Wednesday, December 12, 2018

மனு தர்ம சாஸ்திரங்களில் சில....

 

இந்துத்துவ புனித  
மனு தர்ம சாஸ்திரங்களில் சில....

1. "பிராமண குலத்தில் பிறந்தவன் 
ஆசாரமில்லாதவனாயினும்,
 அவன் நீதி செலுத்தலாம்.
 சூத்திரன் ஒரு போதும் நீதி 
செலுத்தலாகாது"
 (*அத்தியாயம் 8. சுலோகம் 20.*)

2. "சூத்திரர் நிறைந்த தேசம் 
எப்பொழுதும் 
வறுமை யுடையதாயிருக்கும்" 
(அ.8. சு.22.)

3. "சூத்திரனாகவும், 
மிலேச்சனாகவும், பன்றியாகவும்
 பிறப்பது தமோ
 குணத்தின் கதி" (அ.8.சு. 22.)

4. "ஸ்தீரிகள் புணர்ச்சி 
விஷயத்திலும், பிராமணரைக் 
காப்பாற்றும் விஷயத்திலும்
 பொய் சொன்னால்
 குற்றமில்லை" (அ.8. சு.112.)
5. "நீதி ஸ்தலங்களில் பிரமாணம் 
செய்ய வேண்டிய பிராமணனை
 சத்தியமாகச் சொல்லுகிறேன்
 என்று சொல்ல செய்ய
 வேண்டும். பிரமாணம் செய்ய 
வேண்டிய சூத்திரனை 
பழுக்கக் காய்ச்சின
 மழுவை எடுக்கச் 
சொல்ல வேண்டும்; 
அல்லதுதண்ணீரில்
 அமிழ்த்த வேண்டும்.
 சூத்திரனுக்கு
 கை வேகாமலும்,
தண்ணீரில் 
அமிழ்த்தியதால்
 உயிர் போகாமலும் 
இருந்தால் 
அவன் சொன்னது
 சத்தியம்
 என உணர வேண்டும்" 
(அ. 8. சு. 113115.)

6. "சூத்திரன் பிராமணனைத்
 திட்டினால் அவனது நாக்கையறுக்க 
வேண்டும்" (அ.8. சு. 270.)
7. "சூத்திரன் பிராமணர்களின் 
பெயர், ஜாதி இவைகளை சொல்லித்
 திட்டினால் 10 அங்குல நீளமுள்ள
 இரும்புத் தடியைக் காய்ச்சி எரிய 
எரிய அவன் வாயில் 
வைக்க வேண்டும்" (அ.8. சு.271.)

8. "பிராமணனைப் பார்த்து
, "நீ இதைச் செய்ய வேண்டும், 
என்று சொல்லுகிற சூத்திரன் 
வாயிலும் காதிலும் எண்ணெயைக்
காய்ச்சி ஊற்ற வேண்டும்" (அ.8. சு.272.)

9. "சூத்திரன் பிராமணனுடன்
 ஒரே ஆசனத்திலுட்கார்ந்தால் 
அவனது இடுப்பில் சூடு போட்டாவது
 அல்லது ஆசனப் பக்கத்தைச் சிறிது 
அறுத்தாவது ஊரை விட்டுத் 
துரத்த வேண்டும்" (அ.8. சு.281.
 
10. "பிராமணனைக் காப்பாற்றும் 
பொருட்டு 
பிராமணரல்லாதாரைக்
 கொன்றவனுக்கு 
பாவமில்லை" (அ.8. சு.349.)

11. "சூத்திரன் பிராமணப் பெண்ணைப்
 புணர்ந்தால் அவனது உயிர்ப் போகும்
 வரையும் தண்டிக்க வேண்டும்."
"பிராமணன் கொலைக் குற்றம்
 செய்தாலும் அவனைக் கொல்லாமலும், 
எத்தகைய தண்டனைக்கும் 
ஆளாக்காமலும் பொருளைக் 
கொடுத்து 
அனுப்பிவிடவேண்டும்." (அ.8. சு.380.)

12. "அரசன் சூத்திரனை பிராமணர்
 முதலிய உயர்ந்த சாதிக்கு பணி விடை
 செய்யும்படி கட்டளையிட வேண்டும். 
சூத்திரன் மறுத்தால்
 அவனைத் தண்டிக்க வேண்டும்
." (அ. 8. சு.410.)

