Friday, April 5, 2019

Thoughts2019 ( 2 )

 ********************
#சேறு என்னும் 
வார்த்தையை
உருவாக்கி அதில் 
"#கால்" வைத்தால்தான் 

"#சோறு "என்னும்
நுட்பமாய் உணர்த்தும்      
        மொழி #தமிழ்
******************
தூக்கி வீசப்பட்ட 
இடத்திலேயே மரமாய் 
வளந்திடு
தூக்கி வீசியவர் 
அன்னாந்து பார்க்கும் 
அளவுக்கு உயந்திடு
---------------------------
#சேறு என்னும் 
வார்த்தையை
உருவாக்கி அதில் 
"#கால்" வைத்தால்தான் 

"#சோறு "என்னும்
நுட்பமாய் உணர்த்தும்      
        மொழி #தமிழ்
  ----------------------
மனிதர்களைப் பார்த்து
#இறைவன் 
இரண்டு முறை
#சிரிக்கிறான்.

இது என் சொத்து என்று 
பங்காளிகள் 
சண்டையிடும் போது ஒரு
 முறை #சிரிக்கிறான்.


நோயாளியைப் பார்த்து,
#மருத்துவர் கவலைப்படாதே
நான் #குணப்படுத்தி
விடுகிறேன் 

என்று #சொல்லும்போது 
ஒருமுறை #சிரிக்கிறான்
♦♦♦♦♦♦
யாரொருவர் மீது தாக்குதல்களும், 
வன்முறைகளும், வசவுகளும், 
விசமர்சனங்களும் தொடர்ச்சியாக 
நிகழ்கின்றதோ அவர்கள்  
'வளர்ச்சி' யை   நெருங்கி 
கொண்டிருக்கின்றார்கள்  
என்று அர்த்தம்.
########
ஒரு மரத்தின் அடியில் 
புத்தருக்கு ஞானம் பிறந்ததாம்...

இங்கு மரம் வைக்கவே 
ஞானம் பிறக்க வேண்டும்
ஒவ்வொரு மனிதருக்கும் !!!
@@@@@@@
♥♥♥♥♥
ஏழ்மையை ஒழிக்க
ஏழைகளை அழிப்பதே
சிறந்த வழி.
# முட்டாள்களின் வாக்குரிமை
அறிவாளிகளையும் பாதிக்கும்.
♥♥♥♥♥♥

இந்தி பிரச்சார சபா


தமிழ்நாட்டில் ஆரம்பித்து 
100 ஆண்டுகளாகிவிட்டது.
இந்தக் கட்டிடம் கட்டி 
60 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது.


வருடம் 10 லட்சம்பேர் 
இந்தி கற்கின்றனர்.
தென் இந்தியாவில் அதிகம்பேர்
 கற்பது இம்மாநிலத்தில்தான்.


 ஏழை மாணவர்களுக்கு இலவசமாய் 
இந்தி கற்றுகொள்ளும் வசதியும் உண்டு.


இந்தித்  திணிப்பை எதிர்த்து 
தமிழகம் கதி கலங்கிய 
காலத்திலும் கூட இந்தக் கட்டிடம் 
சேதமடையவுமில்லை 


இந்தி கற்றுக்கொடுக்கும் எவரும்
 தாக்கப்பட்டதாய் சரித்திரமுமில்லை.
இங்கு இந்தி  கற்கிறவனை பேசுகிறவனை
 வெறுத்ததாக எந்த ஒரு செய்தியுமில்லை.


ஆனால்.இந்தித் திணிப்பை 
எதிர்த்து தன் உயிரை மாய்த்து 
போராடியவர்கள் ஏராளம்.


இப்படியான ஒரு எதிர்ப்பு 
நிலையை இந்தியத்தில் 
எங்காவது காண முடியுமா?


 இந்திய துணைக்கண்டத்தில் 
தமிழ்நாடுதான் 
பரிணாமத்தில் முதலிடம்.


கருத்தை கருத்தால் மட்டுமே
 எதிர்கொள்ளும் தமிழ் மண்ணின்
பெருமை இது.


♥♥♥♥♥♥♥♥
அன்பான 
தமிழ் மக்களே!

நீங்கள் திமுகவாக 
இருக்கலாம்...

நீங்கள் அதிமுகவாக 
இருக்கலாம்...

நீங்கள் மதிமுகவாக 
இருக்கலாம்...

நீங்கள் பாமகவாக 
இருக்கலாம்...

நீங்கள் காங் கட்சியாக 
இருக்கலாம்...

நீங்கள் பாஜகவாக 
இருக்கலாம்...

நீங்கள் தேமுதிகவாக
 இருக்கலாம்...

நீங்கள் தினகரன் கட்சியாக இருக்கலாம்...

நீங்கள் நாம் தமிழராக 
இருக்கலாம்...

நீங்கள் ரஜினி 
கட்சியாக இருக்கலாம்...

நீங்கள் கமல் கட்சியாக 
இருக்கலாம்...

நீங்கள் திருமா 
கட்சியாக இருக்கலாம்...

நீங்கள் எந்தக் கட்சியாகவும் 
இருக்கலாம்...

ஆனால் நீங்கள் 
தமிழர்கள்தானே? 

தமிழ்நாட்டு எம்பிக்கள் 
பாராளுமன்றத்தில் 

தமிழ் வாழ்க என்று 
தமிழில் பேசி, பதவி பிரமாணம்
 செய்யும் பொழுது, 

ஏன் 
பாஜக எம்பிக்களுக்கு 
கோபம் வர வேண்டும் ? 
ஏன் அவர்கள் கூச்சல் 
போட வேண்டும் ? 
ஏன் அவர்கள் பாரத் மாதா கி ஜே 
என்று கத்த வேண்டும்? 

