Saturday, October 14, 2017

இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம்

 இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம்

1937ஆம் ஆண்டு முதல் முறையாக 
இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம்
 நடத்தப்பட்டது. அப்போது 
சென்னை மாகாணத்தில்
 முதல்முறையாக வெற்றிபெற்ற 
காங்கிரசுக் கட்சியின் சக்கரவர்த்தி 
இராஜகோபாலாச்சாரி தலைமையில் 
அமைந்த அரசு, பள்ளிகளில் இந்தி படிப்பதைக் 
கட்டாயமாக்கியது. அதை எதிர்த்து, 
எதிர்கட்சியாக விளங்கிய நீதிக்கட்சியும்
பெரியார் ஈ. வெ. இராமசாமியும் மூன்று 
ஆண்டுகள் உண்ணாநோன்பு, மாநாடுகள், 
பேரணிகள் மற்றும் மறியல் போராட்டங்கள் 
நடத்தினர். அரசின் காவல் நடவடிக்கைகளில் 
இரண்டு போராட்டக்காரர்கள் இறந்தனர்; 
பெண்கள், சிறுவர்கள் உட்பட 1198 பேர் கைது
 செய்யப்பட்டனர். காங்கிரசு அரசு
 1939ஆம் ஆண்டு பதவி விலகியதை
 ஒட்டி சென்னை மாகாண பிரித்தானிய 
ஆளுநர் 'எர்ஸ்கின் பிரபு' பிப்ரவரி1940ஆம் 
ஆண்டில் இந்தக் கட்டாய 
இந்திக் கல்வியை விலக்கினார்.

பிரித்தானியாவிலிருந்து இந்தியா விடுதலை
 பெற்ற பிறகு அரசியலமைப்பு
 சட்டமன்றத்தில் புதிய இந்தியக் 
குடியரசில் நிலவ வேண்டிய 
அலுவல்மொழி குறித்து நீண்ட 
விவாதம் நடந்தது. பற்பல 
உரையாடல்களுக்குப் 
பின்னர் தேவநாகரி எழுத்துருவில் 
அமைந்த 
இந்தி அரசுப்பணி மொழியாகத் 
தேர்ந்தெடுக்கப்பட்டது. மேலும் 
அடுத்த 15 ஆண்டுகளுக்கு ஆங்கிலம் 
இணை அலுவல்மொழியாக விளங்கும்
 என்றும் அதன் பின்னர் இந்தி மொழி மட்டுமே 
அரசுப்பணிகளில் பயன்படுத்தப்படும் என்றும்
 ஏற்றுக்கொள்ளபட்டது. புதிய இந்திய
 அரசியலமைப்பு சனவரி 26, 1950 அன்று 
நடப்பிற்கு வந்தது. ஆகவே அரசியலமைப்பில் 
ஏற்றுக்கொண்டபடி 1965 ஆண்டிலிருந்து 
இந்தி மட்டுமே அரசுப்பணிமொழியாக விளங்க 
அரசு மேற்கோண்ட முயற்சிகள் இந்தி பேசாத 
மாநிலங்களில் எதிர்ப்பலைகளை உண்டாக்கின.
தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் 
இந்த எதிர்ப்பில் முன்னணியில் இருந்தது. 
இந்தக் கவலைகளை நீக்கும் விதமாக 
அப்போதைய இந்தியப் பிரதமர்ஜவஹர்லால் 
நேரு 1963ஆம் ஆண்டில் கொண்டு 
வந்த அரசுப்பணிமொழி சட்டத்தில்
 1965ஆம் ஆண்டிற்குப் பிறகும் 
ஆங்கிலம் அரசுமொழியாக விளங்க 
வழி செய்தார். ஆயினும் அச்சட்டத்தின்
 உள்ளடக்கம் தி.மு.க விற்கு ஏற்புடையதாக
 இருக்கவில்லை. அவரது வாய்மொழி 
வாக்குறுதிகள் பிந்தைய அரசுகளால் 
ஏற்கப்படாமல் போகலாம் என்ற 
அச்சத்தினை வெளியிட்டனர்.

