Friday, May 25, 2018

தெரிந்து கொள்வோம் 2

     "  CCTV -CAMERA"                                                              
 CLOSED CIRCUIT TELEVISION

  மூடிய ( தெளிவான பிம்பம் )
  மின்சுற்று தொலைக்காட்சி  
                    OR
 மறை காணி
( மலேசிய தமிழ் சங்கத்தில்
 CCTV க்கு தமிழாக்கம்
 செய்யப்பட்டுள்ளது )
  /////////////////////
 மேழிச்-செல்வம்-கோழை-படாது
( பொழிப்புரை) உழுது பயிா் செய்தால் வரும்
 செல்வம் சிறுமையுறாது )
 /////////////////
 ஜுராசிக் ?
ஜுராசிக் என்றால் என்ன பொருள்?
சுமார் 145லிருந்து 200 கோடி வருடங்களுக்கு
 முந்தைய காலகட்டத்தை
 ஜுராசிக் யுகம் என்று குறிப்பிடுவார்கள். ஆக
ஜுராசிக் என்பது

 ஒரு காலகட்டத்தைத்தான் குறிப்பிடுகிறது.
 //////////////////////////
 எங்கும் தரை இறங்காமல்
முதன் முதலாக உலகை
சுற்றி வந்த விமானம் ..
" வாயேஜர் "
///////////////
இந்தியாவின் ராணுவ
பாதுகாப்பில்
உள்ள தனி நாடு
" பூட்டான்"
///////////////////////
 முட்டாள் என்பதன் 
பெயர்க்காரணம் என்ன...?

அந்த காலத்தில் கோவில்களில் 
சப்பரம் தூக்குவதற்கு என்று 
சில பேர் இருப்பார்கள்.
 அவர்களுக்கு 
கோவில்களிலேயே 
சாப்பாடும்
 உண்டு, 
தங்க இடமும் உண்டு. 
திருவிழா காலங்களில் 
சப்பரம் தூக்கி கொண்டு,
போகும் போது மக்கள் தரிசனம் 
செய்வதற்கு வேண்டி நடுவில் 
சப்பரம் சற்று நேரம் நிற்கும். 
அந்த சமயம் சப்பரம் தூக்கிகள் 
ஓய்வு எடுப்பதற்காக,
சில பேர் முட்டு எடுத்துக்
 கொண்டு 
கூடவே வருவார்கள். 
அவர்கள் சப்பரம் நின்ற உடன் 
முட்டு கொடுத்து சப்பரத்தை
நிப்பாட்டுவார்கள். அதனால் 
அவர்களை "முட்டு ஆள்" என்பர்.


சப்பரதிர்க்கு முட்டு 
கொடுப்பதை தவிர 
அவர்களுக்கு வேறு 
வேலை 
ஒன்றும் தெரியாது. 
அதிலிருந்து யோசிக்க 
தெரியாமல் 
ஒரே வேலையை 
செய்து கொண்டு இருப்பவர்களை 
"முட்டாள்" என்று அழைப்பது
 பழக்கமாக ஆகிவிட்டது.
எனவே! அறிவாளிக்கு
 எதிர்பதம்
 "முட்டாள்" இல்லை "
அறிவிலி" என்பதாகும்.
///////////////////////
  ஹால்மார்க்!
சுத்தமான தங்கம் என்பதன் அடையாளமாக 

காட்டப் படுவதுதான் ஹால்மார்க் முத்திரை
. தங்கத்தில் 24, 22, 18, 14, 10, 9, 8 கேரட்கள் 
 உள்ளன. இதில் 24, 22, 18 கேரட் மட்டுமே
 பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.
 24 கேரட் என்பது 99.9% சுத்தமான தங்கம். 
முதலீட்டு அடிப்படையில் தங்கக் 
கட்டிகளாக வாங்குகிறவர்கள்
 இந்த 24 கேரட் தங்கத்தையே 
 வாங்குவார்கள். இந்த 24 கேரட் தங்கத்தின்
 விலை 22 கேரட் தங்கத்தைவிட 
சற்று கூடுதலாக இருக்கும். 
இந்த சுத்த தங்கத்தைக் கொண்டு 
ஆபரணங்கள் செய்ய முடியாது
 என்பதால், சில உலோகங்களைச் 
சேர்த்து 22 கேரட் மற்றும் 18 கேரட்களில்
 நகை செய்கிறார்கள். இந்த
 நகையைதான் ஆபரணத் 
தங்கம் என்கிறோம்.
////////////////////////
  இந்திய வரலாற்றை 
பறைசாற்றும் 
வகையில் எந்தெந்த 
ரூபாய் நோட்டுக்களில் 
என்னென்ன புகைப்படங்கள்
 உள்ளன தெரியுமா..?
ரூபாய் 5 – விவசாயத்தின் பெருமை
ரூபாய் 10 – விலங்குகள் பாதுகாப்பு 

