*********
அரசன் எங்கு சென்றாலும்
அரசன் தான்
அடிமை எங்கு சென்றாலும்
அடிமைதான்
*******
*தனியாக* இருக்கும்
போது *சிந்தனையிலும்* ,
*கூட்டத்தில்* இருக்கும் போது
*வார்த்தையிலும்* நாம் மிக
கவனமாக இருக்க வேண்டும்...
******************
"அமைதி "சத்தம் கண்டால் குழம்பும்
. "அன்பு "நடிப்பிடம் தோற்கும்.
"அறிவு' முட்டாள்களிடத்தில் தடுமாறும்.
"நம்பிக்கை இவை #மூன்றையும்
தூக்கி நிறுத்தும்.
***********
#Female 'லுடன் சண்டை வராமல்
இருக்க பேசாமல் இருப்பதே #male
*************
Nothing about us without us
எங்களுக்கான எதுவுமே
நாங்கள் இல்லாமல் இல்லை
*********
பசிக்கு சோறு போட்டா
அவ உன் பொண்டாட்டி
பசிக்க விடாம சோறு போட்டா
அவ உன் தாய்.
************
பத்து தலைமுறையின்
ஏழ்மையை, ஒற்றை
தலைமுறையிலேயே
மாற்றும் வல்லமை
கொண்டது படிப்பு மட்டுமே...
****************
Google உள்ளே feed
பண்ணியதைதான் தரும்
பெரியவங்க feel
பண்ணியதையும்
நமக்கு தருவாங்க
…………
மனம் கெட்டால் உடல் கெடும்
உடல் கெட்டால்
மனம் கெடும்.
****************
இருகை இருக்கும்போது
வாழ் #கை'யை வெறுக்காதே
இருகால்கள்இருக்கும்போது
ஒரு'#காலு'ம் முடியாது
என பேசாதே. நம்பிக்'#கை'யோடு
வாழ்ந்துபார்,
எக்'#காலு'ம் நீ தோற்கமாட்டா
********
பென்சிலை எழுதி தீர்க்காமல்,
பிளேடின் உதவிகொண்டு
சீவியே தீர்த்தோம் எந்த ஒரு பென்சிலும்
எழுதி தீர்க்கப்படுவதில்லை
சின்ன வயசு குறும்பு
…………..
பணம் - கடவுள் இவை இரண்டும்
மனிதனை தவிர வேறு எந்த
உயிருக்கும் பயன்படாது..
…………..
பணமில்லா இளமையும்
துணையில்லா முதுமையும் விஷமே
,..............
இந்த உலகில் கொடுமையான ஜெயில்
நிம்மதியில்லாத வீடுதான்..!!
வீட்டை கவனமாக கையாழுங்கள் ..!!
மகிழ்ச்சி தானாக பிறக்கும் ..!!!
**********
பேனா தவறாக எழுதியதற்காக யாரும்
ஒருபோதும் பேனாவை உடைப்பதில்லை...
அப்பாவி காகிதத்தைத் தானே
கிழித்தெறிகிறோம்...!அப்படித்தான்
சில நல்மனிதர்களையும்!!!
*************
வாழ்க்கை எதிர்மறைகளைக் கொண்டது.
பிச்சைக்காரன் அமைதியுடன்
பாதுகாப்பற்று உறங்குவான்
பாதுகாப்புடன் இருப்பான் ஆனால்
அமைதியாக உறங்க மாட்டான்.
********
பசிக்கு சோறு போட்டா
அவ உன் பொண்டாட்டி
பசிக்க விடாம சோறு போட்டா
அவ உன் தாய்.
********
தராசுக்கு நியாயமெல்லாம் தெரியாது
எந்த பக்கம் கனமிருக்கிறதோ
அந்த பக்கம் சாய்ந்து விடும்
அப்படித்தான் சில மனிதர்களும்,
உறவுகளும்.
............
வீட்டு வேலைகளை அம்மா செய்த போது
உணரவே இல்லை..
மனைவி செய்த போது
கடமைதானே எனத் தோன்றியது.