26 சனவரி,1965 நாள் நெருங்கிவந்த
 காலத்தில் தமிழகத்தில் இந்தித் திணிப்பு 
எதிர்ப்புப் போராட்டம் வலுக்கத் துவங்கியது.
 அவ்வாண்டு குடியரசு நாளை கருப்புதினமாகக் 
கொண்டாட தி. மு. க அழைப்பு விடுத்திருந்தது.
 போராட்டத்தில் கல்லூரி மாணவர்கள் 
பெரிதும் ஈடுபட்டனர். 
மதுரையில் 25 சனவரியன்று அவர்களுக்கும்
 காங்கிரசு கட்சியினர் சிலருக்கும் இடையே 
எழுந்த கைகலப்பு பெரும் கலவரமாக வெடித்தது. 
மாநிலத்தின் பிற பகுதிகளுக்கும் பரவிய 
இக்கலவரம் காவலர்களால் அடக்க முடியாத
 அளவில் அடுத்த இரண்டு மாதங்கள் தொடர்ந்து
 நடந்தது. பரந்த அளவில் வன்முறை, 
தீவைப்பு எனப் போராட்டக்காரர்களும் 
தடியடி, துப்பாக்கிச்சூடு என மாநிலக் 
காவல் துறையினரும் மோதினர். 
இக்கலவரங்களில் இரு காவல்துறையினர்
 உட்பட 70 பேர்கள் (அதிகாரப்பூர்வமாக) இறந்தனர். 
நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர 
அப்போதைய இந்தியப் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி,
 இந்தி பேசாத மாநிலங்கள் விரும்பும் வரை ஆங்கிலமும் 
அரசுப்பணிகளில் இணைமொழியாக இருக்கும் 
என்ற உறுதிமொழி அளித்தார். 
இந்த உறுதிமொழியை அடுத்து மாணவர்
 போராட்டம் ஓய்ந்தது.

1965ஆம் ஆண்டு இந்தித் திணிப்பு 
எதிர்ப்புப் போராட்டம் மாநில அரசுகளின் 
அரசியல் மாற்றங்களுக்கு வித்திட்டது. 
1967ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலிலும் 
சட்டப்பேரவைத் தேர்தலிலும் தி.மு.க பெரும் 
வெற்றி கண்டது. இந்தத் தோல்விக்குப் 
பிறகு மாநிலத்தில் மீண்டும் காங்கிரசால் 
ஆட்சியைக் கைப்பற்ற இயலவில்லை. 
1967ஆம் ஆண்டு அமைந்த இந்திரா காந்தி
 தலைமையிலான இந்திய அரசு, 
அரசுப்பணிமொழிச் சட்டத்தில் என்றென்றும் 
ஆங்கிலம், இந்தி ஆகிய இரு மொழிகளும் 
அரசுமொழிகளாக விளங்கும் 
வகையில் திருத்தம் கொண்டுவந்தது.


 சென்னை நடராசன், தாளமுத்து,
 கீழப்பழுவூர் சின்னசாமி, 
கோடம் பாக்கம் சிவலிங்கம், 
விருகம் பாக்கம் அரங்கநாதன், 
கீரனூர் முத்து, சிவகங்கை ராசேந்திரன்,
 சத்தியமங்கலம் முத்து, 
அய்யம்பாளையம் ஆசிரியர் வீரப்பன், 
விராலிமலை சண்முகம், 
பீளமேடு தண்டபாணி, 
மயிலாடுதுறை சாரங்கபாணி...

இவர்களெல்லாம் இந்தித் திணிப்பை 
எதிர்த்தும், தமிழ் மொழியைக் 
காக்கவும் உயிர் நீத்த தியாகிகள்.

இந்தித் திணிப்புக்கு எதிரானப் 
போராட்டத்தில் 1965-ம் ஆண்டு 
தமிழகமே பற்றி எரிந்தது எனலாம்.
 மாணவர்கள் முன்னின்று நடத்திய 
அந்தப் போராட்டத்தில் பல நூறு பேர்
 உயிர் நீத்தனர். போராட்டத்தை 
அடக்க ராணுவம் வந்தது.


மொழியைப் பாதுகாக்க நடைபெற்ற
 ஒரு போராட்டத்தை ஒடுக்க ராணுவம்
 களத்தில் இறங்கியதும், அந்தப் போராட்டத்தில்
 நூற்றுக்கணக்கானோரின் உயிர்கள் பறிக்கப்பட்டன
 என்பதும் உலக வரலாற்றில் வேறெங்கும்
 இல்லாதது. அதனால்தான், 1965-ம் ஆண்டு
 போராட்டம் ஒட்டுமொத்த 
இந்தியாவையும் குலுக்கி எடுத்தது.

