Friday, February 13, 2015

மரம்தான் -வைரமுத்து




உண்ணக் கனி
ஒதுங்க நிழல்
உடலுக்கு மருந்து
உணர்வுக்கு விருந்து
அடையக் குடில்

அடைக்கக் கதவு
அழகு வேலி

ஆடத் தூளி
தடவத் தைலம்
தாளிக்க எண்ணெய்
எழுதக் காகிதம்
எரிக்க விறகு

மரம்தான் மரம்தான் எல்லாம் மரம்தான்
மறந்தான் மறந்தான் மனிதன் மறந்தான்

- வைரமுத்து

No comments:

Post a Comment