கத்தவே இல்லை என
 சொல்லிடாதீங்க.
செய்தி சேனல்கள் 
அத்தனையும் பாருங்க. 
தமிழ் வாழ்க என்று 
சொன்னதும் கத்துகிறார்கள்.

தமிழ் என்றால் 
இப்படி கோபப்பட்டு 
கத்துபவர்கள் தமிழுக்கு
 எதிரானவர்கள், 
தமிழர்களின் நலன்களுக்கு 
எதிரானவர்கள் என்பதை 
நீங்கள் உளமார உணர, 
இதை விட ஒரு சான்று தேவையா?

தமிழை இகழ்ந்தவனை 
என் தாய் தடுத்தாலும் விடேன் 
என்றார் புரட்சிக்கவி பாரதிதாசன்.

 தமிழா... மொழி யுணர்வு,
 இன உணர்வு கொள். நமது எதிரி யார் 
என்பதை முதலில் நீ உணர்ந்துகொள்.

தமிழுக்கும் அமுதென்று பேர் –
அந்தத் 
தமிழ் இன்பத் தமிழ் 
எங்கள் உயிருக்கு நேர்
♥♥♥♥♥♥
இல. ஜோதிநாராயணன் பதிவு!

தமிழ் இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட 
மொழிகளில் தொன்மையும் செழுமையும் 
மிக்க ஒரு மொழி. 
ஹிந்தி மொழிக்கு என்ன உரிமையிருக்கிறதோ
 அதே உரிமை தமிழ் மொழிக்கும் 
இந்தியாவின் பிற மொழிகளுக்கும்
 உண்டு என்பது,  எவருக்கும் குறிப்பாகத்
 தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள இந்தியப் பாராளுமன்ற 
உறுப்பினர்களுக்கு நன்றாகவே 
தெரிந்திருக்க வேண்டும்.

'தமிழ் வாழ்க' என்று சொல்வதைக்
 கூடச் சகித்துக் கொள்ள முடியாத 
ஹிந்தி மொழி வெறி பிடித்தவர்கள் 
இன்றைக்குப் பாராளுமன்ற அவைக்குள் 
அமர்ந்திருக்கிறார்கள் என்று சொல்வது
 இந்தியாவின் எதிர்காலச் சகிப்புத்
 தன்மைக்கும், ஒற்றுமை உணர்விற்கும் 
எதிராக இருப்பதாகத் தோன்றுகிறது.

சிங்கள மொழி வெறி பிடித்த பவுத்த 
பிக்குகளின் பிடியில் சிக்கித் தமிழினத்தைச்
 சீரழித்த இலங்கை தேசத்தின் வரலாறு
 காலப் போக்கில் இங்கும் நிகழாது என்று 
சொல்வதற்கு எந்த உத்தரவாதமும் 
இருப்பதாகத் தெரியவில்லை.

தமிழ் வாழ்க என்கிற முழக்கத்தை 
எதிர்த்துக் கோசமிடும் வட மாநில பாஜகவினரின்
 செயலை தமிழ் நாட்டில் பிறந்து தமிழைத் தாய் 
மொழியாகக் கொண்டுள்ள தன் பெயரிலேயே 
தமிழைக் கொண்டுள்ள தமிழிசை வகையறாக்கள் 
இதை ஏற்றுக் கொள்கிறார்களா என்பதை 
அவர்களின் முடிவிற்கே நாம் விட்டுவிடுவோம்.

தமிழ் வாழ்க என்பது என்ன பேசவே கூடாத
 Un parliamentary வார்த்தையா என்ன அதை 
எதிர்த்துக் குரல் கொடுப்பதற்கு?

எங்கே போனது இந்தியாவின் சகிப்புத் தன்மை?. 

இந்தியாவின் ஆதிபத்தியத்திற்குள் அடங்கி 
இருக்கும் தமிழ் மொழி இந்தியாவின் 
ஆட்சி மொழியாகக் கூட இன்னும் 
அங்கீகரிக்கப் படவில்லை. ஆனால் 
இந்தியாவைத் தவிர்த்த வேறு சில நாடுகளில் 
அது ஆட்சி மொழிகளுள் ஒன்றாக 
அலங்கரித்துக் கொண்டிருக்கிறது. 
ஹிந்தி இந்தியாவைத் தவிர்த்து வேறு எந்த 
நாட்டிலும் அங்கீகரிக்கப்படக் கூட இல்லை 
என்பதைத் தமிழ் எதிர்ப்பாளர்கள் ஏற்றுக் 
கொண்டுதான் ஆக வேண்டும்.

இந்தியாவின் ஒற்றை மொழியாக ஹிந்தி
 ஒரு போதும் இருக்க முடியாது. 
அப்படி இருக்கவும் கூடாது. அப்போது தான் இந்தியா
 இந்தியாவாக நிலைத்திருக்க முடியும் 
என்பதை அகண்ட பாரதக் கனவுகானும்
 வீர் சாவர்க்கரின் வாரிசுகள் புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழ் மட்டுமல்ல இந்தியாவின் 
அனைத்து மொழிகளும் பாராளுமன்றச் 
சுவர்களில் பட்டு எதிரொலிக்க வேண்டும். 
அதை சகித்துக் கொண்டல்ல மனமுவந்து 
மரியாதையுடன் ஏற்றுக் கொள்ள 
பாஜக உறுப்பினர்கள் பழகிக் கொள்ள வேண்டும்.

எனது மொழியும் குரலும் ஒடுக்கப்படுவதாக 
நான் எப்போது உணர்கிறேனோ அப்போது 
எனது முழக்கம் முன்பை விட அதிக ஒலியுடன் 
ஒலிக்கும் என்பதற்கான ஒரு முன்னோட்டம் தான்
 "தமிழ் வாழ்க" என்கிற தமிழக பாராளுமன்ற
 உறுப்பினர்களின் இன்றைய ஏகோபித்த முழக்கம்.