13. "பிராமணன் கூலி கொடாமலே 
சூத்திரனிடம் வேலை வாங்கலாம்
; ஏனென்றால் பிராமணனுக்குத் 
தொண்டு
 செய்யவே கடவுளால் சூத்திரன் 
படைக்கப் பட்டிருக்கிறான்" (அ. 8. சு.413.)

14. "பிராமணன் சந்தேகமின்றி
சூத்திரன் தேடிய பொருளைக்
 கைப்பற்றலாம். ஏனென்றால்
 அடிமையாகிய சூத்திரன் எவ்விதப் 
பொருளுக்கும் உடையவனாக
 மாட்டான்" (அ. 8. சு.417.)

15. "சூத்திரன் பொருள் சம்பாதித்தால், 
அது அவனுடைய எஜமானனாகிய
 பிராமணனுக்குச் சேர வேண்டுமேயன்றி 
சம்பாதித்தவனுக்குச் சேராது" (அ. 9. சு.416.)

16. "பிராமணனால் சூத்திர ஸ்திரீக்கு
 பிள்ளை பிறந்தால் அப்பிள்ளைக்கு
 தந்தை சொத்தில் பங்கில்லை" (அ. 8. சு.155.)

17. "பிராமணன் பொருளை
 அபகரித்த சூத்திரனை சித்தரவதை
 செய்து கொல்ல வேண்டும். ஆனால் 
சூத்திரனுடைய பொருளை பிராமணன் 
தம் இஷ்டப்படி 
கொள்ளையிடலாம்." (அ.9. சு.248.)
18. "பிராமணன் மூடனானாலும் 
அவனே மேலானதெய்வம்" (அ. 9. சு. 317.)

19. "பிராமணர்கள் இழி 
தொழில்களில்
 ஈடுபட்டிருந்தாலும்
 பூஜிக்கத்தக்கவர்கள் 
ஆவர்கள்." (அ. 9. சு.319.)

20. "பிராமணனிடமிருந்து 
சத்திரியன் உண்டானவனாதலால் 
அவன் பிராமணனுக்கு துன்பஞ் 
செய்தால் 
அவனை சூன்னியம் செய்து 
ஒழிக்க வேண்டும்." (அ.9 சு. 320.)
 
21. "சூத்திரனுக்கு பிராமணப்
 பணி விடை ஒன்றே பயன் 
தருவதாகும். 
அவன் பிராமணனில்லாத
விடத்தில்
 க்ஷத்திரியனுக்கும்,
 க்ஷத்திரியனில்லா விடத்தில் 
வைசியனுக்கும் தொண்டு 
செய்ய வேண்டும்.
 அதிகமான செல்வமும், பசுக்களும்
 வைத்திருக்கிறவன், பிராமணன்
 கேட்டுக் கொடுக்காவிட்டால், 
களவு செய்தாவது, பலாத்காரம் 
செய்தாவது அவற்றை பிராமணன் 
எடுத்துக் கொள்ள 
உரிமையுண்டு." (அ.11. சு.12.)
 
22. "சூத்திரன் வீட்டிலிருந்து
 கேளாமலும் யோசிக்காமலும்
 தேவையான பொருளைப் பிராமணன் 
பலாத்காரத்தினால்
 கொள்ளையிடலாம்." )அ.11. சு.13.)

23. "யோக்கியமான அரசன்
 இவ்விதம் திருடிய பிராமணனைக்
 தண்டிக்கக் கூடாது." (அ.11. சு.20.)

24. "பெண்களையும் சூத்திரரையும்
 கொல்லுவது மிகவும்
 குறைந்த பாவமாகும்." (அ.11. சு.66.)
25. "ஒரு பிராமணன் தவளையைக் 
கொன்றால் செய்ய வேண்டிய
 பிராயச்சித்தம்
 ஏதோ, அதைத்தான் சூத்திரனைக் 
கொன்றாலும் 
செய்ய வேண்டும்." (அ.11. சு.131.)

25(அ). "அதுவும் முடியாவிடில்
 வருண மந்திரத்தை
 3 நாள் ஜெபித்தால்
 போதுமானது." (அ.11. சு.132.)

26. "க்ஷத்திரியன் இந் நூலில்
 (மநுதர்ம சாஸ்திரத்தில்) 
சொல்லப்பட்டபடி
 ராஜ்யபாரம் பண்ணுவதே 
தவமாகும்.
 சூத்திரன் பிராமண பணி விடை 
செய்வதே தவமாகும்." (அ.11 சு.285.)
 
