Thursday, October 3, 2024

சிந்திக்க -2025

 சிந்திக்க -2025

எப்படி  முடியும் என்பதற்கும்
எப்படி முடியாது என்பதற்கும்
உள்ள தூரமே துணிச்சல்

 இன்று நீ படிக்கும் புத்தகங்களே
 நீ
உட்காரும் நாற்காலியை முடிவு செய்கிறது

எழுதும்போது #கூர்மையாய்  எழுதுங்கள்..பேசுகையில் #ஆழமாய்பேசுங்கள்...
கேட்கும்போது பணிவாய்  #கேளுங்கள்...யோசிக்கும்  போது #தெளிவாய் யோசியுங்கள்...

அலமாரியில் இறந்த உடல் ஒன்று இருந்தது அவன் பெயர் புத்தகம் என்று தெரிய வந்தது விசாரணையில் கொலையாளி மொபைல் என்று தெரியவந்தது..!

 துணிச்சலுடன் #செயல்பட எப்போது முடிவு #எடுக்கிறோமோ, அப்போதே வாழ்க்கையில் #பாதி அபாயத்தை கடந்துவிட்டோம் என்பது #உறுதி

   பேனா தவறாக எழுதியதற்காக  யாரும் ஒருபோதும்   பேனாவை உடைப்பதில்லை...அப்பாவி காகிதத்தைத் தானே  கிழித்தெறிகிறோம்...! அப்படித்தான் சில நல்மனிதர்களையும்!!!

  மனைவிக்கு  நேரம் #ஒதுக்குங்கள். இல்லையெனில் #சண்டைகளுக்கு நேரம்ஒதுக்க வேண்டி #வரும்.!!

பத்து தலைமுறையின் ஏழ்மையை 

ஒரே தலை முறையிலே மாற்றும்

 வல்லமை கொண்ட

 ஒரே ஆயுதம் "படிப்பு"

************************** 

கலவரம் ஏற்படுத்த 

ஒரு ரவுடி போதும

அமைதியும் நல்லிணக்கமும்

 ஏற்படத்தான் தலைவன் தேவை

**************************

Google உள்ளே feed 

பண்ணியதைதான் தரும்

பெரியவங்க feel 

பண்ணியதையும் 

நமக்கு தருவாங்க

********************** 

பத்து தலைமுறையின்

 ஏழ்மையை, ஒற்றை

தலைமுறையிலேயே  மாற்றும் 

வல்லமை கொண்டது 

படிப்பு மட்டுமே...

************************** 

 வாழ்க்கை எதிர்மறைகளைக்

 கொண்டது. பிச்சைக்காரன் 

அமைதியுடன் பாதுகாப்பற்று

 உறங்குவான்

      பாதுகாப்புடன் இருப்பான் ஆனால்

 அமைதியாக உறங்க மாட்டான்.

****      

சூதாட்டம் - ஜாதகம்  இந்த இரண்டையும் 

 நம்பி  நடந்தவன் எவனும் பணக்காரன்ஆனது இல்லை இந்த இரண்டையும் நடத்துபவன்  #ஏழை ஆனது  இல்லை. முட்டாள்களே வாடிக்கையாளர்கள்  அதனால் அவனுக்கு  கவலையில்லை

************************ 

பணம் #உழைத்து வாழ்பவர்களிடம்

 பேசி விட்டு #சென்று விடுகிறது..

      #பிறர் உழைப்பில் வாழ்பவர்களிடம்

  ஏசி போட்டு #தங்கி விடுகிறது!

******************* 

இன்றைய உண்மைகள்..

 ********************

பக்கத்து வீட்டிலிருப்பவர்களிடம் 

முகங் கொடுத்து பேசுவதில்லை.. 

பக்கத்து கிரகத்தில் மனிதன்

 வாழ வாய்ப்பிருக்கா எனஆராய்ச்சி..

மருத்துவத் துறையில்  மாபெரும் வளர்ச்சி.. நோயாளிகளின்

 எண்ணிக்கையோ நாளுக்கு நாள் அதிகம்...

***************** 

பட்டப் படிப்புகள் அதிகம்...

பொது அறிவு குறைவு...

கை நிறைய சம்பளம்..

மனசு நிறைய நிம்மதி இல்லை..

 வாய் நிறைய சிரிப்பில்லை..

 **************

சாராயம் நிறைந்து கிடக்கு...

 குடிநீர் குறைந்து கொண்டே இருக்கு..முகநூல் நண்பர்கள் அதிகம்.. முகம் தெரிந்த நண்பர்களோ குறைவு

**************** 

கடவுள் எங்கே நம்மை பார்க்கப் போகிறார் என நினைத்து #தவுறுகள் பல செய்து பின்பு  முதுமையில் #மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட               போது.. அங்கே எழுதப்பட்டிருந்தது " ICU"

*********************** 

 

 

 

 

 

No comments:

Post a Comment