(புலி, யானை, காண்டாமிருகம்).
ரூபாய் 20 – கடற்கரை அழகு (கோவளம்)
ரூபாய் 50 – அரசியல் பெருமை (இந்திய நாடாளுமன்றம்)
ரூபாய் 100 – இயற்கையின் சிறப்பு (இமயமலை)
ரூபாய் 500 – சுதந்திரத்தின் பெருமை (தண்டி யாத்திரை)
ரூபாய் 1000 – இந்தியாவின் தொழில்நுட்ப மேம்பாடு

ஆகியவற்றை குறிக்கும் வகையில் 
ரூபாய் நோட்டுகளில் அச்சிடப்பட்டிருக்கும் 
என்பது குறிப்பிடத்தக்கது.
 ///////////////////////////
 1) ஏலக்காயில் இருக்கும் எண்ணையின் பெயர் என்ன? - வோலடைல்.
2) தன் வாழ்நாளில் நீரே அருந்தாத மிருகம் எது? - கங்காரு எலி.
3) ஒட்டகச்சிவிங்கியின் கழுத்தில் எத்தனை எலும்புகள் உள்ளன? - ஏழு.
4) பிறக்கும்போது குழந்தைகளுக்கு எத்தனை எலும்புகள் இருக்கும்? - 330.
5) தாஜ்மஹால் எந்தவகை மார்பிளால் கட்டப்பட்டுள்ளது? - மக்ரானா.
6) பனிக்கட்டிகளின் மேல் வளரும் செடிகளின் பெயர் என்ன? - க்ரயோ·பைட்ஸ்
7) டயாலிஸிஸ் இயந்திரத்தைக் கண்டறிந்தவர் யார்? - வில்லியம் கோல்ப்
8) உலகில் பூக்கள் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு எது? - நெதர்லாந்து.
9) கடற்கரை மணலைச் சுத்தம் செய்யும் கருவியின் பெயர் என்ன? - பீச் கோம்பர்.
10) நமது ஒவ்வொரு கண்ணிலும் எத்தனை தசைகள் உள்ளன? - ஆறு தசைகள்.
11) அறிவியல் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது? - பிப்ரவரி 28.
12) நாய்களே இல்லாத ஊர் எது? - சிங்கப்பூர்.
//////////////////////////
 பகவத்கீதையில்
 உள்ள அதிகாரங்கள்......18
////////////////
  கதக் எனும் நடனம்
 எங்கு முதன்மையான 
நடனமாக கருதப்படுகிறது? 
///////////////////////
LCD என்பதன் விரிவாக்கம் 
.Liquid Crystal Display
 //////////////////////
 உலகில் மூன்று நாடுகளில் மட்டும் தான்
சந்தன மரங்கள் அதிக அளவில் உள்ளது.
அந்த மூன்று நாடுகள் இந்தியா, இலங்கை, பிலிப்பைன்ஸ்.
///////////////////////////////
 ஐஸ்லாந்து, அண்டார்டிகா, கிரீன்லாந்து 
இந்த மூன்று பகுதிகளிலும் 
எறும்புகளே கிடையாது.
//////////////////////////////
  மூங்கில்கள் ஒரு நாளைக்கு
 36 இன்ச் உயரம் வளர்கின்றன
/////////////////////
சலித்துக் கொள்பவன்
 ஒவ்வொரு வாய்ப்பிலும் உள்ள 
ஆபத்தைப் பார்க்கிறான். 
 சாதிப்பவன் ஒவ்வொரு 
ஆபத்திலும் உள்ள வாய்ப்பினைப்
 பார்க்கிறான்
//////////////////////
.எல்லோரையும் நம்புவது அபாயகரமானது
. ஒருவரையும் நம்பாமல்
இருப்பது இன்னும்
 அபாயகரமானது
//////////////////////
ஆசையில்லாத முயற்சியால் 
பயனில்லை. முயற்சியில்லாத
 ஆசையால் பயனில்லை. 
///////////////
நீங்க‌ள் விரும்புவ‌து ஒருவேளை 
உங்க‌ளுக்கு கிடைக்காம‌ல் போக‌லாம். 
ஆனால் உங்க‌ளுக்கு த‌குதியான‌து
 உங்க‌ளுக்கு க‌ண்டிப்பாக‌ கிடைத்தே தீரும்..
//////////////////
 தவறு நேர்ந்து விடுமோ என்று 
அஞ்சி அஞ்சி எந்த செயலையும் செய்யாமல்
 பின் வாங்குவது இழிவானது
/////////////////
உலகத்தில் மிக நீண்ட சமுத்திரம் (கடல் பரப்பு) எது?
Which one is the largest ocean in the world ?
   1,  இந்து சமுத்திரம்( Indian)
   2,  பசுபிக்சமுத்திரம் ( pacific)
   3,   அட்லாண்டிக் சமுத்திரம் (Atlantic)
   4,   ஆர்ட்டிக் சமுத்திரம் ( Arctic)
     ///////////////////////                    
முந்நீர் பழந்தீவுகள் 
என அழைக்க
ப்பட்ட தீவு எது?
மாலத்தீவு
//////////////////////
* மலைப்பாம்பு இறகு, முடி தவிர 
மற்ற அனைத்தையும் ஜீரணித்து விடுமாம்.


