Sunday, May 20, 2018

தோள் சீலை புரட்சி (எ) குப்பாய புரட்சி

தோள் சீலை புரட்சி 
(எ) குப்பாய புரட்சி

பார்ப்பன நம்பூதிரிகள் 
கேரளாவில் யாரையும் விட்டுவைக்க வில்லை, 
அவர்கள் போர் மறவர்களான நாயர்களை தரவாடு என்ற குடும்ப அமைப்பை கொண்டு இழிவுபடுத்தி தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டனர்,
அரசர்களிடம் அதுபோன்ற ஏற்பாடு செல்லாது என்பதால் அவர்களை
 மஹாபலி கதையை கூறி அரசவமத்தினர் அனைவரும் விஷ்ணுவின் அடிமைகள் என நம்பவைத்தனர், அதனால் அரசனின் எல்லா சொத்துக்களும் கோயிலுக்கே சொந்தம் என்று சட்டத்தினை மாற்றினார், 
அரசன் எந்த செலவு செய்வதென்றாலும் 
கடவுளிடம் நேரடி தொடர்பில் இருக்கும் 
பார்ப்பன நம்பூதிரி ஒப்புதல் இல்லாமல் செய்ய கூடாது.


இது மட்டுமல்ல அரசனாக ஒரு இளவரசன் முடிசூட்டி கொள்ளும் போது தன் பெற்றோர் வைத்த பேரையும் மாற்றிக்கொள்ள வேண்டும், 
அதன் பின் அவர்களின் பெயர் அவர் பிறந்த நட்சத்திரமாக மட்டும் இருக்கும், 

உதாரணமாக சுவாதி நட்சத்திரத்தில் பிறந்த இளவரசன் அரசனாக போது
 அவன் பெயர் சுவாதி திருநாள் என்று மாற்றப் படும்.
 ஐந்து அரசர்கள் சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தால் 
எல்லோரும் சுவதி திருநாள் தான், 
ஆக எந்த அரசன் எந்த நல்லது செய்தான்
 என்றும் யாருக்கும் தெரியாது
அரசவம்சம், நம்பூதிரி வம்சம், நாயர் வம்சம், இம்மூன்றையும்
 தவிர்த்து ஏனைய எல்லா மக்களும்
 கேரளாவில் தீண்டத்தகாதோர் ஆக்கப்பட்டனர்.
 மற்ற அனைத்து மக்களும் ஆண்களாக இருந்தாலும் பெண்களாக இருந்தாலும்,
 இடுப்பில் இருந்து கால்முட்டி வரை மட்டுமே ஆடை அணிய வேண்டும்
 என்பதை சட்டமாக்கினர்.

 பெண்கள் எப்போதும் திறந்த மார்புடன் தான் இருக்க வேண்டும். 
ஆண்களில் அரசனையும் நாயர்களையும் தவிர யாரும்
 மீசை தாடி வைத்து கொள்ளக்கூடாது. 
செருப்பு அணியக்கூடாது, குடைபிடித்து செல்லக்கூடாது.
மீசைதாடி வைத்துக்கொள்ள வேண்டும் என்றால் 
அதற்கு தனியாக வரி செலுத்தவேண்டும்.
பெண்கள் மேலாடை அணிந்து மார்பை மறைத்து 
கொள்ள வேண்டும் என்றால் அதற்கு தனியாக முலைக்கரம் என்ற வரி 
செலுத்த வேண்டும், 
அந்த வரி செலுத்தினாலும், பார்ப்பன நம்பூதிரிகள்
 எதிரில் வந்தால் தோள் சீலையை
 விலக்கி மார்பை காட்டி தான் நிற்க வேண்டும், 
வரி செலுத்துவது பார்ப்பனர் அல்லாதோர் 
முன் மார்பை மறைக்கவே.


இந்த கொடுமைகளின் உச்சம், மக்களின் கவனத்துக்கு 
முதல்முதலில் வெளிவந்தது 19ஆம் நூற்றாண்டில் தான்,
 அப்போது, கேரளாவில் உள்ள சேர்த்தலா என்ற ஊரில் நன்கேலி என்ற ஈழவா சாதியை சேர்ந்த பெண் வாழ்ந்தாள், 

ஒருமுறை நாயர்கள் முலை வரி வசூலிக்க வந்தபோது,
 சற்று பொறுங்கள் என்று கூறி உள்ளே சென்றவள், 
ஒரு தலைவாழை இலையில்
 தன இரு முலைகளையும் அறுத்து வைத்து கொண்டுவந்து 
கொடுத்துவிட்டு மயங்கிவிழுந்து இறந்தாள் 
(இந்த வரிப்பணத்தை மரியாதையாக வாழையிலையில் வேறு வைத்து கொடுக்கவேண்டுமாம்) அதிர்ந்து போன நாயர்கள் அந்த இடத்தை விட்டு ஓடிவிட்டனர். 