27. "சூத்திரன் பிராமணனுடைய
 தொழிலைச் செய்தாலும் சூத்திரனே 
யாவன். பிராமணன் சூத்திரனுடைய 
தொழிலைச் செய்யின்
 பிராமணனேயாவன்.
 ஏனெனில் கடவுள் அப்படியே 
நிச்சயம் செய்துவிட்டார்." (அ.10. சு.75)

28. "பிராமணரல்லாதவன் 
உயர்குலத்தோருடைய தொழிலைச்
 செய்தால் அரசன் அவனது பொருள்
 முழுவதையும் பிடுங்கிக் கொண்டு 
அவனை நாட்டை விட்டுத்

 துரத்திவிட வேண்டும்." (அ.10. சு.96.)

29. "சூத்திரன் இம்மைக்கும்,
 மோட்சத்திற்கும் பிராமணனையே 
தொழ வேண்டும்." (அ.10. சு.96.)
30. "பிராமணன் உண்டு மிகுந்த 
எச்சில் ஆகாரமும், உடுத்திக் கிழிந்த
 ஆடையும், கெட்டுப் போன
 தானியமும், 
சூத்திரனுடைய ஜீவனத்துக்கு 
கொடுக்கப்படும்." (அ.10. சு.125.)

31. "சூத்திரன் எவ்வளவு 
திறமையுடையவனாகயிருந்தாலும்
 கண்டிப்பாய் பொருள் சேர்க்கக் கூடாது.
 சூத்திரனைப் பொருள் சேர்க்கவிட்டால் 
அது பிராமணனுக்கு
 துன்பமாய் முடியும்." (அ.10. சு.129)

32. "மனுவால் எந்த வருணத்தாருக்கு 
இந்த மனுதர்ம சாஸ்திரத்தால்
 என்ன தர்மம் விதிக்கப்பட்டதோ,
 அதுவே வேத சம்மதமாகும். 
ஏனென்றால், அவர் வேதங்களை 
நன்றாய் உணர்ந்தவர்." (அ.2. சு.7.)
இன்னும் இதைப் போன்று 
ஆயிரக்கணக்கான அநீதியானதும்,
 ஒரு சாராருக்கு நன்மையும்,
 மறுசாரருக்குக் 
கொடுமையும் செய்வதுமான
 விதிகள் மனுதர்மத்தில்
 நிறைந்திருக்கின்றன....

ஆகையால் தோழர்களே...இந்நூலை
"மனுதர்மம்"என்று கூறுவதா?
அல்லது "மனு அதர்மம்"
என்று கூறுவதா?
# முடிந்தால்  சிந்திக்கவும். ...
*******************
 
திவசம் செய்கின்ற 
போது சொல்லப்படும்
மந்திரத்தின் அர்த்தம் என்ன?

யன்மே மாதா பிரலுலோப சரதி அனனு விருதா
தன்மே ரேதஹ பிதா விருங்க்தா ஆபுரண் யோப
பத்யதாம் ரங்கராஜ சர்மணே ஸ்வாஹா
ரங்கராஜ சர்மணே அஸ்மது பித்ரே இதம் நமம
கிருஸ்ண கிருஸ்ண கிருஸ்ண…

இந்த மத்திரத்தின் அர்த்தம்:
என்னுடைய அம்மா பத்தினியாக
 இல்லாது இருந்து, என்னை வேறு 
ஒருவருக்கு பெற்றிருந்தால், 
இந்த திவசத்திற்கு உரிமை கோரி 
என்னுடைய உண்மையான தகப்பனார் வருவார்.
 அப்படி இல்லாது என்னுடைய 
அம்மாவின் கணவரே இந்த திவசத்தை 
பெறட்டும். இதுதான் இந்த மந்திரத்தின் 
அர்த்தம். அதாவது திதி கொடுப்பவனுடைய
 தாய் சில வேளைகளில் சோரம் போய்
 வேறு யாருக்காவது அவனைப்
 பெற்றிருக்கலாம் என்று இந்த 
மந்திரம் சொல்கிறது. உன்னுடைய 
அப்பா வேறு யாராவதாக இருக்கலாம்,
 நீ அப்பன் பேர் தெரியாதவனாக இருக்கலாம் 
என்று இந்த “புனித” மந்திரம் சொல்கிறது.

