனார்

ஒக்கூர் மாசாத்தியார்

ஒருசிறைப் பெரியனார்

ஒரூத்தனார்

ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன்

ஓதஞானி

ஓதலாந்தையார்

ஓரம்போகியார்

ஓரிற்பிச்சையார்

ஓரேர் உழவர்

ஔவையார்

............

கங்குல் வெள்ளத்தார்

கச்சிப்பேடு இளந்தச்சன்

கச்சிப்பேடு காஞ்சிக்கொற்றனார்

கச்சிப்பேடு பெருந்தச்சனார்

கடம்பனூர்ச் சாண்டில்யன்

கடலூர்ப் பல்கண்ணனார்

கடியலூர் உருத்திரங்கண்ணனார்

கடுந்தொடைக் காவினார்

கோவர்த்தனர்

கோவூர்க் கிழார்

கோவேங்கைப் பெருங்கதவனார்

கோழிக் கொற்றனார்

கோளியூர்க் கிழார் மகனார் செழியனார்

கோனாட்டு எறிச்சலூர் மாடலன்

 மதுரைக்குமரன்

சங்கவருணர் என்னும் நாகரியர்

சத்திநாதனார்

சல்லியங்குமரனார்

சாகலாசனார்

சாத்தந்தந்தையார்

சாத்தனார்

சிவப்பிரகாசர்

சிறுமோலிகனார்

சிறுவெண்டேரையார்

சிறைக்குடி ஆந்தையார்

சீத்தலைச் சாத்தனார்

செங்கண்ணனார்

செம்பியனார்

செம்புலப்பெயல்நீரார்

செயலூர் இளம்பொன்சாத்தன் கொற்றனார்

செய்திவள்ளுவன் பெருஞ்சாத்தன்

செல்லூர்கிழார் மகனார் பெரும்பூதன் கொற்றனார்

செல்லூர்க்கோசிகன் கண்ணனார்

சேந்தங்கண்ணனார்

சேந்தம்பூதனார்

சேந்தங்கீரனார்

சேரமானெந்தை

சேரமான் இளங்குட்டுவன்

சேரமான் கணைக்கால் 

இரும்பொறை

சேரமான் கோட்டம்பலத்துத் 

துஞ்சிய மாக்கோதை

சோனாட்டு முகையலூர்ச்

 சிறுகருந்தும்பியார்

சோழன் குளமுற்றத்துத்

 துஞ்சிய கிள்ளிவளவன்

சோழன் நலங்கிள்ளி

சோழன் நல்லுருத்திரன்

தங்கால் ஆத்திரேயன்

 செங்கண்ணனார்

தங்கால் பொற்கொல்லன்

 வெண்ணாகனார்

தனிமகனார்

தாமாப்பல் கண்ணனார்

தாமோதரனார்

தாயங்கண்ணனார்

தாயங்கண்ணியார்

தாயுமானவர்

திப்புத்தோளார்

திருத்தாமனார்

தீன்மதிநாகனார்

தும்பிசேர்கீரனார்

துறைக்குறுமாவிற் 

பாலங்கொற்றனார்

துறையூர்ஓடைக்கிழார்

தூங்கலோரியார்

தேய்புரி பழங்கயிற்றினார்

தேரதரன்

தேவகுலத்தார்

தேவனார்

தொடித்தலை விழுத்தண்டினர்

தொண்டி ஆமூர்ச்சாத்தனார்

தொல்கபிலர்

நக்கண்ணையார்

நக்கீரர்

நப்பசலையார்

நப்பண்ணனார்

நப்பாலத்தனார்

நம்பிகுட்டுவன்

நரிவெரூத்தலையார்

நரைமுடி நெட்டையார்

நல்லச்சுதனார்

நல்லந்துவனார்

நல்லழிசியார்

நல்லாவூர்க் கிழார்

நல்லிறையனார்

நல்லுருத்திரனார்

நல்லூர்ச் சிறுமேதாவியார்

நல்லெழுநியார்

நல்வழுதியார்

நல்விளக்கனார்

நல்வெள்ளியார்

நல்வேட்டனார்

நற்சேந்தனார்

நற்றங்கொற்றனார்

நற்றமனார்

நன்பலூர்ச் சிறுமேதாவியார்

நன்னாகனார்

நன்னாகையார்

நாகம்போத்தன்

நாமலார் மகன் இளங்கண்ணன்

நிகண்டன் கலைக்கோட்டுத் 

தண்டனார்

நெடுங்கழுத்துப் பரணர்

நெடும்பல்லியத்தனார்

நெடும்பல்லியத்தை

நெடுவெண்ணிலவினார்

நெட்டிமையார்

நெய்தற் கார்க்கியார்

நெய்தற் சாய்த்துய்த்த 

ஆவூர்க்கிழார்

நெய்தற்றத்தனார்

நொச்சி நியமங்கிழார்

நோய்பாடியார்

பக்குடுக்கை நன்கணியார்

படுமரத்து மோசிகீரனார்

படுமரத்து மோசிக்கொற்றனார்

பதடிவைகலார்

பதுமனார்

பரணர்

.............

