தாஜ்மஹால்- புதிய தகவல்கள்
சுவாமி விவேகானந்தர்
தாஜ்மகாலைப் பார்த்த
போது கூறிய கருத்து
இங்குள்ள சலவைக் கல்துண்டு
ஒன்றைப்
பிழிய முடியுமானால்
அதிலிருந்துகூட
அந்த அரசனின் காதலும்
சோகமும் சொட்டும்.
இதன் உள்ளே உள்ள அழகு
வேலைப்பாட்டைக்
கற்க வேண்டுமானால்,
ஒவ்வொரு சதுர அங்குலத்திற்கும்
ஆறுமாதமாவது தேவைப்படும்.
உலக வரலாற்றில்
தாஜ்மஹாலைப் போல்
ஒரு இனிய கல்லறை இன்னும்
எத்தனை
ஜென்மங்களிலும் உதயமாகப்
போவதில்லை.
மும்தாஜ் எனும் அழகிய
மனைவியின்
மீது ஷாஜகான்
வைத்திருந்த நேசத்தின் கலை
வடிவம் அது.
வாழ்வில் ஒரு முறையாவது
காண வேண்டிய
அந்த கலை மிகு கட்டிடம்
எழுந்த கதை பெருங்கதை.
தட்சிணப் பிரதேசம் பர்ஹான்பூர்
என்ற ஊரில்தான்
முதன் முதலாக மும்தாஜின்
உடல் புதைக்கப்பட்டது.
இதற்குப் பின் ஆறு மாதம் கழித்து
அவரது உடல் ஊர்வலமாக எடுத்து
வரப்பட்டு
ஆக்ராவில் இப்போது தாஜ்மஹால்
உள்ள இடத்தில் புதைக்கப்பட்டது.
மும்தாஜ் இறந்து சரியாக ஒரு வருடம்
கழித்து
ஷாஜஹான் களத்தில் இறங்கினார்.
வெனிஸ் நகரத்து வெரோனியா,
துருக்கி நாட்டு உஸ்தாக் இசா அபாண்டி,
லாகூரைச் சேர்ந்த அகமத் எனப் பலரும்
வந்திருந்து ஷாஜகானும், கூட்டுச் சேர்ந்து
அமைத்த மொத்த வடிவமே
இன்றைய தாஜ்மஹால்.
அடுத்த கட்டமாக கட்டிடக் கலைஞர்கள்,
சிற்பிகள், கொத்தனார்கள் என
இருபதாயிரம் பேர் வேலைக்கு
தேர்வு செய்யப்பட்டு
மள மளவென பணிகளைத்
ஷாஜஹான்.
1632- ம் ஆண்டு வேலைத் தொடங்கி
1652 வரை சுமார் 20 ஆண்டு கால
உழைப்பின் சின்னம்தான்
இந்த தாஜ்மஹால்….
அதற்குப் பிறகு கூட ஒரு ஆண்டுக்கு
வெளியேயுள்ள
சுற்றுப் புறத்தில்
மிக நுண்ணிய வேலைகள்
நடந்தன.
தாஜ்மஹாலைச் சுற்றி 42 மீட்டர்
உயரத்திற்கு நிற்கும்
4 மினார்களும் (தூண்) லேசாக
வெளிப்புறம் சாய்த்து வைத்து
கட்டியிரிக்கிரார்கள்.
காரணம் ஏதேனும் அசம்பாவிதத்தில்
அந்த தூண்கள் விழுந்தால்
கூட தாஜ்மஹால் மீது பட்டுவிடக்
கூடாதே என்ற காரணுத்துக்காகத்தான்.
தாஜ்மஹாலின் வெளிப்புறக் கதவுகள்,
சுவர்களில் பதிக்க இந்தியாவைத்
தவிர ரஷியா, திபெத், பாரசீகம் என
பல இடங்களில் இருந்தும் வைரம்
, வைடூரியம், முத்து, பவளம் என பல
விதம் விதமாக வரவழைத்து
பயன்படுத்தி அழகு பார்த்தார்
ஷாஜஹான்.