அது இனி அங்கு ஓங்கி ஒலிக்கட்டும்.
#தமிழ்_வாழ்க
#வாழ்க_தமிழ்
♦♦♦♦♦♦
"Worlds often Heard"
உருப்போடு'' - உருப்படமாட்டாய்''
வகுப்பறைகள் அதிகம் கேட்ட வார்த்தைகள்

''இன்னொரு ஜென்மம்
என்றொன்றிருந்தால்''
பூங்காக்கள் அதிகம் கேட்ட வார்த்தைகள்

''கடைசியாய் எல்லாரும்
முகம்பார்த்துக் கொள்ளுங்கள்''
மயானங்கள் அதிகம் கேட்ட வார்த்தைகள்

''சவால் விடுகிறேன் - சபதம் செய்கிறேன்'
மேடைகள் அதிகம் கேட்ட வார்த்தைகள்

'பாலாறு - தேனாறு'
பொதுஜனம் அதிகம் கேட்ட வார்த்தைகள்

''மறக்காமல் கடிதம் போடு''
ரயிலடிகள் அதிகம் கேட்ட வார்த்தைகள்

''அய்யா குளிக்கிறார்''
தொலைபேசி அதிகம் கேட்ட வார்த்தைகள்
&&&&&&
#தோல்வி
 கிடைத்துக் கொண்டே இருப்பதால் நான்
 ஒன்றும் கவலைப்படப்போவதில்லை!!!
 ஏனெனில்..... 
நான்
 ஒவ்வொன்றிலும் பங்கெடுத்துக்
கொண்டே இருக்கிறேன்!!!

 தேவையான #அனுபவங்களை 
பெற்றுக்கொண்டே இருக்கிறேன்!!! 

எனவே 
ஒரு நாள்.....இல்லை ஒரு நாள்
     கை ..தட்டல் 
வாங்கி விடுவேன்
♦♦♦♦♦♦
தலைக்கு மேலே  தூக்கிவைத்து 
 கொண்டாடுகிறார்கள் என்று ஆனந்தம் 
கொள்ளாதீர்கள்..... 
 *பூசணிக்காயை*  தூக்கி சுற்றுவது
 பூஜை அறையில் வைக்க அல்ல...
 *போட்டு*  *உடைக்க* ... !!!
...........................
பிடித்ததை செய்ய காலம்
 நேரம் பார்க்கவும் கூடாது... 
பிடிக்காததை செய்து விட்டு கால 
நேரத்தின் மீது *பழி* *போடவும்* கூடாது ... !!!
.................................
 *பணம்* பெரிதல்ல... அதைக் 
கொடுக்க நினைக்கும் *மனமே* பெரிது .... 
 *சினம்* பெரிதல்ல... அதை அடக்கியாளும்
 *குணமே* பெரிது.... !!!
...........

நீட் உண்மைகள்
 மருத்துவ படிப்பு பற்றி
             ♦♦♦
     ப்ளஸ் டூ தேர்வில் 
மனப்பாடம் செய்து அதிக மதிப்பெண்கள் 
எடுத்தார்கள்.. 
அதினால் நீட்டில் எடுக்க முடியவில்லை.. - 

அறிவாளிகள்// 
ஏப்பா அறிவாளிகளா, 
மெடிக்கல் படிப்பே வெறும் 
மனப்பாடம் தான்..

நீட் பற்றிய 
மூடநம்பிக்கைகளில் 
இதுவும் ஒன்று.. 

நீட்டுக்கு முன் இருந்த பனிரெண்டாம் 
வகுப்பு தேர்வு முறைப்படி மனப்பாடம் 
செய்து படித்தார்களாம். மனப்பாடம் செய்து 
அப்படியே எழுதி மார்க் எடுத்தார்களாம்
 அதுவும்
ஸ்டேட் போர்டு மாணவர்கள் 
படித்ததை 
அப்படியே எழுதுவார்களாம், 

சிபிஎஸ்சி மாணவர்கள் தாமாக 
 யோசித்தி சிந்தித்து சிந்தித்து 
எழுதுவார்களாம்

ஐயா ராசாக்களா.. 

உண்மையில் 
எம்பிபிஎஸ் படிக்கும் போது 
எழுதும் அனாடமி எனும் 
உடற்கூறுயியல் 
ஆகட்டும். 
உள்ளது உள்ளபடி அப்படியே 
படித்து அப்படியே எழுதி அப்படியே 
வரைய வேண்டும் 

தானாக சிந்தித்து எதையும் 
எழுத முடியாது. 

பிறகு,
 ஃபிசியாலஜி - உடல் இயங்குவியல்.

 உடல் எப்படி இயங்கும் என்பது ஏற்கனவே
 விதிக்கப்பட்டு விட்டது. இது இப்படி தான் 
இயங்கும். இதை அப்படியே படித்து
 அப்படியே தான் எழுத வேண்டும். 

இதில் புதிதாக சிந்தித்து எழுத ஒன்றுமில்லை.

அடுத்து பயோ கெமிஸ்ட்ரி

இது தான் நம்பர் ஒன் ஈ அடிச்சான் காப்பி சப்ஜெக்ட். 
சிட்ரிக் ஆசிட் சைக்கிள், க்ளைகாலிசிஸ் , 
அந்த பாத் வே , இந்த பாத் வே என 
ஆயிரம் பாத் வேக்கள் இருக்கும். 

இதில் மானே தேனே பொன்மானேவெல்லாம்
 போட்டு எழுத முடியாது. அப்படியே 
இருக்க வேண்டும். 