கடுந்தொடைக் கரவீரன்

கடுவன் இளமள்ளனார்

கடுவன் இளவெயினனார்

கடுவன் மள்ளனார்

கணக்காயன் தத்தனார்

கணியன் பூங்குன்றனார்

கண்ணகனார்

கண்ணகாரன் கொற்றனார்

கண்ணங்கொற்றனார்

கண்ணம் புல்லனார்

கண்ணனார்

கதக்கண்ணனார்

கதப்பிள்ளையார்

கந்தரத்தனார்

கபிலர்

கம்பர்

கயத்தூர்கிழார்

கயமனார்

கருங்குழலாதனார்

கரும்பிள்ளைப் பூதனார்

கருவூர்க்கிழார்

கருவூர் கண்ணம்பாளனார்

கருவூர் கதப்பிள்ளைச் சாத்தனார்

கருவூர் கலிங்கத்தார்

கருவூர் கோசனார்

கருவூர் சேரமான் சாத்தன்

கருவூர் நன்மார்பனார்

கருவூர் பவுத்திரனார்

கருவூர் பூதஞ்சாத்தனார்

கருவூர் பெருஞ்சதுக்கத்துப் பூதனார்

கல்பொருசிறுநுரையார்

கல்லாடனார்

கவைமகன்

கழாத்தலையார்

கழார்க் கீரனெயிற்றியனார்

கழார்க் கீரனெயிற்றியார்

கழைதின் யானையார்

கள்ளிக்குடிப்பூதம்புல்லனார்

கள்ளில் ஆத்திரையனார்

காக்கைப்பாடினடியார் நச்செள்ளையார்

காசிபன் கீரன்

காட்டூர்கிழார் மகனார் கண்ணனார்

காப்பியஞ்சேந்தனார்

காப்பியாற்றுக் காப்பியனார்

காமஞ்சேர் குளத்தார்

காரிக்கிழார்

காலெறி கடிகையார்

காவட்டனார்

காவற்பெண்டு

காவன்முல்லையார்

காவிரிப் பூம்பட்டினத்துக் கந்தரத்தனார்

காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்

காவிரிப் பூம்பட்டினத்துச் செங்கண்ணனார்

காவிரிப் பூம்பட்டினத்துச் சேந்தன் கண்ணனார்

காவிரிப் பூம்பட்டினத்துப் பொன்வாணிகனார்

 மகனார் நப்பூதனார்

கிடங்கில் காவிதிக் கீரங்கண்ணனார்

கிடங்கி்ல் காவிதிப் பெருங்கொற்றனார்

கிடங்கில் குலபதி நக்கண்ணனார்

கிள்ளிமங்கலங்கிழார்

கிள்ளிமங்கலங்கிழார் மகனார் 

சேரக்கோவனார்

கீரங்கீரனார்

கீரந்தையார்

குடபுலவியனார்

குடவாயிற் கீரத்தனார்

குட்டுவன் கண்ணனார்

குட்டுவன் கீரனார்

குண்டுகட் பாலியாதனார்

குதிரைத் தறியனார்

குப்பைக் கோழியார்

குமட்டூர் கண்ணனார்

குமுழிஞாழலார் நப்பசலையார்

குழற்றத்தனார்

குளம்பனார்

குளம்பாதாயனார்

குறமகள் இளவெயினி

குறமகள் குறியெயினி

குறியிறையார்

குறுங்கீரனார்

குறுங்குடி மருதனார்

குறுங்கோழியூர் கிழார்

குன்றம் பூதனார்

குன்றியனார்

குன்றூர்க் கிழார் மகனார்

கூகைக் கோழியார்

கூடலூர்க் கிழார்

கூடலூர்ப பல்கண்ணனார்

கூவன்மைந்தன்

கூற்றங்குமரனார்

கேசவனார்

