Friday, May 11, 2018

இந்திய ராணுவத்தினரின் பத்து சிந்தனைகள்

காலத்தால் அழியாத, 
இந்திய ராணுவத்தினரின் 
பத்து சிந்தனைகள்.!
---------------------
1) "ஒன்று,... நான், நம் மூவர்ணக் கொடியை 
ஏற்றிவிட்டு வருவேன். அல்லது,.. 
மூவர்ணக் கொடி போர்த்தப்பட்டு வருவேன்.
 ஆனால், நிச்சயம் திரும்ப வருவேன்." : 
கேப்டன் விக்ரம் பாத்ரா, பரம் வீர சக்ர (விருது பெற்றவர்).


2) "உங்களுக்கு வாழ்க்கையின்
 சாதனையாக இருப்பது, 
எங்களுக்கு தினசரி (சாதாரண) வேலை..." :
 உலகின் மிக உயரமான 
லடாக் - லே நெடுஞ்சாலையில், 
ராணுவ அறிவிப்புப் பலகை.


3) "என் வீரத்தை காட்டும் 
முன்னர் மரணம் என்னைத் தாக்கினால்,...
 நான் நிச்சயம், 
அந்த மரணத்தை,... கொன்று விடுவேன்!" 
: கேப்டன் மனோஜ் குமார் பாண்டே, பரம் வீர் சக்ரா,
 1/11 கூர்க்கா ரைபிள்ஸ்.


4) "நம் மூவர்ணக் கோடி பறப்பது, 
காற்று அடிப்பதால் அல்ல! 
அது, அக்கொடியை காப்பாற்றும் 
கடமையில் உயிரிழந்த ஒவ்வொரு 
ராணுவ வீரனின் கடைசி மூச்சுக் காற்றினாலும்
 மட்டுமே பறக்கிறது!
" : இந்திய ராணுவம்.


5) "எங்களைக் கண்டு பிடிக்க,..
 நீங்கள் திறமையானவராக இருக்க வேண்டும்."
"எங்களைப் பிடிக்க,.. நீங்கள் மிகவும் 
வேகமாக நகர்பவராக இருக்க வேண்டும்."
"எங்களை வெல்ல,... சே,.. சும்மா காமெடி 
பண்ணாதீங்க!"
: இந்திய ராணுவம்.


6) "கடவுள் எங்கள் பகைவருக்கு 
கருணை காட்டுவாராக! ஏனெனில்,...
நாங்கள் அவர்களுக்கு, 
கருணை காட்ட மாட்டோம்.!"
: இந்திய ராணுவம்.!


7) "நாங்கள், சந்தர்ப்ப
 வசமாக வாழ்கிறோம்."
"நாங்கள், தேர்ந்தெடுத்து
 காதலிக்கிறோம்"
"நாங்கள், தொழில் முறையாக,
 (எதிரிகளை) கொல்கிறோம்!"
: ராணுவ அதிகாரிகள் பயிற்சி 
அகாதெமி, சென்னை.


8) "சாவுக்கு பயப்படவில்லை" 
என்று சொல்பவன்,.. ஒன்று பொய் சொல்கிறான்... 
அல்லது, அவன் கூர்க்கா (ராணுவ) 
வீரனாக இருக்க வேண்டும்
." : பீல்ட் மார்ஷல் மானெக் ஷா.


9) "தீவிரவாதிகளை மன்னிப்பது, 
கடவுளின் கடமை. ஆனால், 
அந்தத் தீவிரவாதிகளை கடவுளை
 சந்திக்க அனுப்புவது, எங்கள் கடமை."! 
: இந்திய ராணுவம்.


10) "என் உச்ச பட்ச வருத்தமே,..
 நாட்டுக்காக தியாகம் செய்ய எனக்கு 
ஒரு உயிர் மட்டுமே இருப்பது தான்!"
: பிரேம் ராமச்சந்திரன், ராணுவ அதிகாரி.
ஜெய்ஜவான்! ஜெய்ஹிந்த்!

No comments:

Post a Comment