மைக்ரோ பயாலஜி 
எனும் நுண்ணுயிரியில்  இதில் 
புதிதாக யோசித்து 
எந்த கிருமிக்கும் பெயர் வைக்க முடியாது. 
அந்த கிருமி எங்கு எப்படி வளரும். எந்த நோயை 
உருவாக்கும் என்பதை அப்படியே 
படித்து அப்படியே எழுத வேண்டும். 

அடுத்து பார்மகாலஜி எனும் மருந்தியல்.

 இதில் எந்த மருந்து மாத்திரையையும்
 கூட்டவும் முடியாது குறைக்கவும் முடியாது. 
ஒரு லெட்டர் கூட மாறாமல் எழுத வேண்டும்.
 இதை மக் அப் என்றும் கூறலாம். 

இது மாதிரி தான் அனைத்து 
சப்ஜெக்ட்களும் 
எம்பிபிஎஸ்ஸில். ஐந்தரை வருடங்களும் 
கிட்டத்தட்ட அனைத்து புத்தகங்களையும் 
இஞ்ச் பை இஞ்ச் படித்து மண்டையில் ஏற்றி
 கரைத்து குடித்து அப்படியே எழுத வேண்டும். 

எம்பிபிஎஸ்க்கு புத்தகத்தை அப்படியே படித்து
 அப்படியே எழுதி விட வேண்டும். இதற்கு 
தனியாக பெரிய சிந்தனா சக்தி எல்லாம் 
தேவையில்லை. இதை எம்பிபிஎஸ் படித்த 
அனைவரும் ஒப்புக்கொள்வார்கள். 

இனியும் நீட் தான் குவாலிட்டி 
என்று தயவு செய்து கம்பு சுத்தாதீர்கள் 
நியாயமாரே..

Dr.ஃபரூக் அப்துல்லா 
பொது நல மருத்துவர் 
நன்றி : Prakash JP
♥♥♥
எந்தச் சிக்கலுமே
உன்னைச் சிதைக்க
வந்தது அல்ல..
செதுக்க வந்ததே..
♥♥♥♥
ஆயிரம் சொற்களைவிட 
ஒருசெயல் சிறந்தது” 
......
ஹிந்தியை வரட்டுத்தனமாக எதிர்க்கிறார்கள்,
தமிழ்வெறி காரணமாக எதிர்க்கிறார்கள்,
சிந்தனையைவிட்டுவிட்டு உணர்வுகள் 
தூண்டப்பட்டு எதிர்க்கிறார்கள் விரும்பியோரை 
படிக்கவிடுங்களேன்  என்றெல்லாம் 
முட்டுகொடுக்கும் முற்போக்குவாதிகளுக்கு..

68ஆம் ஆண்டுவரை ஹிந்தி ஒரு விருப்ப பாடமாகத்
 தமிழகத்திலே இருக்கவே செய்தது..

பிரச்சினை எப்போது ஆரம்பித்தது என்றால்..
1964ல் நேரு மரணமடைய,அதற்குப் பிறகு 
பிரதமரான சாஸ்திரியின் காலத்தில்
 65ல் திடீரென்று ஒரு மத்திய அரசு உத்தரவு 
போட்டபோதுதான்..

அதுவரை நேருவின் உறுதிமொழியை அமல்படுத்தி
 (இந்தி பேசாத மக்கள் விரும்பும் வரை 
ஆங்கிலமே தொடரும்..ஹிந்தி விருப்ப பாடமாகவே 
இருக்கும் என்ற உறுதிமொழி) நடைமுறையிலிருந்ததை
 ரத்து செய்து ஹிந்தி கட்டாயமாக்கப்பட்டது.
அதாவது
Part 1தமிழ்
Part 2 ஆங்கிலம்
Part 3 ஹிந்தி
என்று அவசரச்சட்டம் வந்த்து.
அதுவரை பொதுத்தேர்வில்(11)வகுப்பில் எல்லா பாடங்களும் 
பாசாகி ஹிந்தியில் பாசாகாவிட்டாலும் 
மாணவர் SSLC தேறிவிடுவார்.இனி அது முடியாது
.ஹிந்தியிலும் கண்டிப்பாக பாசாக வேண்டும்.
நேருவின் உறுதிமொழி அவரது சாம்பல் 
காற்றில் பறக்கவிட்டதைவிட வேகமாக 
பறக்கவிடப்பட்டபோதுதான் தென்னகமும் 
குறிப்பாகத் தமிழகமும் கொதித்து எழுந்தன..
அப்பட்டமான வாக்குறுதி மீறலை எதிர்த்து
 களம் கண்டனர்.
ஒட்டகத்துக்கு மூக்கை மட்டும் நுழைக்க
 அனுதிகொடுக்கப்போய் அது கூடாரத்தையே
 கபளீகரம் செய்த கதையாக விருப்ப பாடம் 
என்று சொல்லி கட்டாயமாக்குவதா என்று 
அண்ணா கேள்வி எழுப்பினார்.திமுக ஆட்சி 
வந்தபிறகு 68ல் சட்டமன்றத் தீர்மானப்படி
 மூக்கை நுழைக்கவும் அனுமதி இல்லை 
என்று,தமிழகத்தில் ஹிந்தி அரசுப் 
பள்ளிகளிலிருந்து முற்றிலும் அகற்றப்பட்டது.
தனியார் படிப்பதற்கோ ஹிந்தி பிராசாரசபாவுக்கோ 
எந்த தொல்லையும் கொடுக்கவில்லை.அப்போது 
கல்வி மாநிலப்பட்டியலில் இருந்தது குறிப்பிடத் தக்கது.
இப்போது மாநில அரசின் கல்வித்துறை அதிகாரம்
 கட்டுப்படுத்தப்பட்டுவிட்டது.அதனால்தான்
நீட் நடைமுறைக்கு வர முடிந்தது...
இப்போது கூட அரசியல் சட்டப்படி இந்தியாவுக்கு 
22்அங்கீகரிக்கப்பட்ட ஆட்சிமொழிகளும் 
இணைப்பு மொழி அந்தஸ்தில் ஆங்கிலமும் உள்ளது .
வரலாறைத் தெரிந்துகொண்டு வார்த்தைகளை விடுங்கள்..!