தந்தைக்கு திவசம் செய்கின்ற 
போதுதான் இப்படி என்று நினத்து விடாதீர்கள்.
 தாய்க்கு செய்கின்ற திவசத்திலும் 
வஞ்சகம் வைக்கவில்லை. 
அம்மாவிற்கு திவசம் 
செய்கின்ற போது சொல்கின்ற 
ஒரு மந்திரம் இது

என்மே மாதா ப்ரவது லோபசரதி
அன்னவ் வ்ரதோ தன்மே ரேதஹ
பிதா வ்ருந்த்ததாம் ஆபுரண்யஹா
அவபத்ய நாம….

என்னுடைய அம்மா யாருடன்
 படுத்த என்னைப் பெற்றாளோ 
தெரியவில்லை. ஒரு நம்பிக்கையில்தான் 
அவளை என்னுடைய அப்பாவின்
 மனைவியாகக் கருதுகின்றேன். 
அந்த அம்மாவிற்கு இந்த திவசம்
போய் சேரட்டும்.
நம்மை பெற்றெடுத்த தாய்
 தந்தையரை இழிவுபடுத்தும் 
இப்படிபட்ட மந்திரங்களையா
 நாம் சொல்லிவருகிறோம் !

மூதாதையர்களின் மூட
 நம்பிக்கையை
 பின்பற்றுவதை விட்டுவிட்டு 
சுயமாக சிந்தித்து செயல்படுவோம்.
 
********* 

Wednesday, October 10, 2018

நில அளவை


நில அளவையில் அதிகம் பயன்படும் 
சென்ட் என்ற அளவுக்கு நிகரான
 சமமான மற்ற அளவுகள் 

1 சென்ட் - 435.6 சதுர அடிகள்
1 சென்ட் - 40.5 (40.46) சதுர மீட்டர்
1 ஹெக்டேர் – 247 செண்ட்
1  ஏக்கர் - 100 சென்ட் 
100 சென்ட் (4840 சதுர கெஜம்)
1 சென்ட் – 001 ஏக்கர்
1 கிரவுண்ட் - 222.96 சதுரமீட்டர்
1 கிரவுண்ட் - 5.5 சென்ட்
1 செண்ட் – 0.405 ஏர்ஸ்
1 ஏர் – 2.47 செண்ட்
1 சென்ட் – 0040 ஹெக்டேர்
1 சென்ட் - 3 குழி
1 டிசிமல் – 1 1/2 சென்ட்
*********************


Friday, June 1, 2018

FINAL Thought 2018

 ஒரு எழுத்தாளன் 
ஒரு புத்தகத்தை
 தொடங்கி வைக்கிறான். 
வாசகன் 
அதை முடித்துவைக்கிறான் - 
சாமுவேல் ஜான்சன்
 -------------------------
  #கடவுளிடம் எனக்கு 
வாழ்வில் 
ஒரு வெளிச்சம்
 காட்ட மாட்டியா..
என்னு வேண்டிகிட்டு
 விளக்கேற்றினேன்...
ஆனா,
நான் ஏற்றிய விளக்கில் 
தான் 
#கடவுளுக்கே அங்கு
 வெளிச்சம் 
உண்டாயிற்று...
/////////////////////////// 
*கொடுப்பதற்கு நீ பணக்காரனாக 
இருக்க* *வேண்டுமென்பதோ,
பணக்காரன் ஆகும்* 
*வரை காத்திருக்க வேண்டும் 
என்பதோ கிடையாது....*
*உதவ வேண்டும் என்ற குணத்திற்கு
 கால, நேரம் அல்லது ஏழை,
 பணக்காரன் என்பது  கிடையாது*
//////////////////
 கடைசி விவசாயியும் இறந்த
'பிறகுதான் உங்களுக்கு
தெரியும்...!
'கடவுள் விவசாயி வடிவில்
இருந்து இருக்கிறார்
என்று...!
/////////////////////////////
வீட்டுக்கு வந்த
'விருந்தாளிகிட்ட போகும் போது
' ...பாத்து பத்திரமா போயிட்டு
' வாங்கனு சொன்னா அது
“கிராமம்”
போறப்ப வெளி கேட்டை
சாத்திட்டு போங்கனு சொன்னா
அது "நகரம்”
............
"அடக்க முடியாத கோபத்தை
'கட்டி வை... காலம்
உன்னிடம் வரும்...
அப்போது ஒருவனையும்
விடாதே ......
///////////////////////////
*கேட்டது ஒன்று,!*
  *கிடைத்தது ஒன்று!!*  
ஆண்டவனிடம்,
வலிமை கேட்டேன்!
         கஷ்டங்களை
         கொடுத்தார்!!
எதிர் கொண்டேன்,
வலிமை பெற்றேன்.?​
  
அறிவு கேட்டேன்!
       பிரச்சினைகளை
       கொடுத்தார்!!  
சமாளித்தேன்                              
அறிவை  பெற்றேன்.?​


தைரியம் கேட்டேன் !
        ஆபத்துக்களை      
        கொடுத்தார் !!
சந்தித்து மீண்டேன்  ,
தைரியம் பெற்றேன்.


