Tuesday, October 3, 2017

திவசம் //// செய்கின்ற போது சொல்லப்படும் மந்திரத்தின் அர்த்தம்

திவசம் செய்கின்ற போது சொல்லப்படும்
மந்திரத்தின் அர்த்தம் என்ன?

யன்மே மாதா பிரலுலோப சரதி அனனு விருதா
தன்மே ரேதஹ பிதா விருங்க்தா ஆபுரண் யோப
பத்யதாம் ரங்கராஜ சர்மணே ஸ்வாஹா
ரங்கராஜ சர்மணே அஸ்மது பித்ரே இதம் நமம
கிருஸ்ண கிருஸ்ண கிருஸ்ண…

இந்த மத்திரத்தின் அர்த்தம்:

என்னுடைய அம்மா பத்தினியாக
 இல்லாது இருந்து, என்னை வேறு 
ஒருவருக்கு பெற்றிருந்தால், 
இந்த திவசத்திற்கு உரிமை கோரி 
என்னுடைய உண்மையான தகப்பனார் வருவார்.
 அப்படி இல்லாது என்னுடைய 
அம்மாவின் கணவரே இந்த திவசத்தை 
பெறட்டும். இதுதான் இந்த மந்திரத்தின் 
அர்த்தம். அதாவது திதி கொடுப்பவனுடைய
 தாய் சில வேளைகளில் சோரம் போய்
 வேறு யாருக்காவது அவனைப்
 பெற்றிருக்கலாம் என்று இந்த 
மந்திரம் சொல்கிறது. உன்னுடைய 
அப்பா வேறு யாராவதாக இருக்கலாம்,
 நீ அப்பன் பேர் தெரியாதவனாக இருக்கலாம் 
என்று இந்த “புனித” மந்திரம் சொல்கிறது.

தந்தைக்கு திவசம் செய்கின்ற 
போதுதான் இப்படி என்று நினத்து விடாதீர்கள்.
 தாய்க்கு செய்கின்ற திவசத்திலும் 
வஞ்சகம் வைக்கவில்லை. 
அம்மாவிற்கு திவசம் 
செய்கின்ற போது சொல்கின்ற 
ஒரு மந்திரம் இது

என்மே மாதா ப்ரவது லோபசரதி
அன்னவ் வ்ரதோ தன்மே ரேதஹ
பிதா வ்ருந்த்ததாம் ஆபுரண்யஹா
அவபத்ய நாம….

என்னுடைய அம்மா யாருடன்
 படுத்த என்னைப் பெற்றாளோ 
தெரியவில்லை. ஒரு நம்பிக்கையில்தான் 
அவளை என்னுடைய அப்பாவின்
 மனைவியாகக் கருதுகின்றேன். 
அந்த அம்மாவிற்கு இந்த திவசம்
போய் சேரட்டும்.

நம்மை பெற்றெடுத்த தாய்
 தந்தையரை இழிவுபடுத்தும் 
இப்படிபட்ட மந்திரங்களையா
 நாம் சொல்லிவருகிறோம் !

மூதாதையர்களின் மூட
 நம்பிக்கையை
 பின்பற்றுவதை விட்டுவிட்டு 
சுயமாக சிந்தித்து செயல்படுவோம்.
/////////////////////////////

No comments:

Post a Comment