 தேவையெனில் இனியும் தகவல்கள் தொடரும்..
..............
தை 
தேர்ந்தெடுப்பது 
என்று உங்களுக்குத் தெரியாத போது,
அனைத்திலும் முழுஈடுபாடு காட்டுங்கள். 
அப்போது 
வாழ்க்கை உங்களுக்காக தேர்ந்தெடுக்கும், 
அந்தத்
தேர்வு ஒருபோதும் தவறுவதில்லை

😃😃😃😃😃
இந்தியை ???
நாங்கள் எதிர்ப்பதில்லை 
அதை கற்க கட்டாயமாக்குதலை
 தான் எதிர்க்கிறோம்.
ஒரு பிராமணனை 
#மாமிசம் உண்ண வற்புறுத்துவதை 
போல தான்.
😃😃😃😃😃
மும்மொழி கொள்கையும் இந்தி மொழியும் 
இந்நியர்களின் தாய் மொழியுயும்

இந்தியல யாரையும் எப்போதும் இந்நி என்ன
 spanish french உட்பட எந்த மொழியையும் 
படிக்கவேண்டாம் என தடுதாததில்லை 
கட்டாய பாடமாக படிங்க சொல்வதையே
 திராவிட இயக்கங்கள் எதிர்த்தன தற்போதும்
 எதிர்க்கிறார்கள்
ஒரு விஷயத்தை நல்லா தெரிந்துகொள்ளுங்கள் 
இந்தி தேசிய மொழி எல்லாம் கிடையாது 
ஆனால் தேசிய மொழி என்ற மாயையை
 உருவாக்கி வைத்திருக்கிறார்கள்
அதேபோல் மூன்று மொழி கொள்கையை
 எதிர்த்த தென் இந்தியாவை தவிர ஏற்றுக்கொண்ட
 அத்தனை மாநிலங்கள மக்களும் தங்களது
 தாய் மொழியை மறந்து விட்டனர் சந்தேகம் இருந்தால் 
இங்கு இந்திக்காரர்கள் என பணிபுரியும் நபர்களிடம்
ஒடிசி(ஒரிசா) பெங்காலி(மேற்கு வங்கம்) மராடி(மும்பை
 மகாராஷ்டிரா) குஜராத்தி(குஜராத்) மணிப்பூரி(மணிப்பூர்)
அசாமி(அசாம்) மக்களிடம் உங்க தாய் மொழி 
தெரியுமான்னு கேட்டால் 80 பேர் எழுத படிக்க 
தெரியாது என்பர் 
நல்லா தெரியுமா என்றால்
 10% தெரியாது என்பர் 
பணியிடங்களை கூட இந்தியில் மட்டுமே நிரப்பிட
 முடியாது ஆனால் அப்படி ஒரு மாயையை தற்போது
 ஏற்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள் இதில் வேதனை 
தரும் விஷயம் யாதெனில் மாநில அளவிலான 
அரசு பணிக்கு கூட தமிழ் தெரியாதவனை தமிழ் 
தேர்வில் கலந்துகொண்டு வெற்றி பெற்றதாக ஏதோ
 தில்லுமுல்லு செய்து உட்புகுத்துதல் நடைபெறுகிறது
(உதாரணமாக சமீபத்தில் நடைபெற்ற  tbeb engineering காக
 பணியிடங்களில் தமிழ் மொழி தெரியாத வடக்கத்த 
இந்திக்காரர்கள் எப்படி வென்றார்கள் என்பதே தற்போது 
மில்லியன் டாலர் கேள்வியாக பலருக்கும் இருக்கிறது) 
இப்படியான சூழ்நிலையில் இந்தியை கட்டாயமாக
 படிக்க சொல்வது ஆபத்தானது என எப்படி புரியாமல் போகும்
 உலக அளவில் இந்தியாவிலிருந்து சென்று 
ஆளுமை பொறுப்புகளில் அமர்ந்துபணிபுரிபவர்களில்
 90% தமிழர்களாகவே இருக்கிறார்கள்

 அதற்கு காரணம் என்ன எப்படி என எப்போதாவது
 யோசித்தது உண்டா?
காரணம் நம் மரபணுவில் ஊறிய மொழியான
 தமிழில் படிப்பதும் ஆங்கலத்தை கற்றுக்கொண்டாலும்
 தமிழில் அதன் விளக்கங்களை கற்றுக்கொள்வதாலும்
 தான் ஆகையால் மும்மொழி கொள்கை.என்பது ஆபத்தானதே 
சும்பா எங்கப்பாவ தாத்தாவ ஏமாற்றிட்டாங்கன்னு
 புலம்பாமல் விருப்பம் உள்ளோர் தேவைனா கூடுதலாக 
அந்த மொழியை கற்றுக்கோங்க கட்டாய உட்புகுத்துதலை 
ஆதரிக்காதீங்க அவ்வளவு தான் சொல்ல முடியும்
இதுக்கு மேலும் கூவிட்டே இருந்தால் ஏதாவது கட்சி
 வெறியாகவே இருக்கும் அதற்கு மேல அப்படியான 
நிலைபாட்டையே தொடர்ந்து கொண்டிருப்பவர்களை 
ஒன்னும் பண்ண முடியாது 
நன்றி
கோகுல் ராஜா
♦♦♦♦♦
‪கூர்க்காகிட்ட பேசனும், அதனால ஹிந்தி படி...‬
‪காசிக்கு போகனும், அதனால ஹிந்தி படி...‬
‪பானிபூரி ஆர்டர் பண்ணனும், அதனால ஹிந்தி படி...‬
‪தமிழ்நாட்ல வேலை பாக்குற நார்த் இண்டியன் ட்ட 
பேசனும், அதனால ஹிந்தி படி...‬

‪ஒரு பய கூட சொல்லல...‬
‪ஹிந்தி நல்ல அருமையான(?) ஒரு மொழி, 
அதனால அத படின்னு..!‬
♦♦♦♦♦♦
ஹிந்தி மொழி கட்டாயம் ஆக்குணா 
தமிழ் மொழி அழியும்ணு சொல்றது நம்பும்படி 
இல்லையே!!!!!