அன்பு கேட்டேன் !
        வம்பர்களை    
        கொடுத்தார்
அனுசரித்து சென்று
வம்பர்களின்
அன்பையும் பெற்றேன்.


வளமான வாழ்வு
 கேட்டேன்!     
      சிந்திக்கும் மூளையை
      கொடுத்தார்.
வளமான வாழ்வு 
கிடைத்தது.?​


*கேட்டது ஒன்று,!*
        *கிடைத்தது ஒன்று!!*
*கிடைத்ததை வைத்து*
        *கேட்டதைப் பெற்றேன்*.?​
//////////////////////////
தேவை முடிந்ததும் நண்பன் 
துரோகி ஆகிறான் ..,,
தேவை தொடங்கும் போது 
துரோகி நண்பன் ஆகிறான் ..,,
இது தான் உலகம் ..,,
#எவர்_தேவைக்கும்_
நீ_பொருள்_ஆகாதே..!!
..............
"மறப்பது"           
புத்திக்கு, மருந்து.!
"மன்னிப்பது" மனதிற்கு, 
மருந்து.!!
..............
அமைதியாய் இருக்கும் 
மனிதனிடம்
 மொத்த பிரபஞ்சமும் 
அடங்கிவிடும்.
 ///////////////////////////
சுயநலம் என்பது மிகச்சிறிய 
உலகம். அதில்
 ஒரே ஒரு மனிதன்தான் 
வாழ்கிறான்.
 //////////////////
பசுவின் மடியை கொசு 
கடித்தாலும் 
அது பாலைக் குடிப்பதில்லை,
 இரத்தத்தைத்தான் குடிக்கும்.
///////////////////
ஆயிரம் உபதேசங்களைவிட
 ஓர் அனுபவம் சரியான 
பாடத்தைக் கற்பிக்கும்.
////////////////////
'மௌனமும், சிரிப்பும் மிகவும்
 சக்தி வாய்ந்த வார்த்தைகள்...
மௌனம் நிறைய பிரச்சனைகளை
 குறைத்து விடும்...
சிரிப்பு நிறைய பிரச்சனைகளை
 தீர்த்து விடும்...
////////////////////////////////
வாய்ப்பு கிடைத்த
விதை துளிர் விட்டு
கன்றாகி
செடியாகி
விருட்சமாகி
பூவாகி
காயாகி
கணியாகி
தன் சுழற்சியை 
முடித்துவிட்டு
மீண்டும் விதயாகி அடுத்த
 வாய்ப்புக்காக,
 காத்திருக்கும்...
 விதை.
வாழ்க்கை ஒரு வட்டம்.   
 ///////////////////////////
வருமானம் செருப்பு போன்றது,
அளவு குறைந்தால் கடிக்கும்...!
அளவு அதிகரித்தால் நடக்க முடியாது..!
////////////////
நான்கு அறிவாலிகளின்
கூற்றுகளை
ஆறு முட்டாள்களால்
 தோர்க்கடிக்கபடுவதே 
 -ஜனனாயகம்
///////////////////////
முறையற்ற  பயிற்சியும்...
முழுமையில்லாத முயற்சியும்...
என்றும்  வெற்றியை
தராது...
முறையான பயிற்சியும்...
முழுமையான முயற்சியும்...   
என்றும் தோல்வியை தராது...!!
///////////////////////// 
அண்ணா சமாதி
மெரினாவுல இருக்கறது 
அண்ணாவுக்கே தெரியாது,
ஆனால்
எம்ஜிஆர், ஜெ, கலைஞர்
மூவருக்கும் தெரியும்.
எம்ஜிஆர் சமாதி 
மெரினாவில் இருப்பது
 அண்ணாவுக்கும் 
எம்ஜிஆருக்கும் தெரியாது,
ஆனால்
ஜெவுக்கும்
கலைஞருக்கும் தெரியும்.
ஜெ சமாதி
மெரினாவில் இருப்பது
 அண்ணா,எம்ஜிஆர்,ஜெ 
மூவருக்கும் தெரியாது,
ஆனால் கலைஞருக்கு
தெரியும்.
கலைஞர் சமாதி
மெரினாவில் இருப்பது 
நால்வருக்குமே தெரியாது...
இவ்வளவு தாங்க
இந்த உலக வாழ்க்கை.
///////////////////////////