கொடிமங்கலத்து வாதுளி

 நற்சேந்தனார்

கொட்டம்பலவனார்

கொல்லன் அழிசி

கொல்லிக் கண்ணன்

கொள்ளம்பக்கனார்

கொற்றங்கொற்றனார்

கோக்குளமுற்றனார்

கோடைபாடிய பெரும்பூதன்

கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்

கோட்டியூர் நல்லந்தையார்

கோண்மா நெடுங்கோட்டனார்

கோப்பெருஞ்சோழன்

பராயனார்

பரூஉமோவாய்ப் பதுமனார்

பறநாட்டுப் பெருங்கொற்றனார்

பனம்பாரனார்

பாண்டரங்கண்ணனார்

பாண்டியன் ஆரியப்படைகடந்த 

நெடுஞ்செழியன்

பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணனார்

பாண்டியன் தலையாலங்கானத்துச்

 செருவென்ற நெடுஞ்செழியன்

பாண்டியன் பன்னாடு தந்தான்

பாண்டியன் மாறன் வழுதி

பாரதம் பாடிய பெருந்தேவனார்

பாரிமகளிர்

பார்காப்பான்

பாலைக் கௌதமனார்

பாலை பாடிய பெருங்கடுங்கோ

பாவைக் கொட்டிலார்

பிசிராந்தையார்

பிரமசாரி

பிரமனார்

பிரான் சாத்தனார்

புதுக்கயத்து வண்ணக்கன்

 கம்பூர்கிழார்

புல்லாற்றூர் எயிற்றியனார்

பூங்கணுத் திரையார்

பூங்கண்ணன்

பூதங்கண்ணனார்

பூதபாண்டியன் தேவி 

பெருங்கோப்பெண்டு

பூதம்புல்லனார்

பூதனார்

பூதந்தேவனார்

பெருங்கண்ணனார்

பெருங்குன்றூர்க் கிழார்

பெருங்கௌசிகனார்

பெருஞ்சாத்தனார்

பெருஞ்சித்திரனார்

பெருந்தலைச்சாத்தனார்

பெருந்தேவனார்

பெருந்தோட் குறுஞ்சாத்தன்

பெரும் பதுமனார்

பெரும்பாக்கன்

பெருவழுதி

பேயனார்

பேய்மகள் இளவெயினி

பேராலவாயர்

பேரிசாத்தனார்

பேரெயின்முறுவலார்

பொதுக்கயத்துக் கீரந்தை

பொதும்பில் கிழார்

பொதும்பில் கிழார் மகனார் 

வெண்கண்ணி

பொதும்பிற் புல்லாளல் 

கண்ணியார்

பொத்தியார்

பொய்கையார்

பொருந்தில் இளங்கீரனார்

பொன்மணியார்

பொன்முடியார்

பொன்னாகன்

போதனார்

போந்தைப் பசலையார்

மடல் பாடிய மாதங்கீரனார்

மதுரை அளக்கர் ஞாழற் கவிஞர் மகனார் மள்ளனார்

மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்

மதுரை ஆசிரியர் கோடங்கொற்றனார்

மதுரை இளங்கண்ணிக் கௌசிகனார்

மதுரை இனங்கௌசிகனார்

மதுரை இளம்பாலாசிரியன் சேந்தன் கூத்தனார்

மதுரை ஓலைக்கடைக் கண்ணம் புகுந்தாராயத்தனார்

மதுரை ஓலைக்கடையத்தார் நல்வெள்ளையார்

மதுரைக் கடையத்தார் மகன் வெண்ணாகனார்

மதுரைக் கணக்காயனார்

மதுரைக் கண்டராதித்தனார்

மதுரைக் கண்ணத்தனார்