அடேய், சூத்திர முண்டங்களா.....

ஜெர்சி பசு வந்து நாட்டு மாடு அழிஞ்சுதா 
இல்லையா .....

கோதுமையும் மைதாவும் வந்து சிறுதானியம்
 அழிஞ்சுதா இல்லையா....

சீனி சக்கரை வந்து நாட்டு சக்கரை அழிஞ்சுதா 
இல்லையா....

மேற்கத்திய இசைவந்து கிராமிய இசை 
அழிஞ்சுதா இல்லையா....

மரபணு மாற்றப்பட்ட காய்கறிகள் வந்து நாட்டு 
காய்கறிகள் அழிஞ்சுதா இல்லையா....

ஆங்கிலம் வந்து தமிழ் மொழியில் ஊடுருவி
 பேச்சு மொழியில் பாதி ஆங்கிலம் கலந்து பேசுறோமா இல்லையா....

ஹிந்தி மொழிவந்து ராஜஸ்தானி, பிகாரி, 
 ஒரிய மொழிகள் அழிஞ்சுதா இல்லையா...

இன்றைக்கு எதையெல்லாம் இழந்தோமோ 
அது தான் உடலுக்கு நல்லதுன்னு 
டாக்டர் சிவராமன் சொல்றாரா இல்லையா....

#விதையை இழந்தோம் மீட்க போராடுகிறோம்....

மொழியை இழந்தால் #உறுத்தெரியாமல்
 #அழித்தொழிக்கப்படுவோம்.....

முட்டாள் #பக்தசென்மங்களுக்கு
 எப்படி புரியவைப்பது?
♦♦♦♦♦♦
தான் 
மட்டும் முன்னேறினால் 
"முயற்சியாளன்"...
தன்னை சுற்றி இருப்பவர்களையும் 
முன்னேற்றினால் "வெற்றியாளன்
♥♥♥♥
கடல்
அலைக்கோ கரையை கடப்போம் 
என்ற நம்பிக்கை !
கரையில் நிற்கும் மனிதனுக்கோ அது கரையை 
கடந்து வராது என்ற நம்பிக்கை !
♥♥♥♥♥
இருட்டு 
என்று ஒரு பிரச்சினை இருந்ததால்
 தான் மின்விளக்கு கண்டுபிடிக்கப்பட்டது... 

 பயணம் என்பது பிரச்சினையான 
போது தான் வாகனம் உருவானது... 

 எதிர்பாராத திருப்பங்கள்தானே நம் 
வாழ்க்கையைச் சுவையாக அமைத்துத் 
தரமுடியும்...  
சிந்தித்து செயலாற்றுங்கள்
்்்்்்்்்்
🌴மண்வெட்டி பிடித்தவனை 
மாப்பிள்ளையாக சமுதாயம் மறுக்கிறது,

🌴விவசாயி என சொல்லிக்கொண்டு 
பெண் பார்க்க முடியல,

🌴எதிர் காலத்தில் எதை உண்ணுமோ 
இந்த சமுதாயம் எனக்கு தெரியல,

🌴திருமணத்தில் நான் விளைவித்த
 பொருட்கள் மட்டும் வேண்டும் என்றார்கள்,

🌴மணமேடைக்கு மண்கரை படித்த 
என்னை வேண்டாம் என்றார்கள்,

🌴எந்த நேரத்திலும் வெளுக்காத என் விவசாயம்
திருமண நேரத்தில் வெளுத்துபோனதே சாயம்,

இது என்றுமே என் மனதில் ஆறாத காயம்...😭😭😭

விளைவித்தவன்
பிச்சைக்காரன்...!!

விலை வைத்தவன்
இலட்சக்காரன்...!!

இரண்டு கோடிகள் கொடுத்து
ஒரு ஜோடி நாய்கள் வாங்கும்
எங்கள் தேசத்தில்...!!

இருபது கோடிகள் கொடுத்து
ஒருவர் மட்டுமே பயணிக்க
கார் வாங்கும் எங்கள் தேசத்தில்..!!

இருநூறு கோடிகள் கொடுத்து
கிரிக்கெட் அணியை ஏலமெடுக்கும்
எங்கள் தேசத்தில்..!!

இரண்டாயிரம் கோடிகளை 
கடன்சுமையாய்
தள்ளுபடி செய்யும்
எங்கள் தேசத்தில்...!!

இருபதாயிரம் கோடிகளை
பொழுதுபோக்க ஒதுக்கும்
எங்கள் தேசத்தில்...!!

இரண்டு இலட்சம் கோடிகளுக்கு
அலைக்கற்றை ஏலமெடுக்கும்
எங்கள் தேசத்தில்...!!

எங்களையோ அல்லது நாங்கள் 
விளைவிக்கும்
 பொருளையோ ஏலமெடுக்கத்தான்
எவருமில்லை....!!

இப்படிக்கு:  விவசாயி மகன்.

🌳விவசாயிக்கு மதிப்பு கொடுங்கள்

படித்து வருந்தியது!!!
🌳🤝🤝🤝💪💪💪🙏🙏🙏🙏🙏🙏

இந்த பதிவை அலச்சிய படுத்தாதீர் 


இது விவசாயின் கண்ணீர்
பல்லக்கில் 
அமர்ந்து 
பயணம்  செல்பவனும்
பல்லக்கைத் தூக்கிச் 
செல்பவனும் 
ஒரே 
இந்து கிடையாது. 