நீங்கள் பிறரிடம்
இருந்து
' தனித்திருக்க
விரும்பினால்
'நேர்மையாகவும்,
 உண்மையாகவும்
'இருந்தால் போதுமானது..!
தானாகவே ஒதுக்கி
 வைக்கப்படுவீர்கள்!
............
நீ செய்த வினையும் செய்கின்ற
தீவினையும், ஓர் எதிரொலியைக்
காட்டாமல் மறையாது.
நீ விதைத்த விதைகளை நீயே
அறுவடை செய்த பின்னால்தான்
அந்த நிலத்தில் வேறு பயிர்களைப்
பயிரிட முடியும்.
..........
சந்தோஷம்,
வந்தர்
சீக்கிரம்
அனுபவிச்சிடணும்.
கஷ்டம் வந்தா
சீக்கிரம் அனுப்பி
வைச்சிடணும்...
.............
காத்திரு..
நடக்க இருப்பது
சரியான நேரத்தில்
சரியான இடத்தில்
சரியான காரணத்துடன்
நடக்கும்..!
புத்தர்
..........
வாழ்வில் எதிர்கொள்ளும்
சிக்கல்களைச் 
சிரித்துக்கொண்டே
கடந்துபோக முடிந்தால்
உலகில் உன்னைவிட
வலிமையானவர்
யாருமில்லை.
...........
உயிரும்,
நம்பிக்கையும்
ஒன்னுதான்
ஒருமுறை
பிரிந்தால்
அதுவே
கடைசி..!
............
#எதிர்பார்ப்பு


சந்திக்க பல உறவுகள்
வேண்டும்
#சந்தேகப்படாத உறவுகள்
வேண்டும்
#காலம்தோறும் தொடரும்
நட்பு வேண்டும்
#காலை வாரிவிடாத நண்பன்
வேண்டும்
#எதிர்பார்ப்பு ....
.............
எதுவும் கிடைத்து விட்டது 
என்று #பெருமை கொள்ளாதே.,
நீ அதை #இழப்பது 
மறு நொடியாகக் கூட  இருக்கலாம்....
.........   
#செவ்வாய் என்றால்
#சிவன் கோவில் ஞாபகம்

#வெள்ளி என்றால்
#முருகன் கோவில்
ஞாபகம்

#ஞாயிறு என்றால்
#ஆஞ்சநேயர் கோவில்
ஞாபகம்

இத்தனை ஞாபகம்
உள்ள மனிதர்களே

வரும் வழியில் தான்
#அனாதை இல்லம்
#முதியோர் இல்லம்
#ஊனமுற்றோர் இல்லம்
இருக்கின்றது

இந்த
ஆலயங்களுக்கும்
சென்று வாருங்கள்
அங்கேயும் #கடவுள்
இருக்கின்றன
.................
இருப்பவனுக்கு
இன்கம்டாக்ஸ் பிரச்சனை
இல்லாதவனுக்கு
இன்கம்மே பிரச்சனை
............
அடுத்தவனுக்கு பயந்தவன்
“ஆயுதத்தை”
கண்டுபிடித்தான்..
தனக்குத்தானே பயந்தவன்
"கடவுளை”
கண்டுபிடித்தான்..
.............
"அடக்க முடியாத கோபத்தை
'கட்டி வை... காலம்
உன்னிடம் வரும்...
அப்போது ஒருவனையும்
விடாதே
..........
வாழ்க்கையில்
வெற்றி பெற
"தகுதி" அவசியம்,
அவை
#த(தன்னம்பிக்கை)
#கு-(குறிக்கோள்)
#தி-(திட்டமிடல்)
.........
#செவ்வாய் என்றால்
#சிவன் கோவில் ஞாபகம்