* 200 கோடி பேருக்கு ஒருவர்தான் 
116 வயதைக் கடந்து வாழ்கிறார்களாம்.


* நத்தைகள் தொடர்ச்சியாக 
மூன்று ஆண்டுகள் வரை தூங்கக் கூடியதாம்.


* மானின் கொம்புகள் ஆண்டுக்கு
 ஒருமுறை விழுந்து முளைக்கிறது.


* நாய் மகிழ்ச்சியில் வால் ஆட்டும்.
 பூனையோ கோபம் வந்தால்தான் 
வாலை ஆட்டுமாம்.


* நீர் யானைக்குக் கோபம் 
வந்தால் கொட்டாவி விடும்.


* ஆமையின் மூளையை எடுத்து விட்டாலும் 
அது உயிருடன் இருக்குமாம்.


* வண்ணத்துப் பூச்சிகள்
 தன் பின்னங்கால்களால்தான் 
சுவையை அறிகின்றன.


* மனிதனுக்கு இணையான அறிவாற்றல் 
டால்பினுக்கு உண்டு.


* கோழி முட்டையின் ஓட்டில்
 சுவாசிப்பதற்கு எட்டாயிரம்
 நுண் துளைகள் இருக்கின்றன.


* ஆந்தையால் ஒரே நேரத்தில் 
இரு கண்களாலும் 
இருவேறு காட்சிகளைக் காண முடியும்.


* பெண் சிலந்திப் பூச்சிகள் 
ஆண் சிலந்தியுடனான உறவுக்குப் பின் 
அதைக் கொன்று விடுகின்றன.


* நண்டுகள் இரண்டு ஆண்டுகளுக்கு 
ஒருமுறை சட்டையை 
(மேல்தோல்) உரிக்கின்றன.


* ஒரு ஜோடி எலி ஒரே ஆண்டில் 
800 குட்டிகள் வரை போட்டு விடுமாம்.


* ஒரு பட்டுப்புழுவின் கூட்டில்
 32 ஆயிரத்து 500 கெஜம் நூல் இருக்குமாம்.


* ஒரு சிலந்தி ஒரு மணி நேரத்தில் 
சுமார் 450 அடி நீளம் கொண்ட 
வலையைப் பின்னுகிறது.


* புழுவை இரண்டாகத் துண்டித்துப் 
போட்டாலும் அது சாகாது.