இந்தப் போராட்டம் 1960-களில்தான் உச்சத்தை
 எட்டினாலும், 1930-களிலேயே தொடங்கிவிட்டது. 
அனைத்துப் பள்ளிகளிலும் 
இந்தி கட்டாய பாடமாக்கப்பட்டுள்ளதாக 
21-4-1938 அன்று ராஜாஜி தலைமை யிலான 
சென்னை மாகாண அரசு அரசாணை வெளியிட்டது. 
இதை எதிர்த்து பெரியார், மறைமலை அடிகளார்,
 சோமசுந்தர பாரதியார் உள்ளிட்டோர் 
வழிகாட்டுதலில் போராட்டம் வெடித்தது. 
போராட்டத்தில் ஈடுபட்டோர் சிறைகளில் 
அடைக்கப்பட்டனர். சென்னையில் 
போராட்டத்தில் பங்கேற்று சிறைக்குச் 
சென்ற நடராசனின் உடல் நலம் குன்றியது
. மன்னிப்புக் கோரி கடிதம் எழுதித் தந்தால் 
விடுதலை செய்வதாக அரசு கூறியது. 
மன்னிப்புக் கேட்க மறுத்த 
நடராசன், 15-1-1939 அன்று உயிரிழந்தார்.

தாழ்த்தப்பட்ட குடும்பத்தில் பிறந்து,
 தமிழ் மொழியுணர்வால் உந்தப்பட்டு 
போராட்டக் களத்துக்குச் சென்ற நடராசன்தான் 
மொழிப் போராட்டத்தின் முதல் களப் பலி. 
அவரைத் தொடர்ந்து, அதே ஆண்டு 
மார்ச் 12-ம் தேதி கும்பகோணத்தைச் சேர்ந்த 
தாளமுத்து சென்னை சிறையில் உயிர் நீத்தார்.

இந்த இரண்டு உயிர் பலிகளால் 
போராட்டம் மேலும் தீவிரமடையவே, 
இந்தி பயிற்று மொழி தொடர்பான அரசாணையை 
21-2-1940 அன்று அரசு திரும்பப் பெற்றது. 
அடுத்து, 1948-ல் ஓமந்தூரார் முதல்வராக 
இருந்தபோது இந்தி கட்டாய பாடமாக்கப்படும்
 என ஆணை பிறப்பிக்கப்பட்டது. இதை
 எதிர்த்து மீண்டும் கிளர்ச்சி ஏற்பட்டதால், 
அரசு பின்வாங்கியது. மேலும், இந்தி பேசாத 
மக்கள் விரும்பும் வரை ஆங்கிலமும் 
ஆட்சி மொழியாகத் தொடரும் என்ற நேருவின் 
உறுதிமொழியால் போராட்டம் சற்று ஓய்ந்தது.
/////////////////////// 
இந்தி பிரச்சார சபா

தமிழ்நாட்டில் ஆரம்பித்து 
100 ஆண்டுகளாகிவிட்டது.
இந்தக் கட்டிடம் கட்டி
 60 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது.

வருடம் 10 லட்சம்பேர்
 இந்தி கற்கின்றனர்.
தென் இந்தியாவில் 
அதிகம்பேர் கற்பது 
இம்மாநிலத்தில்தான்.

 ஏழை மாணவர்களுக்கு இலவசமாய் 
இந்தி கற்றுகொள்ளும் வசதியும் உண்டு.

இந்தித்  திணிப்பை எதிர்த்து 
தமிழகம் கதி கலங்கிய 
காலத்திலும் கூட இந்தக் கட்டிடம் 
சேதமடையவுமில்லை 

இந்தி கற்றுக்கொடுக்கும் 
எவரும் தாக்கப்பட்டதாய்
 சரித்திரமுமில்லை.
இங்கு இந்தி  கற்கிறவனை 
பேசுகிறவனை வெறுத்ததாக 
எந்த ஒரு செய்தியுமில்லை.

ஆனால்.இந்தித் திணிப்பை 
எதிர்த்து தன் உயிரை மாய்த்து 
போராடியவர்கள் ஏராளம்.

இப்படியான ஒரு எதிர்ப்பு 
நிலையை இந்தியத்தில் 
எங்காவது காண முடியுமா?

 இந்திய துணைக்கண்டத்தில் 
தமிழ்நாடுதான் 
பரிணாமத்தில் முதலிடம்.