புனித குரானிலிருந்து குறிப்பிட்ட
வாசகங்களை தேர்ந்தெடுத்து அவற்றை
கல்லறையைச் சுற்றிலும்
உள்ள சுவர்களில்
பொறிப்பது என்று முடிவு செய்தார்.
இதற்காக
உலகிலேயே மிகத் திறமையான
பாரசீக கலைஞர் “அமானாத்கான்
“ பெயர் சிபாரிசுச் செய்யப் பட்டது.
“ நான் எந்த வேலைச் செய்தாலும்
அதில் என் கையெழுத்தைப் போடுவேன்
என்று அடம்பிடித்த அவரை
“ சரி…கையெழுத்து போட்டுக்
கொள்ளுங்கள்”என்று அனுமதிக்
கொடுத்து வரவழைத்தார் ஷாஜஹான்.
இன்றைக்கும் அந்தச் சிற்பியின்
கையழுத்தைக் காணலாம்.
தாஜ்மகாலில் இவரது கையழுத்தைத்
தவிர வேறு எவரின் பெயரும் கிடையாது.
இப்படி அங்குலம் அங்குலமாக
பொன் நகையை உருவாக்குவது
போல் கட்டினார் ஷாஜஹான்.
தாஜ்மஹால் கட்டி முடிக்கப்பட்டு
கொஞ்சம் காலம் முஸ்லீம்கள்
மட்டுமே பார்க்க அனுமதிக்கப்பட்டனர்.
பிற்பாடு உலகெங்கிலும் இருந்து
பலர் வர வர அந்தத் தடை
தானாகவே நீங்கிப் போனது.
இத்தகைய அழகான தாஜ்மகால்
அதன்பிறகு வந்த ஆங்கிலேயெர்களின்
கண்களை பறிக்காமல் இருக்குமா?
பல ஆங்கில அதிகாரிகள் சுவர்களில்
பதிக்கப் பட்ட வைர, வைடூரியங்களை
சுரண்டி எடுத்துக் கொண்டு போனார்கள்.
லார்டு வில்லியம் பெண்டிங் என்பவர்
இடித்து விடலாம் என்று ஐடியா கொடுத்தார்.
இன்னும் பல ஆங்கிலேய அதிகாரிகள்
தாஜ்மகாலை ஒவ்வொரு கல்லாக
பெயெர்தெடுத்து, கப்பலில் ஏற்றிக்
கொண்டு போய், இங்கிலாந்தில்
இறக்கி மீண்டும் செட்டப் செய்து
விடலாம் என்று ஆலோசனை
வழங்கினார்.
இறைவனின் கருணையால்…
இன்றைக்கும் இப்படியொரு
அற்புதக் கட்டிடம் இந்தியாவில்
இருக்கிறதென்றால் அதற்குக் காரணம்
அப்போது வைஸ்ராயாக இருந்த கர்சன் பிரபு…
கலைஞர்களின்பால் மிகுந்த ஆர்வமும்,
ஆசையும் கொண்டிருந்த அவர்
மற்றவர்களின் யோசனையை
தூரத் தூக்கி எறிந்துவிட்டு தாஜ்மஹாலை
நல்ல முறையில் பராமரிக்க ஒரு சட்டமே
இயற்றினார்.
அதோடு மட்டுமல்ல..
இப்போது நீங்கள் தாஜ்மஹாலுக்குப்
போனால் மும்தாஜ் – ஷாஜஹான்
கல்லறைகளுக்கு மத்தியில் மேலே …
ஒரு அழகான பித்தளை விளக்கு
தொங்கிக் கொண்டிருக்கும்.
இதனைக் கொய்ரோவிலுருந்து வாங்கி
, இங்கு தொங்கவிட்டவரே இந்த கர்சன் பிரபுதான்.
இந்த தாஜ்மஹால் கட்டுவதற்கு
1000 யானைகளும், 40000 பணியாளர்களும்
வேலை செய்யப்பட்டனர்.
************
No comments:
Post a Comment