*புகழ்பெற்ற  கல்லறை*     
                        *வாசகங்கள்*
💮 *புகழ்பெற்ற  கவிஞர்*  ஷெல்லி  தனது  தாயாரின்  கல்லறையில்  பொறித்திருந்த  கல்லறை  கவிதை. 
"சப்தமிட்டு  நடக்காதீர்கள் , இங்கே  தான்  என் அருமைத் தாயார்  இளைப்பாறி கொண்டிருக்கிறார்கள்."
💮 *உலகப்பேரழகி  கிளியோபாட்ராவின்  கல்லறை  வாசகம*்.  
"உலகத்திலேயே அழகானப் பிணம்   இங்கே  உறங்கிக்கொண்டு இருக்கிறது. நல்ல  வேளை  இவள்  பிணமானாள்,  இல்லாவிட்டால்   இந்தக் கல்லறைக்குள்  ரோமாபுரி  சாம்ராஜ்யமே  பிணமாகியிருக்கும்."
 💮 *மகா அலெக்சாண்டரின்  கல்லறை  வாசகங்கள்*.  
"இந்த  உலகம்  முழுவதுமே  போதாது  என்று  சொன்னவனுக்கு , இந்தக் கல்லறைக் குழி  போதுமானதாக ஆகிவிட்டது."
💮 *ஒரு  தொழிலாளியின் கல்லறை வாசகம*்.
"இங்கே  புதை குழியில் கூட  இவன்  கறையான்களால்  சுரண்டப்படுகிறான்."
💮 *அரசியல்வாதியின்  கல்லறையில்*, 
"தயவு செய்து  இங்கே  கை தட்டி  விடாதீர்கள்,  இவன்  எழுந்து விடக்கூடாது."
💮 *ஒரு  விலை மகளின்  கல்லறை  வாசகம்.*  
"இங்கு  தான்  இவள்  தனியாகத் தூங்குகிறாள், தொந்தரவு  செய்யாதீர்கள், பாவம்  இனி  வர முடியாது  இவளால்."
இவ்வளவு  தானா வாழ்க்கை❓
No comments:
Post a Comment