Saturday, June 3, 2017

ஊட்டி

1819 ம் ஆண்டில் கோயம்புத்தூர் ஆட்சியராகப் பணியில் இருந்தார் 
ஆங்கிலேயரான ஜான் சல்லிவன்.

 விடுமுறை நாள்களை எப்படி கழிக்கலாம் என யோசித்தவருக்கு மலை உச்சியிலுள்ள அந்த இடத்தைப் பற்றிய தகவல் வருகிறது அந்த இடத்தின் சிறப்புகளைக் கேள்விப்பட்டவுடன் அங்கே எப்படியாவது சென்று விடுவது என முடிவெடுக்கிறார். 

பழங்குடியின மக்களின் உதவியோடு கோத்தகிரி வழியாக கரடு முரடான மலைப்பாதைகளின் வழியாக அந்த இடத்தைச் சென்றடைகிறார். அங்கே சென்றவுடன் அவருடைய பயணக் களைப்பு மறைந்து போகிறது. கேள்விப்பட்டது போலவே மனதையும் உடலையும் புத்துணர்ச்சி ஆட்கொள்ள அவருக்கு அந்த இடம் மிகவும் பிடித்துப்போகிறது. 

பின்பு அவர் அங்கேயே தங்குவதற்கு வீட்டை கட்டியதும், 
நீலகிரியின் தந்தை என அழைக்கப்பட்டதும் தனி வரலாறு. 
அத்தகைய சிறப்பு வாய்ந்த அந்த இடம் ஒத்தகமந்து என அழைக்கப்பட்ட உதகமண்டலம். சுருக்கமாக ஊட்டி.

No comments:

Post a Comment