Thursday, January 1, 2015

கடி ஜோக்



பெரிய துணிக்கடை அதிபரா இருந்தாலும், 
அவருக்குப் பிறக்கிற குழந்தை என்னமோ 
 அம்மணமா தான் இருக்கும்.2. அதிக மார்க்
 வாங்கி மாநிலத்திலேயே முதல் 
மாணவனா வந்தாலும், ஆம்லெட்
 சாப்பிடணும்னு ஆசைப்பட்டால் 
முட்டை வாங்கித்தான் ஆகணும்....3. 
என்னதான் இட்லி மல்லிகைப்பூ 
மாதிரி இருந்தாலும் அதை தலையில் 
வச்சிக்க முடியாது...4. ஒரு பெண் எவ்வளவு
 சிவப்பாக இருந்தாலும், அவங்க நிழல் 
கருப்பாகத்தான் இருக்கும்.5. பொங்கலுக்கு
 மட்டும் தான் அரசு விடுமுறை. 
ஆனால் இட்லி தோசைக்கு எல்லாம் 
விடுமுறை விடுவதில்லையே ஏன்....?
6. என்னதான் நீ மாடா உழைச்சாலும் உனக்கு
 கொம்பு முளைக்காது.7. குச்சி மிட்டாய்ல குச்சி
 இருக்கும். பல்லி மிட்டாய்ல பல்லி இருக்காதுப்பா....
8. என்னதான் அரசியல்வாதிங்க கட்சி 
தாவினாலும்.... அவங்களுக்கு வால் முளைக்காது.
...9. பிளேன் என்னதான் உயர உயர பறந்தாலும்.... 
பெட்ரோல் போட கீழே வந்துதான் ஆகணும்.....
10. என்னதான் ஒருத்தருக்குத் தலைகனம் 
இருந்தாலும்....அது எத்தனை கிலோனு எடை
போட்டுபார்க்க முடியாது....11. கோழிக்கு கோடி
 கணக்குல தீனி வாங்கி போட்டாலும் அது 
முட்டைதான் போடும்... நூத்துக்கு நூறு 
எல்லாம் போடாது...12. வாழ்க்கைக்கும் 
வழுக்கைக்கும் ஒரு வித்தியாசம்....
ஒன்னுமே இல்லாத வாழ்க்கை போர் அடிக்கும்.
... ஒன்னுமே இல்லாத வழுக்கை கிளார் 
அடிக்கும்.13. என்னதான் நெருப்புக் கோழியா 
இருந்தாலும்....அதனால் அவிச்ச முட்டை போட
 முடியாது.14. ஒரு சிற்பி உளியால கல்லுல
 அடிச்சா அது கலை. உளியால நாம சிற்பியை
அடிச்சா அது கொலை.15. சும்மா இருக்கிறவன், 
சும்மா இல்லாம, சும்மா இருக்கிறவங்கள,
 சும்மா சும்மா கிண்டல் பண்ணா.... சும்மா 
இருக்கிறவங்க, சும்மா சும்மா கிண்டல் 
பண்றவன, சும்மா விடமாட்டாங்கன்னு 
சும்மா சொல்றேன்


கடி தத்துவங்கள்....
1) தண்ணியில கப்பல் போனா ஜாலி
கப்பல்ல தண்ணி போனா காலி!
2) ஈஸி சேர்ல உட்கார்ந்து பரீட்சை 
எழுதினாலும்
சரியா படிக்கலைன்னா பெயில்தான்
 ஆகனும்!
3) காப்பி பொடியில் காப்பி தயாரிக்கலாம்....
இட்லி பொடியில் இட்லி தயாரிக்க முடியுமா?
4) யானை மேல நாம உட்கார்ந்தா சவாரி!
நம்ம மேல யானை உட்கார்ந்தா ஒப்பாரி!
5) தினமும் காலண்டரைக் கிழிக்கிறது
பெரிய விஷயமில்லை, ஒவ்வொரு நாளும்
நாம் என்னத்தைக் கிழிச்சோம்கிறது தான்
பெரிய விஷயம்....
6) என்னதான் ரெண்டு காது இருந்தாலும்,
நாம ஒண்ணுன்னு சொன்னா,
ஒண்ணுன்னு தான் கேட்கும்.
7) பல்லு வலின்னா பல்ல பிடுங்கலாம்............
கண்ணு வலின்னா கண்ண பிடுங்க முடியுமா?
8) பஸ்சு மேலே நாம ஏறலாம்...தப்பில்ல...
பஸ்சு நம்ம மேல ஏறினால்....நாம தப்புவமா...???
9) என் ஜீனியரிங் காலேஜில் 
மெடிக்கல் லீவு எடுக்கலாம்.
மெடிக்கல் காலேஜில் என் ஜீனியரிங் 
லீவு எடுக்க முடியுமா?
10) நம்ம உடம்பு முழுவதும்தான் 'செல்' 
இருக்கு.
ஆனா அதுக்குன்னு ஒரு 'சிம் கார்டு' 
கிடைக்குமா?
11) எறும்பு நினைச்சா
யார் காதை வேணும்னாலும்
கடிக்கலாம்.
யார் நினைச்சாலும்
எறும்பு காதை
கடிக்க முடியுமா?
12) கண்ணா தண்ணீ சூடா இருந்தாலும் 
சில்லுன்னு இருந்தாலும் நெருப்பை 
அணைக்கத்தான் செய்யும் தெரிஞ்சுக்க
எண்ணை சூடா இருந்தாலும் சில்லுன்னு
 இருந்தாலும் நெருப்பை வளர்க்கத்தான் 
செய்யும் புரிஞ்சுக்க
13) டிக்கெட் வாங்கிட்டு
உள்ள போனா அது சினிமாத் தியேட்டர்.
உள்ளே போயிட்டு டிக்கெட் வாங்கினா
அது ஆபரேஷன் தியேட்டர்.
14) தங்கச் செயினை உருக்கினா 
தங்கம் வரும்.
வெள்ளிச் செயினை உருக்கினா
வெள்ளி வரும்.
சைக்கிள் செயினை உருக்கினா 
சைக்கிள் வருமா?

No comments:

Post a Comment