அவனைக் 
கீழே இறக்கி விடு. உன்னைக் 
கொஞ்ச நேரம்
தூக்கிச் சுமக்கச் சொல். அல்லது குறைந்த 
பட்சம் கீழே இறங்கி உன்னோடு சமமாகவாவது 
நடக்கச் சொல்


அப்போது தான்
யார் இந்து என்று உனக்கு தெரியும் ? 
புரியும் உனக்கு ?
@@@@@@@@

ஆனால்
உண்மையை மட்டும்
புறிந்து கொள் 
♦♦♦
....==..
'ஹிந்தி படிக்காததால் முன்னேறவில்லை' 
கும்பல்களின் கவனத்துக்கு.. கல்வி, மருத்துவம்,
 உட்கட்டமைப்பு என எல்லா துறைகளிலும் ஹிந்தி 
மாநிலங்கள் எல்.கே.ஜி என்றால் தமிழ்நாடு 
பன்ணிரண்டாம் வகுப்பு.

ஹிந்தி படிக்காததால் எப்படி, இந்தியாவின் 
வளர்ந்த மாநிலங்களின் பட்டியலில் முதல் 
இடங்களில் தமிழ்நாடு உள்ளது??

ஹிந்தி படிக்காததால் எப்படி, இந்தியாவின் 
மருத்துவ தலைநகராக சென்னை உள்ளது??

ஹிந்தி படிக்காததால் எப்படி, சாப்ட்வேர்
 ஏற்றுமதியில் முதலிடங்களில் தமிழ்நாடு உள்ளது??

ஹிந்தி படிக்காததால் எப்படி, மருத்துவ 
சுகாதார குறியீடுகளில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது??

ஹிந்தி படிக்காததால் எப்படி, மோட்டார் வாகன
 துறையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது??

ஹிந்தி படிக்காததால் எப்படி, சமூக பொருளாதார
 குறியீடுகளில் இந்தியாவில் தமிழகம் முன்னணியில் உள்ளது??

ஹிந்தி படிக்காததால் எப்படி, GDP யில் இந்தியாவில்
 இரண்டாம் இடத்தில் தமிழகம் உள்ளது??

ஹிந்தி படிக்காததால் எப்படி, தொழில் 
வளர்ச்சியில் முன்னணியில் தமிழகம் உள்ளது???

ஹிந்தி படிக்காததால் எப்படி, மேற்கத்திய 
நாடுகளில் அதிகளவு தமிழர்கள் கம்ப்யூட்டர்
 போன்ற உயர் தொழில்களில் பணியில் உள்ளார்கள்??

ஹிந்தி படிக்காத தமிழகத்தில் வேலை
 தேடி அலை அலையாக ஏன் இந்தி பேசும் 
வட மாநில மக்கள் வருகிறார்கள்??
ஹிந்தி மொழி இல்லாமலேயே தமிழகம்,
 ஹிந்தி மாநிலங்களை விட, எல்லாவற்றிலும்
 முன்னிலையில் இருக்கிறது... முதலிடத்தில் இருக்கிறது... 
ஹிந்தி மாநிலங்கள் பின்தங்கிய நிலையில் இருக்கிறன....

இந்திய பொருளாதாரம் தமிழ்நாடு, கர்நாடகா, 
மகாராஷ்டிராவை நம்பிதான் இருக்கிறது..!!
இந்தியாவில் இருக்கும் 29 மாநிலங்களில்,
 20 மாநிலங்களின் ஒட்டுமொத்த ஜிடிபியை 
தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா 
ஆகிய 3 மாநிலங்கள் அளிக்கிறது. 
இந்த 3 மாநிலங்களின் ஜிடிபி மதிப்பு
 778 பில்லியன் டாலராக 
உள்ளது குறிப்பிடத்தக்கது. ஜிடிபி 
அளவீட்டில் இந்தியாவில் பணக்கார 
மாநிலங்களில் மகாராஷ்டிரா 
முதலிடம் பெற்றுள்ளது. 
மகாராஷ்டிரா மாநிலத்தை அடுத்து 
இப்பட்டியலில் இருப்பது தமிழ்நாடு. 

2014-15 நிதியாண்டின் படி தமிழ்நாட்டின் 
ஜிடிபி பங்கீடு 150 பில்லியன் டாலராக உள்ளது.
 தமிழ்நாட்டின் மொத்த ஜிடிபியில் விவசாயத் 
துறைக்கு மிகப்பெரிய பங்கு உள்ளது. 
விவசாயத் துறையைத் தாண்டி தமிழ்நாடு
 மென்பொருள் ஏற்றுமதி மற்றும் 
ஆட்டோமொபைல் உற்பத்தியில் 
முக்கிய இடத்தைப் பிடிக்கிறது.

