Sunday, October 4, 2020

மேல ஒருத்தன் இருக்கிறானாம்.?

 

மேல ஒருத்தன்

 இருக்கிறானாம்.

எல்லாத்தையும் 

பார்க்கிறானாம்.


பிறப்பதையும் 

பார்க்கிறானாம்.

இறப்பதையும் 

பார்க்கிறானாம்.


கல்லைக் கடவுளாக 

உணர்வதையும் பார்க்கிறானாம்.

கருவறையில் தன் 

காலடியில் புணர்வதையும் 

பார்க்கிறானாம்.


உண்டியல்ல காசு

 போடறதையும் 

பார்க்குறானாம்.

உண்டியலையே 

களவாடறதையும் 

பார்க்கிறானாம்.


சிலை வணக்கத்தையும்

 பார்க்கிறானாம்.

சிலை கடத்தலையும் 

பார்க்கிறனாம்.


பெண்ணை 

வணங்கினாலும்

 பார்க்கிறானாம்.

தீட்டுன்னு விரட்டினாலும்

 பார்க்கிறானாம்.


பிஞ்சு கையால 

படையல் சோறு 

போட்டாலும் பார்க்கிறானாம்.

அப்பிஞ்சையே அறுத்து கூறு

 போட்டாலும் பார்க்கிறானாம்..


மேல ஒருத்தன் இருக்கிறானாம்...?


எல்லாத்தையும்

வேடிக்கைதான் பார்ப்பான் போல...?


வேடிக்கைதான் 

நாமே நல்லா பார்ப்போமே... 

அவன் என்னாத்துக்குங்க...??? 

 

#படித்ததில்_சிரித்தது

No comments:

Post a Comment