மதுரைக் கவுணியன் பூதத்தனார்

மதுரைக் கள்ளிற் கடையத்தன் வெண்ணாகனார்

மதுரைக் காமக்கணி நப்பாலத்தனார்

மதுரைக் காருலவியங் கூத்தனார்

மதுரைக் கூத்தனார்

மதுரைக் கொல்லன் புல்லன்

மதுரைக் கொல்லன் வெண்ணாகனார்

மதுரைச் சுள்ளம் போதனார்

மதுரைத் தத்தங்கண்ணனார்

மதுரைத் தமிழக்கூத்தனார் நாகன் தேவனார்

மதுரைத் தமிழக் கூத்தனார்

மதுரைப் படைமங்க மன்னியார்

மதுரைப் பாலாசிரியர் சேந்தங்கொற்றனார்

மதுரைப் பாலாசிரியர் நப்பாலனார்

மதுரைப் பாலாசிரியர் நற்றாமனார்

மதுரைப் புல்லங்கண்ணனார்

மதுரைப் பூதனிள நாகனார்

மதுரைப் பூவண்ட நாகன் வேட்டனார்

மதுரைப் பெருங்கொல்லன்

மதுரைப் பெருமருதனார்

மதுரைப் பெருமருதிளநாகனார்

மதுரைப் போத்தனார்

மதுரை மருதங்கிழார் மகனார் சொகுத்தனார்

மதுரை மருதங்கிழார் மகனார் பெருங்கண்ணனார்

மதுரை மருதங்கிழார் மகன் இளம்போத்தன்

மதுரை வேளாசன்

மருங்கூர்கிழார் பெருங்கண்ணனார்

மருங்கூர்ப் பட்டினத்துச் சேந்தன் குமரனார்

மருங்கூர்ப் பாகை சாத்தன் பிரியனார்

பூதனார்

மருதம் பாடிய இளங்கடுங்கோ

மருதனிளநாகனார்

மலையனார்

மள்ளனார்

மாங்குடிமருதனார்

மாடலூர் கிழார்

மாதீர்த்தன்

மாமிலாடன்

மாமூலனார்

மாயேண்டன்

மார்க்கண்டேயனார்

மாலைமாறன்

மாவளத்தன்

மாறோக்கத்துக் காமக்கண்ணியார்

மாறோக்கத்து நப்பசலையார்

மாற்பித்தியார்

மிளைக் கந்தன்

மிளைப் பெருங்கந்தன்

மிளைவேள் பித்தன்

மீனெறி தூண்டிலார்

முக்கல் ஆசான் நல்வெள்ளையார்

முடங்கிக் கிடந்த நெடுஞ்சேரலாதன்

முடத்தாமக்கண்ணியார்

முடத்திருமாறன்

முதுகூத்தனார்

முதுவெங்கண்ணனார்

முப்பேர் நாகனார்

முரஞ்சியயூர் முடிநாகராயர்

முள்ளியூர்ப் பூதியார்

முலங்கீரனார்

மையோடக் கோவனார்

மோசிக்கண்ணத்தனார்

மோசிக்கீரனார்

மோசிக்கொற்றன்

மோசிக்கரையனார்

மோசிசாத்தனார்

மோசிதாசனார்

வடநெடுந்தத்தனார்

வடவண்ணக்கன் தாமோதரன்

வடமோதங்கிழார்

வருமுலையாரித்தி

வன்பரணர்

வண்ணக்கன் சோருமருங்குமரனார்

வண்ணப்புறக் கந்தரத்தனார்

வாடாப்பிராந்தன்

வாயிலான் தேவன்

வாயிலிலங்கண்ணன்

வான்மீகியார்

விட்டகுதிரையார்

விரிச்சியூர் நன்னாகனார்

விரியூர் நன்னாகனார்

வில்லக விரலினார்

விழிகட்பேதை பெருங்கண்ணனார்

விற்றூற்று மூதெயினனார்

விற்றூற்று வண்ணக்கன் தத்தனார்