#வெள்ளி என்றால்
#முருகன் கோவில்
ஞாபகம்

#ஞாயிறு என்றால்
#ஆஞ்சநேயர் கோவில்
ஞாபகம்

இத்தனை ஞாபகம்
உள்ள மனிதர்களே

வரும் வழியில் தான்
#அனாதை இல்லம்
#முதியோர் இல்லம்
#ஊனமுற்றோர் இல்லம்
இருக்கின்றது
இந்த
ஆலயங்களுக்கும்
சென்று வாருங்கள்
அங்கேயும் #கடவுள்
இருக்கின்றது
..........
நேசிக்கும் நூறு பேரை
 நேசிக்க துவங்கினாலே.....!!!
வெறுக்கும் நான்கு பேரை பற்றி 
யோசிக்க நேரமிருக்காது....!!!
...........
#காகங்கள் #


#அமாவாசை, #பிதுர்க்கடன்
என்றெல்லாம் சொல்லிக்
கரைந்து அழைக்கும் 
போதெல்லாம்.....,
"ஒரு வாய் சோறு....
உயிரோடு இருக்கையில்
 உருப்படியாகப் போடாத நீ
சாவுக்குப் பின் என்னிடம்
தேடுகிறாயே
உன் தாயை, தகப்பனை " எனக்
கேலி செய்கிறதே....!
#காகங்கள்.
..............
' கிளியை வைத்து 
சம்பாதிப்பவனுக்குத்
தான் தெரியும்,
அவனின் மூலதனம்
கிளி அல்ல ' மக்களின்
மூடத்தனம் என்று
.......................................
பேச நேரம் ' இல்லை 
என்றால் நம்பாதீர்கள்..! 
அவர்களின் முன்னுரிமை 
பட்டியலில் ' நீங்கள் இல்லை 
என்பதே உண்மை ...!
........
நீஉறங்கிக் கொண்டு இருந்தாலும் 
உனக்கு வருமானம்
 வரக்கூடிய வாய்ப்பை
 நீ ஏற்படுத்திக் |கொள்ளாவிட்டால் 
சாகும் வரை
 நீ உழைத்துக்கொண்டே 
இருக்க வேண்டும்..
................................
#பிடித்ததெல்லாம்
 கிடைத்து விட்டால்,
அது #கிடைத்த பின்
 #பிடிப்பதில்லை…
#யாருக்கும்....

#கிடைத்ததெல்லாம்
 #பிடித்து விட்டால்,
  அது #பிடித்த பின்
 #நிலைப்பதில்லை……
#எவருக்கும்....
,.........
மனிதனுக்குத்
 "#துணிச்சலைப்
"போல
உலகில்
உண்மையான
" #நண்பன்"
வேறு யாருமில்லை.
.........   
எடுக்கும் முடிவில்
 தெளிவாய் இரு.. 
முன் வைத்த கால்
 பின் வைக்காதே..?
பயந்தவனுக்கு 
சிறுகல்லும் பாறையாய்
 தெரியும்..?
துணிந்தவனுக்கு 
பாறையும் சிறுகல்லாய் 
தோன்றும்..?
...............
வாழ்க்கையில்
வேடிக்கையான
#மூன்று கட்டங்கள்

1)#டீனேஜ் பருவம்:
நேரம் உண்டு சக்தியுமுண்டு
ஆனால் பணம் இல்லை

2)#தொழில் புரியும் காலம்:
பணம் உண்டு,சக்தி உண்டு
ஆனால் நேரமிருக்காது

3)#வயோதிபபருவம்:
பணம் உண்டு,நேரம் உண்டு
ஆனால் சக்தி இருக்காது
இதான் வாழ்கை.ஒன்றை
தரும்போது
இன்னொன்றை எடுக்கும்
.........  .....
வேலை செய்ய தெரிந்தவர்கள் 
'சம்பளம் வாங்குகிறார்கள் ..!!!!!
 '" யாருக்கு" வேலை செய்ய 'வேண்டும்
 என தெரிந்தவர்கள் 'பதவி 
உயர்வோடு அதிக 
'சம்பளம் வாங்குகிறார்கள் ..!!!!!!
..............
மாத‌மொருமுறை 
பிற‌ந்த‌ தேதியும்

ஒரு நாளைக்கு 
இருமுறை பிற‌ந்த‌ நேர‌மும்

ஒரு ம‌ணிக்கு
ஒரு முறை பிற‌ந்த‌ நிமிட‌மும்

ஒரு நிமிட‌த்திற்கொருமுறை 
பிற‌ந்த‌ வினாடியும் வ‌ரும்போது
ஆண்டிற்கு
ஒரு முறை ம‌ட்டும் பிற‌ந்த‌ நாளை 
கொண்ட‌டுவ‌தேன்?