பின்னர் அங்கு வந்த அவள் கணவன் சிறுகண்டன் 
அவளை எரிக்கும் போது அந்த நெருப்பில் தானும் 
குதித்து தற்கொலை செய்து கொண்டான். 
கேரளாவில் பார்ப்பனரை எதிர்த்து நடந்த 
முதல் புரட்சி வித்து இது தான்.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் 
ஆங்கிலேயர் அதிகமான அளவில் இருந்தார்கள்.
 இந்த முலைவரி வாங்கும் பார்ப்பனர் தந்திரம் 
ஆங்கிலேயர்களிடமும், இஸ்லாமியர்களிடமும் செல்லாது, 
கேட்டால் இது இந்துமத தர்மம் இவை இந்துக்களுக்கு 
மட்டுமே பொருந்தும் என்று சொல்லிவிட்டனர்.


ஆக முலைவரி சட்டம் கி.பி இரண்டாம் நூற்றாண்டிலிருந்து 
கிறிஸ்தவர்களாக இருந்த சிரியன், ஜோனகர் ஆகியோருக்கு பொருந்தாது மோபில்லா என்று அழைக்கப்படும் இஸ்லாமியரையும் கட்டுப்படுத்தாது, அந்த பெண்கள் குப்பாயம் என்று அழைக்கப்படும் நீண்ட கைகளை உடைய ஜாக்கெட்டுகளை அணிந்து வந்தனர் .
 இந்த முலைவரி வாங்கும் பார்ப்பனர் தந்திரம் அவர்களிடம் பலிக்கவில்லை.


அந்த காலகட்டத்தில்,
 முழு குமரி மாவட்டம், நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களில் 
சில மேற்கு பகுதிகள் திருவானந்தபுர, மற்றும் திருவிதான்கூர் 
சமஸ்தானத்தில் தான் இருந்தன அங்கு வாழ்ந்த பெருவாரியான மக்கள் சாணார், நாடார் சாதியை சேர்ந்தவர்

. இவர்களும் இந்த முலைவரியில் சிக்கி தவித்தனர்..
1813-ல் கர்னல் ஜான் மன்றோ என்ற ஆங்கிலேயர்
 திருவிதான்கூர் சமஸ்தானத்தில்
 பிரிட்டிஷ் தூதுவராக இருந்தார், 

அவர் திருவிதான்கூர் அரசனை வற்புறுத்தி பரமபரை கிறிஸ்தவர் மட்டுமல்ல இனி கிறிஸ்தவராக மாறும் அனைவருக்கும் முலைவரியிலிருந்து விலக்கு அளிக்க சட்டம் கொண்டுவந்தார்.
 உடனேயே பெருவாரியான சாணார்கள் கிருஸ்தவ மதத்திற்கு மாறினர்.
 மானம் காத்து கொள்ளவே தமிழன் மதம் மாறினான் 
சொத்துக்கு வழில்லாமல் மாறவில்லை.
 பார்ப்பனர் புரட்டுகளில் ஒன்றானது, பரவலாக சொல்லப்படும்,
 மக்கள் ரொட்டிக்காக, கம்பளிக்காக கிருஸ்தவ மதம் மாறினார் என்ற கருத்து


ஒருபுறம் சாணார் மக்கள் கிருஸ்துவத்திற்கு மாறும் பொது, 
குமரி மாவட்டத்தில் சாணார்களில் ஒரு தலைவன் தோன்றினான் 
அவரது பெயர் வைகுண்டர் மக்கள் அவரை அய்யா வைகுண்டர் என்று அழைப்பார்கள். 

அவர் தான் முதலில் கிருஸ்துவ மதம் மாற மாட்டோம்
, நாங்கள் இந்துக்களாகவே இருப்போம் ஆனாலும் எம்பெண்களும் குப்பாயம் அணிவார்கள் 
உன்னால் ஆனதை பார்த்து கொள் என்று போராட்டத்தை 
கையில் எடுத்தார், கேரள மன்னன் படைகள் போராட்டத்தை ஒடுக்குகிறேன் என்ற பெயரில் நாயர் வீரர்களை கொண்டு வன்முறையை 
கட்டவிழ்த்து விட்டது. 
 ஆண்கள் பெண்கள் எல்லோரும் அடித்து துவைக்கப்பட்டனர்.
இறுதியாக 1859-ல் சென்னை மாகாணத்தின் கவர்னரான சார்லஸ் ட்ரெவிலியான் கொண்டு வந்த பிரகடனத்தின் படி,
 கேரள அரசர்கள் சாணார் மக்கள் எந்த மதமாக இருந்தாலும் மேலாடை அணியலாம் என்று சட்டம் கொண்டுவந்தனர். 
அப்போதும், முலைவரி முழுவதுமாக நீக்கப்படவில்லை,
 அப்போதும் கேரளாவில் ஈழவ, முக்கவாட்டிகள் (மீன் பிடிப்போர்) போன்ற பல சாதி மக்கள் அவதி பட்டுக்கொண்டு தான் இருந்தனர்.
அய்யா வைகுண்டரின் பிரச்சாரங்களில் ஈர்க்கப்பட்டவர்கள் 
கேரளாவில் இருவர் ஒருவர் நாராயண குரு, மற்றொருவர் அய்யன்காளி
இதில் நாராயண குரு ஈழவ சாதியை சேர்ந்தவர், 