கருத்தை கருத்தால் மட்டுமே 
எதிர்கொள்ளும் தமிழ் மண்ணின்
பெருமை இது.
 .................................
நீட் உண்மைகள்
 மருத்துவ படிப்பு பற்றி
             ♦♦♦
     ப்ளஸ் டூ தேர்வில் 
மனப்பாடம் செய்து அதிக மதிப்பெண்கள் 
எடுத்தார்கள்.. 
அதினால் நீட்டில் எடுக்க முடியவில்லை.. - 

அறிவாளிகள்// 
ஏப்பா அறிவாளிகளா, 
மெடிக்கல் படிப்பே வெறும் மனப்பாடம் தான்..
நீட் பற்றிய 
மூடநம்பிக்கைகளில் 
இதுவும் ஒன்று.. 

நீட்டுக்கு முன் இருந்த 
பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முறைப்படி
 மனப்பாடம் செய்து படித்தார்களாம்.
 மனப்பாடம் செய்து அப்படியே எழுதி
 மார்க் எடுத்தார்களாம் அதுவும்
ஸ்டேட் போர்டு மாணவர்கள் 
படித்ததை அப்படியே எழுதுவார்களாம், 

சிபிஎஸ்சி மாணவர்கள் தாமாக 
 யோசித்தி சிந்தித்து சிந்தித்து எழுதுவார்களாம்

ஐயா ராசாக்களா.. 

உண்மையில் 
எம்பிபிஎஸ் படிக்கும் போது 
எழுதும் அனாடமி எனும் உடற்கூறுயியல் 
ஆகட்டும். உள்ளது உள்ளபடி அப்படியே 
படித்து அப்படியே எழுதி அப்படியே 
வரைய வேண்டும் 

தானாக சிந்தித்து எதையும் 
எழுத முடியாது. 

பிறகு,
 ஃபிசியாலஜி - உடல் இயங்குவியல்.

 உடல் எப்படி இயங்கும் என்பது 
ஏற்கனவே விதிக்கப்பட்டு விட்டது.
இது இப்படி தான் இயங்கும். 
இதை அப்படியே படித்து அப்படியே
 தான் எழுத வேண்டும். 
இதில் புதிதாக சிந்தித்து எழுத 
ஒன்றுமில்லை.

அடுத்து பயோ கெமிஸ்ட்ரி

இது தான் நம்பர் ஒன் ஈ அடிச்சான் 
காப்பி சப்ஜெக்ட். 
சிட்ரிக் ஆசிட் சைக்கிள், க்ளைகாலிசிஸ் , 
அந்த பாத் வே , இந்த பாத் வே என 
ஆயிரம் பாத் வேக்கள் இருக்கும். 
இதில் மானே தேனே பொன்மானேவெல்லாம் 
போட்டு எழுத முடியாது. அப்படியே 
இருக்க வேண்டும். 

மைக்ரோ பயாலஜி 
எனும் நுண்ணுயிரியில்  இதில் புதிதாக 
யோசித்து எந்த கிருமிக்கும் பெயர் வைக்க முடியாது. 
அந்த கிருமி எங்கு எப்படி வளரும்.
 எந்த நோயை உருவாக்கும் என்பதை 
அப்படியே படித்து அப்படியே எழுத வேண்டும். 

அடுத்து பார்மகாலஜி எனும் மருந்தியல்.

 இதில் எந்த மருந்து மாத்திரையையும் 
கூட்டவும் முடியாது குறைக்கவும் முடியாது. 
ஒரு லெட்டர் கூட மாறாமல் எழுத வேண்டும். 
இதை மக் அப் என்றும் கூறலாம். 

இது மாதிரி தான் அனைத்து சப்ஜெக்ட்களும் 
எம்பிபிஎஸ்ஸில். 
ஐந்தரை வருடங்களும் கிட்டத்தட்ட 
அனைத்து புத்தகங்களையும் 
இஞ்ச் பை இஞ்ச் படித்து
 மண்டையில் ஏற்றி கரைத்து குடித்து 
அப்படியே எழுத வேண்டும். 

எம்பிபிஎஸ்க்கு புத்தகத்தை அப்படியே படித்து 
அப்படியே எழுதி விட வேண்டும். 
இதற்கு தனியாக பெரிய சிந்தனா சக்தி 
எல்லாம்
தேவையில்லை. இதை எம்பிபிஎஸ் 
படித்த அனைவரும் ஒப்புக்கொள்வார்கள். 

இனியும் நீட் தான் குவாலிட்டி 
என்று தயவு செய்து கம்பு சுத்தாதீர்கள் 
நியாயமாரே..

Dr.ஃபரூக் அப்துல்லா 
பொது நல மருத்துவர் 

நன்றி : Prakash JP
....................................

No comments:

Post a Comment