ஆங்கில‌ப்
புத்தாண்டை கொண்டாடிவிட்டு..
அவ‌ர‌வ‌ர்
மொழியிலும் புத்தாண்டு கொண்டாட்ட‌ம்..

ஆண்டு ம‌ட்டுமா புதிதாய் பிற‌க்கிற‌து?
மாத‌மும், நாட்க‌ளும், 
ஏன் ஒவ்வொரு வினாடியும் புதிதுதானே?

எவ‌ரோ ஒருவ‌ர் ப‌ழ‌க்கிய‌ ப‌ழ‌க்க‌த்தை
எவ‌ரோ ஒருவ‌ர் செய்கின்ற‌ செய‌ல்க‌ளை
க‌ண்ணை மூடிக்கொண்டு க‌டைபிடிக்காதீர்..

விரைய‌ம்
செய்த‌ ஒவ்வொரு வினாடியையும்..
விலை கொடுத்தாலும் 
மீட்க முடியாது

சிந்தித்து
பார்த்து சிலை
போல‌ நிற்காம‌ல்
சிறித‌ள‌வு நேர‌த்தையும்
 சிற‌ப்பாக‌ செல‌வு செய்தால்

சிக‌ர‌த்தை
நோக்கி சிற‌க‌டித்து ப‌ற‌க்க‌லாம்
............
ஒரு செயலைத் 
தொடங்குவதற்கு
 "நோக்கம்" தேவை ஆனால்
 அச்செயலைத் தொடர்ச்சியாக 
செய்ய "ஊக்கம்"  தேவை.
...............
கட்டளை இடுவதை
விட செய்து காட்டுவதே
 தலைவனுக்கு அழகு...
...........

#நேற்று என்பதை
 திருத்த முடியாது...
#நாளை வர உள்ளதையும்
 மாற்ற முடியாது...
 முயன்றால்
#இன்றை மட்டுமே 
மகிழ்ந்திட முடியும்...
............
#சொத்து இருக்குதுனு 
சொல்லுறதுக்கும்...

#சொந்த உழைப்பு 
இருக்குதுனு
 சொல்லுறதுக்கும் ....

நிறையா வித்தியாசம்
 உண்டு....

சொந்த உழைப்பில்
 வாழ்வோமே என்றும்..
.....................
ஓட முடிவெடுத்த பின்னே
ஓய்வுக்கெல்லாம் 
இடமில்லை
தாண்ட நினைத்த 
பின்னே #வெற்றியை
எட்டுவதைத் தவிர 
வழியில்லை..!!
................
பென்சில் கற்றுக்கொடுப்பது
 ஒன்றுதான்
#கூர்மையாக இரு
இல்லை என்றால் 
#சீவி விடுவார்கள்...
............
மெதுவாகச் செல்பவன்
 பத்திரமாக செல்கிறான்; 
பத்திரமாக செல்பவன் '
அதிக தூரம் செல்கிறான்.
.............
குறையை தன்னிடம்
 தேடுபவன் #தெளிவடைகிறான்..!!
குறைகளை பிறரிடம்
 தேடுபவன் #களங்கப்படுகிறான்..!!
............
#சுமைகளை கண்டு நீ
துவண்டு விடாதே ..!!
இந்த உலகத்தை #சுமக்கும்
பூமியே உன் காலடியில்தான் ..!!
.................... 
ஓட முடிவெடுத்த பின்னே
ஓய்வுக்கெல்லாம் இடமில்லை
தாண்ட நினைத்த பின்னே 
#வெற்றியை
எட்டுவதைத் தவிர 
வழியில்லை..!!
................
பந்தயக் குதிரை'ஓடும் போது 
ஓடுதளம் அருகிலுள்ள
'புல்லையோ 
கொள்ளையோ
"பார்ப்பதில்லை ..
ஏனெனில்.. அது தன்
 வெற்றிஇலக்கை 
மட்டுமேமனதில் 
கொண்டு ஓடுகின்றது..!
.............
'எல்லாம் தெரியும் என்று'நினைப்பவரை
 விட'தெரியாது என்று நினைப்பவரே
'அதிக விடயங்களை'தெரிந்து
 வைத்துள்ளனர்
.'தெரியும் என்பவரின் 
தேடல்முடிவடைகிறது
.'தெரியாது என்பவரின் 
தேடல்|தொடர்ந்து செல்கின்றது..
-----------------------------.