இந்த ஈழவ சாதி மக்கள் தெருவில் நடந்து செல்ல அனுமதிக்க வேண்டும் என்ற போராட்டத்திற்கு தான் 
கேரளமக்கள் நமது அய்யா பெரியாரை அழைத்து சென்று போராடி,
 வெற்றிபெற்று பெரியாருக்கு வைக்கம் வீரர் பட்டமும் அளித்து மகிந்தனர்.


நாராயண குரு, இந்து மதம் முக்கியம் 
ஆனால் மக்களுக்கு சுயமரியாதை அதைவிட முக்கியம் என்று கூறி
 அய்யா வைகுண்டர் வழியில் மக்கள் இந்து மதத்திலிருந்து மாறாமல்
 இந்த முலைவரி சட்டத்தை எதிர்த்து மக்களை போராட வைத்தார்.


அய்யன்காளி, இதைவிட சிறப்பானவர், இவர் புலையர் இனத்தில் பிறந்தாலும், எப்படியோ களரி பயிற்சி பெற்று அதில் மிக சிறந்து விளங்கியவர்,
 மிகவும் உடல்வலிமையும் கொண்டவர், இவர் காலத்தில் கேரளா வந்த விவேகானந்தர் கேரளாவை சாதி பைத்தியங்கள் வாழும் 
பைத்தியக்கார விடுதி என்று சொல்லிவிட்டு சென்றார்.


இவரது களரி பயிற்சி காரணமாக நாயர்கள் நம்பூதிரிகள் யாரும் வம்பு வைத்து கொள்ளமாட்டார்கள், 
பெரும்கட்டுவிளை என்ற கிராமத்தில் பிறந்த இவரை, இவரது போராட்ட முன்னெடுப்புகளின் காரணமாக எல்லோரும் ஊர் பிள்ளை, மூத்தப்பிள்ளை என்று பெருமையோடு அழைப்பார்கள், இவரது பல்வேறு போராட்டங்களுக்கு 
பிறகே 1928-ல் சட்டப்பூர்வமாக முலைவரி நீக்கப்பட்டது.
1891-ல் பிறந்த அம்பேத்கரை போலவே புலையர் என்ற தாழ்ந்த சாதியில் பிறந்த அய்யன்காளி, ஒருவகையில் அம்பேத்கருக்கும் முன்னோடி, 1893- லேயே அம்பேத்கர் கோட் சூட் போடுவதை போல, எப்போதும் சேர்வானி போன்ற ஒரு கோட், பட்டு அங்கவஸ்திரம், பட்டுசரிகையுடன் தலைப்பாகை, மணிகட்டிய இரட்டை மாட்டுவண்டியுடன் வளம் வந்து பார்ப்பன நம்பூதிரிகளை வெறுப்பேற்றுவார்.
இத்தனை போராட்டங்களுக்கு முதல் வித்திட்ட அய்யா வைகுண்டரை இப்போது விஷ்ணுவின் அம்சம் என்று சொல்லிக்கொண்டு அவருக்கு கோயில் கட்டி எந்த பார்ப்பனரை எதிர்த்து போராட்டம் செய்தாரோ அந்த பார்ப்பனரை கொண்டே அந்த கோயிலுக்கு குடமுழுக்கு விழா எடுக்கின்றனர் சில நாடார்கள், சென்னையில் மேற்கு முகப்பேரில் கூட அய்யா வைகுண்டர் கோயில் ஒன்றை பார்க்கலாம்.


இப்பொது புரிகிறதா கடவுள் இல்லவே இல்லை என்று அழுத்தம் திருத்தமாக பெரியார் ஏன் சொன்னார் என்று, இல்லை என்றால் இன்று ஒரு கூட்டம் அவருக்கும் கோயில் கட்டி பார்ப்பானை வைத்து குடமுழுக்கு செய்து கொண்டிருக்கும்.

No comments:

Post a Comment