மகள் செய்த போது தான்
மனது வலித்தது.
……
அறிவு ஒன்றுதான் அச்சத்தை முறிக்கும்
அரிய மருந்து.. அறிவை வளர்த்துக்
கொண்டால் எல்லாவிதமான
பயங்களும் அகன்றுவிடும்..
…………
ஒரு விஷயத்தை பரப்ப வேண்டுமானால்
அதை ரகசியம் என்று சொன்னால் பாதும்..!!
………….
மனிதன் மிகவும் சுயநலக்காரன்., ..
நேசித்தால் பிழைகளை பார்க்க மாட்டான்,
வெறுத்தால் நல்லதை பார்க்க மாட்டான்...
………
மகிழ்வித்து மகிழ் எனும்
சொல்லிற்கிணங்க
மகிழவைப்பதன்
மூலம் மகிழ்கிறது
………
உலக வரைபடத்திலுள்ள
மூலைமுடுக்குகளுக்
கெல்லாம்போக
விரும்புகிறாயா
ஒரு நூலகத்துக்குச் செல்.
……..
ஒரு புத்தகத்தை தொடுகிற போது
நீ ஓர் அனுபவத்தை தொடுவாய்!
எப்போதும் வாசி!
புத்தகங்களை ...நேசி
……..
போராடு…..இவனால் இதை
செய்ய முடியாது
என்று சொன்னவர்கள்..
இதை எப்படி செய்தாய்
என சொல்லும் வரை..
………
அன்னதானம் என்ற பெயரில்
ஒரு சிலருக்கு சோறு போடும்
இந்த சமூகத்திற்கு
இன்னும் புரிய வில்லை..
விவசாயி தான் இந்த
சமூகத்திற்கே சோறு
போடுகிறான் என்று..
………..
எத்தனை சிறப்பாக குதிரை
வண்டியை இழுத்தாலும்
அதற்க்கு சாட்டையடி உண்டு.
அதே போல் எத்தனை
சிறந்த மனிதனாக
நீ இருந்தாலும் உனக்கும்
விமர்சனம் உண்டு.
…………
உன் தகுதியை தீர்மானிப்பது
அடுத்தவனல்ல, உன் உழைப்பும்
நேரமும் தான்..
…………..
நேரம் சரியில்லை என்று
சொல்வதெல்லாம் பொய்
நீ சரியில்லை
என்பது தான் மெய்
……….
உலகத்திற்கு வேண்டுமானால்
நீங்கள் தனிமனிதன்.
ஆனால் உங்கள் குடும்பத்திற்கு
நீங்கள் தான் உலகம்
……..
வலிமை உள்ள போதே
சேமிக்க பழகு!!கடைசியில்
யாரும்' கொடுத்து
உதவ மாட்டார்கள்!
…………
தாங்கி பிடித்து ஆறுதல்
சொல்ல ஆளிருந்தால்
எறும்பு கடித்தால் கூட
அலறி கூப்பாடு
போடுவார்கள் பெண்கள்..
அதே சமயம் நமக்கு
நாம் மட்டுமே என்ற எண்ணம்
வந்து விட்டால்
பூகம்பமே வந்தாலும் தாங்கி
கொள்வார்கள் பெண்கள்..!!
………
சிலவற்றை தெரிந்து கொண்டால்
தெளிவாக இருப்பாய்...
பலவற்றை தெரியாமல் இருந்தால்
நிம்மதியாய் இருப்பாய்......
........................
வழியில் கண்டெடுத்த
ஐந்து ரூபாயை விட உழைப்பினால்
பெற்ற ஒரு ரூபாயின் மதிப்பு அதிகம்
............
கையிருப்பு குறையும் போது தான்
ஒரு பொருளின் அருமை தெரியும்..
வயது ஏற ஏறத் தான் வாழ்க்கையின்
மதிப்பு புரியும்..!!
……..
எதிரில் இருப்பவன் நோக்கம்
என்னவென்று தெரியாமல்
உதவி செய்து பலியாகி விடாதே..!
