Monday, November 23, 2015

தமிழர்கள் -காலத்தை வகுத்த விதம்

தமிழர்கள் காலத்தை வகுத்த விதம் 
பிரம்மிப்பானது. தமிழர்கள் இயற்கையை
 ஆதாரமாகக் கொண்டு காலத்தைப்
 பிரித்தார்கள். ஒரு நாளைக்கூட 
ஆறு சிறு பொழுதுகளாக பிரித்து 
வைத்திருந்தார்கள். 
1. வைகறை
2. காலை
3. நண்பகல்
4. எற்பாடு
5. மாலை
6. யாமம்

என்று அவற்றை அழைத்தார்கள். 
அது மட்டுமல்ல, அந்த ஆறு சிறு 
பொழுதுகளின் தொகுப்பையும் 
அறுபது நாழிகைகளாகப் பகுத்துக் 
கணக்கிட்டார்கள். அதாவது ஒரு நாளில் 
ஆறு சிறுபொழுதுகள் உள்ளன. அந்த ஆறு
 சிறு பொழுதுகள் கழிவதற்கு அறுபது 
நாழிகைகள் எடுக்கின்றன என்று தமிழர்கள் 
பண்டைக் காலத்தில் கணக்கிட்டார்கள்.
 ஒரு நாழிகை என்பது தற்போதைய 
24 நிமிடங்களைக் கொண்டதாகும்.

அதாவது பண்டைக் காலத் தமிழர்களது  
ஒரு நாட் பொழுதின் அறுபது நாழிகைகள் 
என்பன தற்போதைய கணக்கீடான
 1440 நிமிடங்களோடு, அதாவது
 24 மணிநேரத்தோடு அச்சாகப் 
பொருந்துகின்றன. தமிழர்கள் ஒரு நாள் 
பொழுதை, தற்போதைய
 நவீன காலத்தையும் விட, அன்றே 
மிக நுட்பமாகக் கணித்து 
வைத்திருந்தார்கள் என்பதே 
உண்மையுமாகும்.
*******

No comments:

Post a Comment