Thursday, September 1, 2016

கவர்ந்த வாசகங்கள்.....

என்னைக் கவர்ந்த வாசகங்கள்...*


பேசி தீருங்கள்.
பேசியே வளர்க்காதீர்கள்.

உரியவர்களிடம் சொல்லுங்கள்.
ஊரெல்லாம் சொல்லாதீர்கள்.

நடப்பதைப் பாருங்கள்.
நடந்ததைக் கிளறாதீர்கள்.


உறுதி காட்டுங்கள்.
பிடிவாதம் காட்டாதீர்கள்.


விவரங்கள் சொல்லுங்கள்.
வீண்வார்த்தை சொல்லாதீர்கள்.


தீர்வை விரும்புங்கள்.
தர்க்கம் விரும்பாதீர்கள்.


விவாதம் செய்யுங்கள்.
விவகாரம் செய்யாதீர்கள்.


விளக்கம் பெறுங்கள்.
விரோதம் பெறாதீர்கள்


சங்கடமாய் இருந்தாலும்
சத்தியமே பேசுங்கள்.


செல்வாக்கு இருந்தாலும்
சரியானதைச் செய்யுங்கள்.


எதிர் தரப்பும் பேசட்டும்.
என்னவென்று கேளுங்கள்

எவ்வளவு சீக்கிரம் தீர்வு வரும் பாருங்கள். 

நேரம் வீணாகாமல்
விரைவாக முடியுங்கள்.
 

தானாய்த்தான் முடியுமென்றால்,
வேறு வேலை பாருங்கள்.
*யாரோடும் பகையில்லாமல் புன்னகித்து வாழுங்கள்...

No comments:

Post a Comment