............
பொருட்களை பயன்படுத்துங்கள்
நேசிக்காதீர்கள்
மனிதனை நேசியுங்கள்
பயன்படுத்தாதீர்கள்
************
உனக்கு ஒன்றும் தெரியாது
என்று தெரிந்துகொள்வதுதான்
உண்மையான ஞானம்
**************
உடல் நலம் என்பத
உண்பதால் பாதி
உழைப்பதால் மீதி
மன நலம் என்பது
முதிர்ச்சியால் பாதி
மகிழ்ச்சியால் மீதி
************
அமைதியா இருக்கும்
மனிதனிடம் மொத்த
#பிரபஞ்சமும் அடங்கிவிடும்.
...........
நீ எதற்கு அதிகம்
பயப்படுகிறாயோ
அதையே எதிர்த்து நில்.
......
சுயநலம் என்பது
மிகச்சிறிய உலகம்.
அதில் ஒரே ஒரு
மனிதன்தான் வாழ்கிறான்.
**********
பெண் என்பவள்
#பிரபஞ்ச சக்தி!
அதை ஆக்க சக்தியாக
ஆக்குவதும் அழிவு சக்தியாக
மாற்றுவதும் பெற்றவர்கள்
கையில்தான் உள்ளது!
...........
எத்தனையோ கவிதைகள்,
புத்தகங்கள் இலக்கியங்கள்
#படித்திருக்கிறேன்....
ஆனால் நீ அலை பேசியில்
சொல்லும் "ம்" என்ற வார்த்தைக்கு
ஈடான எந்த வார்த்தையும்
#அகராதியில் இல்லை.
..........
என் கண்ணே..என்றேன்
ஓரகண்ணால் பார்த்தாள்
பாதி உயிர் போய்விட்டது
உதட்டில் சிரித்தால் பாதியில்
பாதிஉயிர் ..போய்விட்டது
கொஞ்ச உயிரும் facebookil
அவள் ஜோடியா இருப்பதை
பார்த்த போது போய்விட்டது
எங்கிருந்தாலும் வாழ்க ..
*****************
சுதந்திர தினத்திற்கும் குடியரசு
தினத்தன்றும் கொடி ஏற்றுவதில்
உள்ள வேறுபாடுகள்.......*
*#முதல் வித்தியாசம்......*
பதினைந்து ஆகஸ்ட்
சுதந்திர தினத்தன்று கொடி
ஏற்றும்போது கொடி
கீழிருந்து மேலே
கயிற்றால் இழுத்து பிறகு
கட்டப்பட்டுள்ள
கொடி திறக்கப்பட்டு பறக்கவிடப்படும்
அன்றைய தினத்திற்கு
மரியாதை செய்யும் விதமாக
செய்யப்படும் இந்த நிகழ்வுக்கு
"கொடியேற்றம்"
அதாவது Flag hoisting என்றழைக்கபடுகிறது.,
இருபத்து ஆறு ஜனவரி மாதம்
குடியரசு தினத்தன்று
கொடி கம்பத்தின் உச்சியிலே
கட்டப்பட்டு இருக்கும்.
அந்த முடிச்சு அவிழ்க்கப்பட்டு
அதாவது கொடி
திறக்கப்பட்டு பறக்கவிடப்படும்
இதை கொடியை பறக்கவிடுதல்
அதாவது flag unfurling என்பார்கள்..
,.............
வார்த்தைகள் பலம்
மிகுந்த ஆயுதம் தாக்குவதற்கு
பயன்படுத்தாதே
தற்காத்துக் கொள்வதற்கு
மட்டுமே பயன்படுத்து.
*************
அறியாமை தவறல்ல
அறிந்துகொள்ள முயலாமை
முற்றிலும் தவறு...!
************************
மெளனமாக இருப்பது
மிகவும் நல்லது.
அது ஒரு விரதம் தான்._
ஆனால் வாயை மட்டும்
மூடிக் கொண்டு மனம்
அலைபாய்ந்து
கொண்டிருக்குமானால்
அது மெளனமாகாது.