* சூரியனுடைய ஒளியில்
 முப்பதினாயிரத்தில் 
ஒரு பகுதிதான் சந்திரனின் ஒளி.


* நம் நாட்டில் மட்டுமல்ல,
 சீனாவிலும் விதவைகளுக்கு 
வெள்ளை உடை தான்.


* ஒவ்வொரு வகை சிலந்தியும் 
ஒவ்வொரு வகை வலை பின்னும்.


* வித்தைகாட்ட பயன்படும்
 குரங்குக்கு 'பரட்டைத் தலை 
குரங்கு' என்று பெயர்.


* ஒரு யுகம் என்பது
 43, 20, 000 ஆண்டுகளாகும்.


* வளர்பிறை கோடுகள் மேல் நோக்கியும்,
 தேய்பிறை கோடுகள்
 கீழ்நோக்கியும் இருக்கும்.
//////////////////////
 ராட்கிலிஃப் கோடு

 1947  இந்தியாவையும் பாகிஸ்தானையும் 
பிரிக்கும் ராட்கிலிஃப் கோடு 
வெளியிடப்பட்ட #தினம்

ராட்கிளிஃப் கோடு (Radcliffe Line) என்பது
 இந்தியாவில் இருந்து பாக்கிஸ்தானைப் 
பிரிக்கும் எல்லைக்கோடு.

இது ஆகஸ்ட் 17, 1947 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது.
 சிரில் ராட்கிளிஃப் என்பவர் 
தலைமையில் அமைக்கப்பட்ட குழு
 88 மில்லியன் மக்களைக் கொண்ட
 175,000 சதுர மைல்கள் (450,000 கிமீ²) பரப்பளவு
 நிலத்தை இவ்வெல்லைக்கோடு கொண்டு பிரித்தது
////////////////////

* கண்ணீர்புகை குண்டு, குதிரைக்கு 
எவ்வித விளைவையும் ஏற்படுத்தாது.


* கிறிஸ்தவர்களின் "போப் ஆண்டவர்" 
மூன்று மகுடங்களை அணிந்திருப்பார்.


* எலிக்கும், முயலுக்கும் பற்கள்
 வளர்ந்துகொண்டே இருக்கும்.


* "O" குரூப் ரத்தம் 
உடையவர்களை 'யுனிவர்சல் டோனர்' என்பர்.


* பாகிஸ்தான் - சீனா நாடுகளுக்கு இடையே
 உள்ள மலைத்தொடர் 'காரகோரம்'.


* அதி உயர விமானப் போர்ப் பயிற்சிப் பள்ளி 
காஷ்மீர் மாநிலம் 'குல்மார்க்'-ல் உள்ளது.


* நெப்போலியன் - 'Man of Destiney" 
என்று அழைக்கப்படுவார்.


* குருவியின் கழுத்திலுள்ள எழும்புகள் 23.


* வரிக்குதிரையின் 
ஆயுட்காலம் 22 வருடங்கள்


* அணிலின் ஆயுட்காலம்
 82 வருடங்கள்.


* செம்மறி ஆட்டின் ஆயுட்காலம்
 16 வருடங்கள்.


* சிம்பன்சியின் ஆயுட்காலம்
 41 வருடங்கள்.


* பெருங்கரடியின் ஆயுட்காலம்
 20 வருடங்கள்.


* தீக்கோழியின் ஆயுட்காலம்
 50 வருடங்கள்.


* பென்குயினின் ஆயுட்காலம்
 22 வருடங்கள்.


* திமிங்கிலத்தின் ஆயுட்காலம்
 30 முதல் 40 வருடங்கள்


* கடலாமையின் ஆயுட்காலம்
 200 வருடங்கள்


* மூக்கில் பல் உள்ள விலங்கு 
முதலை.


* பாலைவனக்கப்பல் என அழைக்கப்படும்
 விலங்கு ஒட்டகம்


* ஈருடகவாழிகள் ஆமை, தவளை, முதளை


* பறக்க முடியாத பறவைகள் 
கிவி, ஏமு,பெஸ்பரோ, தீக்கோழி, பென் குயின்


* தோலில் நச்சுச் சுரப்பிகள் உள்ள விலங்கு தேரை
////////////////////////////

No comments:

Post a Comment