வினைத் தொழில் சோகீரனார்

வீரை வெளியனார்

வீரை வெளியன் தித்தனார்

வெண்கண்ணனார்

வெண்கொற்றன்

வெண்ணிக் குயத்தியார்

வெண்பூதன்

வெண்பூதியார்

வெண்மணிப்பூதி

வெள்ளாடியனார்

வெள்ளியந்தின்னனார்

வெள்ளிவீதியார்

வெள்வெருக்கிலையார்

வெள்ளைக்குடி நாகனார்

வெள்ளைமாளர்

வெறிபாடிய காமக்கண்ணியார்

வேட்டகண்ணன்

வேம்பற்றூர்க்கண்ணன் கூத்தன்

வேம்பற்றுக் குமரன்

ஒட்டக்கூத்தர்


மற்றும் பெண்பாற்புலவர்கள்:

---------------------------------------------------


அச்சியத்தை மகள் நாகையார்

அள்ளுரர் நன்முல்லை

ஆதிமந்தி - குறுந் 3

இளவெயினி - புறம் 157

உப்பை ஃ உறுவை

ஒக்கூர் மாசாத்தியார்

கரீனா கண்கணையார்

கவியரசி

கழார் கீரன் எயிற்றியார்

கள்ளில் ஆத்திரையனார்

காக்கை பாடினியார் நச்செள்ளையார்

காமக்கணிப் பசலையார்

காரைக்காலம்மையார்

காவற்பெண்டு

காவற்பெண்டு

கிழார் கீரனெயிற்றியார்

குட புலவியனார்

குமிழிநாழல் நாப்பசலையார்

குமுழி ஞாழல் நப்பசையார்

குறமகள் ஃ இளவெயினி

குறமகள் ஃ குறிஎயினி

குற மகள் இளவெயினியார்

கூகைக்கோழியார்

தமிழறியும் பெருமாள்

தாயங்கண்ணி - புறம் 250

நக்கண்ணையார்

நல்லிசைப் புலமை மெல்லியார்

நல்வெள்ளியார்

நெட்டிமையார்

நெடும்பல்லியத்தை

பசலையார்

பாரிமகளிர்

பூங்கண்ணுத்திரையார்

பூங்கண் உத்திரையார்

பூதபாண்டியன் தேவியார்

பெண்மணிப் பூதியார்

பெருங்கோப்பெண்டு

பேய்மகள் இளவெயினி

பேயனார்

பேரெயென் முறுவலார்

பொத்தியார்

பொன்மணியார்

பொன்முடியார்

போந்தலைப் பசலையார்

மதுவோலைக் கடையத்தார்

மாற்பித்தியார்

மாற்பித்தியார், இயற்பெயர் பித்தி

மாறோக்கத்து நாப்பசலையார்

முள்ளியூர் பூதியார்

முன்னியூப் பூதியார்

வரதுங்க ராமன் தேவியார்

வருமுலையாருத்தி

வில்லிபுத்தூர்க் கோதையார்

வெண்ணிக் குயத்தியார்

வெள்ளி வீதியார்

வெறிபாடிய காமக்கண்ணியர்.


சித்தர்கள்: பதினெண் சித்தர்:


1. திருமூலர்   

2. இராமதேவர் 

3. கும்பமுனி 

4. இடைக்காடர்

5. தன்வந்திரி  

6. வான்மீகி

7. கமலமுனி 

8. போகநாதர் 

9. குதம்பைச் சித்தர்

10. மச்சமுனி

11. கொங்கணர்

12, பதஞ்சலி

13. நந்திதேவர்

14. போதகுரு

15. பாம்பாட்டிச் சித்தர்

16. சட்டைமுனி

17. சுந்தரானந்த தேவர்

18. கோரக்கர்


இது ஒரு பட்டியல்.