அதானால் எந்தப்
பயனும் இல்லை.
******************
நீ உறங்கிக் கொண்டு இருந்தாலும்
உனக்கு வருமானம் வரக்கூடிய
வாய்ப்பை நீ ஏற்படுத்திக்
கொள்ளாவிட்டால் சாகும் வரை
நீ உழைத்துக்கொண்டே
இருக்க வேண்டும்..!!?
*********************
மனமே, பதற்றப்படாதே!
மெல்ல மெல்லத்தான்
எல்லாம் நடக்கும்.
தோட்டக்காரன் - நூறு குடம் நீர்
ஊற்றினாலும் பருவம் வந்தால்
தான் பழம் பழுக்கும்...!!
,..............
நேரமும் வாய்ப்பும் எல்லோருக்கும்
எப்பொழுதும் இருந்து கொண்டே
தான் இருக்கின்றன...
முயற்சி எடுப்பவர்கள்
மட்டுமே தாங்கள் நினைத்ததை
அடைகின்றனர்....
////////////
நம் நாட்டுச் சித்தரிடம் ,,,,,
இந்த உலகில் எந்தெந்த உயிரினங்கள்
குட்டி போடுகின்றன?
எந்தெந்த உயிரினங்கள்
முட்டை இடுகின்றன? - இதுதான் கேள்வி.
இந்தக் கேள்விக்கு நிச்சயமாக அவரால்
பதில் சொல்ல முடியாது,
ஒரு வேளை சொன்னாலும் நீண்ட
பட்டியலே போட வேண்டியிருக்கும்
முடிவிருக்காது என்பது அவர்கள் யூகம்.
சித்தன் உடனே
சிக்கனமாய் இரண்டே இரண்டு
வரிகளில் பொருத்தமாய்,
பொறுமையாய் பதில் சொன்னார்.
*காதுகள் வெளியே உள்ள உயிரினங்கள்
எல்லாம் குட்டி போடும்,
காதுகள் வெளியே தெரியாத
உயிரினங்கள்
எல்லாம் முட்டை இடும்...
*****************
வாழ்க்கை எதிர்மறைகளைக்
கொண்டது. பிச்சைக்காரன்
அமைதியுடன்
பாதுகாப்பற்று உறங்குவான்.
பாதுகாப்புடன் இருப்பான்
ஆனால் அமைதியாக
உறங்க மாட்டான்.
**********************
ஏழை அப்பா
சாக்லெட் கேட்டு அழுதிருந்தால்,
பல் சொத்தை ஆகிடும்னு
சொல்லியிருப்பேன்..
ஐஸ் கிரீம் கேட்டு அழுதிருந்தால்,
ஜலதோஷம் பிடிச்சிரும்னு
சொல்லியிருப்பேன்..
இட்லி கேட்டு அழும்
குழந்தையிடம்எப்படி
சொல்வேன்..என்னிடம்
காசு இல்லை என்று....?
ஏழை ..அப்பா
************************
நல்லவனாய் இரு.... ஆனால்
கவனமாய் இரு....
உலகின் அத்தனை ஏமாற்று
பேர்வழிகளும் நல்லவர்களைத்
தான் தேடுகிறார்கள்..!!!
****************
கடவுள் நம்பிக்கை
இல்லாதவரை
தன்னம்பிக்கைக் காப்பாற்றும்
ஆனால் தன்னம்பிக்கை
இல்லாதவரைகடவுளாலும்
காப்பாற்ற முடியாது
**********************
பெண் என்பவள்
அதை ஆக்க சக்தியாக ஆக்குவதும்
அழிவு சக்தியாக மாற்றுவதும்
*************
நாம் விரும்பிய படி எல்லாம்
வாழ்க்கைசெல்லுவதில்லை
வாழ்க்கைசெல்லும் வழியே
நாம் சென்று கொண்டுஇருக்கின்றோம்!
**************
40 வயதுக்கு மேல் வாழ்க்கையில்
பொருத்தே அமைகிறது.
***************