1960களில் மேற்கு வங்காள மாநிலத்தின் 
தனிநபர் வருமானம் ஒரு ஆண்டுக்கு 
390 ரூபாய், தமிழ்நாட்டில் 330 ரூபாய். 
இதே 2014இல் பெங்காளிகளின் வருடாந்திர
 வருமானம் 80,000, தமிழர்களின் சராசரி 
வருடாந்திர வருமானம் 1,36,000 ரூபாய். 
அதேபோல் 1960இல் இந்தியாவின் ஏழை
 மாநிலமாகத் திகழ்ந்த தமிழ்நாடு, இப்போது
 பணக்கார மாநிலங்களில் ஒன்றாக விளங்குகிறது..
...........
எவன் ஒருவன் தாய்மொழியை விட்டுவிட்டு 
பிற மொழியை கற்று போற்ற நினைக்கிறானோ
 அவன் தன் அடையாளத்தை மட்டும் அல்ல 
அவன் சந்ததியின் அடையாளத்தையே
இழந்துவிடுகிறான்.பொருளீட்டுவதற்கு இந்தி 
அவசியமெனில்....ஏன் வட இந்திய, பிற மொழி 
நடிகர் நடிகைகள் இங்கு வந்து தமிழ் கற்று நடிக்க 
விரும்புகிறார்கள்? டிஸ்கவரி சானல் காரனே 
தமிழுக்கு வந்துட்டான்,
ஸ்டார்போர்ட்ஸ்தமிழுக்குவந்துட்டான்
 இந்திக்காரன்ஜீதமிழ் என்றுதமிழுக்குவந்துட்டான் 
அப்படின்னா என்ன தமிழ் கற்றால் தமிழில் உரைத்தால்
 இங்கு பிற மாநிலத்தை விட பொருளீட்டலாம் என்று தான் , 
இத விட்டுபுட்டு இந்தி இந்தின்னா நாம வாழ்க்கை 
கேள்விக்குறி தான்? இன்று இந்தி கற்றுக்கச்சொல்வான் 
அப்புறம் இந்தி தான் தெரியுமில தமிழ் எதற்கும்பான்....
.இப்படியே போய் நம் பண்பாடு, கலாசாரம், மொழி , இனம் 
அடையாளத்தையே அழித்துவிடுவான்....நம் சந்ததிக்கு 
தண்ணீரை விட்டுவிட்டு செல்லவில்லை,
 மரத்தை, இயற்கை வளங்களையும் 
விட்டு்விட்டு செல்லவில்லை, 
இந்த இனத்திற்கான மொழயையாவது 
விட்டுச்செல்வோம்...அப்படியாவது
 நம் முன்னோர் விட்டுச்சென்ற விவசாய, 
இயற்கை வளத்திற்கான விதையை 
கண்டுபிடித்து உலகிற்கே கற்றுக்கொடுக்கும்
 பாக்கியத்தை அவர்களுக்கு விட்டுச்செல்வோம்.
............
ஹிந்தி மொழி வந்தால் தமிழ் அழிந்துவிடுமா?

உதாரணத்திற்கு பீகார் எடுத்து கொள்ளலாம், 
அலுவல் மொழி ஹிந்தி மற்றும் உருது. 

பலரின் தாய் மொழி ஹிந்தி, பூர்வீகமாக அங்கு 
பேசப்பட்டு வந்த மொழிகள் அங்கிகா, பஜ்ஜிக, 
போஜ்பூரி, மகாஹீ, மைதிலி, மஜஹி, முஸஸ, 
ஸடரி, சுரப்பூரி, குடமளி, பஞ்சபார்கானியா, வஜ்ஜிக.

தற்போதைய நிலவரம் மலைவாழ் மக்கள் 
சொற்பதில் மேலே குறிப்பிட்ட சில மொழிகளை 
பேசுகின்றனர், இதர மொழிகள் அனைத்தும்
 வழக்கு கொடிந்துவிட்டது.  

தனது பேச்சு மொழியாகவும் எழுது 
மொழியாகவும் பீகார் மக்கள் பயன்படுத்துவது 
ஹிந்தி என்று நினைத்துக் கொண்டு 
ஹிந்துஸ்தானியை தான் பயன்படுத்தி வருகிறார்கள். 
ஹிந்தி பெல்ட் மாநிலங்களில் இதே கூத்து தான்,
 சரியான ஹிந்தியை எந்த ஹிந்தி பெல்ட் 
மாநிலங்களிலும் உபயோகம் செய்வது இல்லை.

மாறாக உருது, பெர்சியன், சமஸ் கலவையில் 
உருவான ஹிந்துஸ்தானியை தான் 
பேசிக் கொண்டு இருக்கின்றார்கள். போஜ்பூரி கூட 
மரண படுக்கையில் தான் உள்ளது. 
ஒரே தேசம் ஒரே மொழி என்ற கேனத்தனத்திற்கு 
வழிவிட்டால், அந்த பூர்வீக மொழிகள் கலாச்சாரங்கள் 
நாளிடையில் வழக்கு கொடிந்து அழிந்துவிடும்.

இதே நிலை தான் மதத்திற்கும் தமிழகத்தில் பல 
வழிபாடுமுறைகள் உள்ளது, ஹிந்து என்று
 கூறிக் கொள்ளும் பலரும் ஒரு காலத்தில்
 சைவம் அல்லது வைணவத்தில் தான் 
இருந்திருப்பார்கள். சனாதன குப்பையில்
 வந்த பிறகு எவ்வளவு பேருக்கு தங்களுடைய 
மத நூல் தெரியும் என்று நினைக்கின்றீர்கள்.

பாதி பேருக்கும் மேல உபனிஷத்து,
 பகவத் கீதை, பஞ்சரந்தர ஆகமம், மகாபாரதம்,
இராமாயணம், பாகவத, விஷ்ணு, கருட , நாரதிய,
 பத்ம , வராஹ புராணங்கள் என்று நினைத்துக் 
கொண்டு பேசுவதை கேட்க முடிகிறது. 

இன்னும் எந்தெந்த வீட்டில் தேவாரம் திருவாசகம் 
பாடப்படுகிறது, இப்படி தான் அந்தந்த நிலைத்திணை 
மரபுகள் அழியும்.

இந்த ஹிந்தி பெல்ட் மாநிலத்தில் 
போய் பழமையான மொழி தமிழ், 
ஆகையால் அனைவரும் தமிழ் படித்தே 
ஆக வேண்டும் என்று கூறி தான் பாருங்களேன்,
 வாய்லையே சுடுவான்.

#TNAgainstHindiImposition
#StopHindiImposition

நன்றி.
♥♥♥♥♥

No comments:

Post a Comment