1. அகப்பேய் சித்தர்

2. அழுகணிச் சித்தர்

3. ஆதிநாதர் வேதாந்தச் சித்தர்

4. சதோகநாதர்

5.இடைக்காட்டுச் சித்தர்

6. குதம்பைச் சித்தர்

7. புண்ணாக்குச் சித்தர்

8. ஞானச்சித்தர்

9. மௌனச் சித்தர்

10. பாம்பாட்டிச் சித்தர்

11. கல்லுளி சித்தர்

12.கஞ்சமலைச் சித்தர்

13. நொண்டிச் சித்தர்

14. விளையாட்டுச் சித்தர்

15. பிரமானந்த சித்தர்

16. கடுவெளிச் சித்தர்

17. சங்கிலிச் சித்தர்

18. திரிகோணச்சித்தர்


இது  மற்றொரு  பட்டியல்.  இந்தப் 

 பட்டியலில் நவநாத சித்தர்களும்

 அடங்குவர்.


1. வான்மீகர்

2. பதஞ்சலியார்

3. துர்வாசர்

4. ஊர்வசி

5. சூதமுனி, 

6. வரரிஷி

7. வேதமுனி

8. கஞ்ச முனி

9. வியாசர்

10. கௌதமர் - இது இன்னொரு  பட்டியல்.  


பெரிய  ஞானக்கோவை சித்தர்கள்

 நாற்பத்தெண்மர் என்று இதனிலும்

 மாறுபட்ட ஒரு பட்டியலைத் தருகின்றது.


1. காலாங்கி

2. கமலநாதர்

3. கலசநாதர்

4. யூகி

5. கருணானந்தர்

6. போகர்

7. சட்டைநாதர்

8. பதஞ்சலியார்

9. கோரக்கர்

10. பவணந்தி

11. புலிப்பாணி 

12.அழுகணி

13. பாம்பாட்டி

14. இடைக்காட்டுச் சித்தர்

15. கௌசிகர்

16. வசிட்டர்

17. பிரம்மமுனி

18. வியாகர்

19. தன்வந்திரி

20. சட்டைமுனி

21. புண்ணாக்கீசர்

22. நந்தீசர்

23, அகப்பேய்

24. கொங்கணவர்

25. மச்சமுனி

26. குருபாத நாதர்

27. பரத்துவாசர்

28. கூன் தண்ணீர்

29. கடுவெளி

30. ரோமரிஷி

31. காகபுசுண்டர்

32. பராசரர்

33. தேரையர்

34. புலத்தியர்

35. சுந்தரானந்தர்

36. திருமூலர்

37. கருவூரார்

38, சிவவாக்கியர்

39. தொழுகண்

40.பால சித்தர்

41.ஶ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள்

42. நவநாதர் 

(அ. சத்ய நாதர்,  ஆ. சதோக நாதர்,

  இ. ஆதி நாதர், ஈ. அனாதி நாதர், உ. 

வகுளி நாதர்,  ஊ. மதங்க நாதர்,  

எ. மச்சேந்திர நாதர், ஏ. கஜேந்திர நாதர், 

ஐ. கோரக்க நாதர்)

43. அஷ்ட வசுக்கள்

44. சப்த ரிஷிகள்.


இப்படிச்  சித்தர்கள் பட்டியல்

  கணக்கில்லாமல் பெருகிக்கொண்டே 

செல்கிறது.  கிடைத்தவை

 இவைமட்டுமே.


பல்லாயிரம் ஆண்டுகளுக்கு 

முன்னால் எம் முன்னோர்கள்

 பேசிய ப்ரியமான மொழி எம்

 தாய்மொழி தமிழ்..!


இவ்வளவு சிறப்பு வாய்ந்த 

நம் மொழியை எவராலும்

 அழிக்க இயலாது...

பெருமை கொள்வோம்

 தமிழரென்று...


நன்றி #அபி இராவணன்

…. …. …. … … .